-
-7%
சிறுவர் பாடல்.
0Original price was: ₨ 405.0.₨ 375.0Current price is: ₨ 375.0.பன்மொழிப்புலவர் த. கனகரத்தினம் கல்வி வெளியீட்டு திணைக்களத்தில் பல வருடங்களாகத் தமிழ்ப் பாடநூற் பகுதி எழுத்தாளராக, பிரதான பதிப்பாசிரியராக, தலைவராக கடமையாற்றி பல பாடநூல்களை வெளியிட்ட இவரின் நூல்கள் இலங்கை சாகித்திய மண்டலம், இலங்கை அபிவிருத்தி சபை, இலங்கை அரச கருமமொழித் திணைக்களம் ஆகியவற்றின் பரிசிகளையும் பாராட்டுகளையும் பெற்றவை.ஜாதகக் கதைகள், தாய்லாந்து சிறுவர்களின் நாட்டார் கதைகள் ஆகியவை இவரது ஏனைய சிறுவருக்கான ஆக்கங்களாகும். -
-10%
சூஃபி கதைகள்.
0Original price was: ₨ 2,000.0.₨ 1,800.0Current price is: ₨ 1,800.0.மூச்சடக்கி மூழ்குபவர்கள் மட்டும்தான் இத்தகைய நல் முத்துக்களை அள்ளிக் கொண்டு வரமுடியும். கடலில் இறங்கித் தேடுபவர்கள்தான் அதை அடைய முடியும். தேடுங்கள், கிடைக்கும் என்பது கூட ஒரு வகையிலான சாகாவரம் பெற்ற சூஃபி மொழிதான்.ஒவ்வொருவருக்குள்ளும் சூஃபி தன்மை உண்டு என்கிறது சூஃபியிஸம். எனினும் சிலரே அதனை வெளிக்கொணர்ந்து சூஃபிகள் ஆகி விடுகின்றனர். மற்றவர்கள் மூடப்பட்ட விதைகளாக, முளைக்காமலேயே இருந்து விடுகின்றனர். மனித வாழ்வின் முழுமைக்கு சூஃபிகள் ஆற்றிய தொண்டுகள் மகத்தானவை. எனினும் கடலின் அடியில் கிடக்கும் முத்துக்கள் போல் அவை மக்களால் உணரப்படாமலேயே உள்ளன.சூஃபிகளின் வாழ்க்கை.சூஃபிகளின் கதைகள், சூஃபி மொழிகள் இவற்றில் கூறப்படாத எதுவும் எந்தச் சமயங்களிலும் இல்லை. நீதிக் கதைகளில் சொல்லப்படுவதுபோல் இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் என்பது போன்ற நேரிடையான விளக்கங்கள் எதுவும் அதில் சொல்லப்பட்டிருக்காது. ‘பொல்லாத உலகம் இது. இதில் அறிவாளிக்கும் அபராதம்தான். முட்டாளுக்கும் அபராதம்தான்’ என்கிறார்.சூஃபி ஞானி சா அதி. ‘உலக வாழ்க்கை துன்பமயமானது’ என்கிறார் புத்தர்.சூஃபி ஞானம் விவரிப்புக்களுக்கு அப்பாற்பட்டது. நீ எந்தப் பாதையில் சென்றாலும் அதிலேயே ஈடுபாட்டுடன் தொடர்ந்து பயணித்தால் இறுதியை அடைய முடியும் என்கிறது சூஃபி. யார் எந்த வழியில் பயணித்தாலும் முடிவில் அங்குதான் சென்று சேருவார்கள் என்கிறது அது. -
-10%
சூஃபியிசம் என்றால் என்ன?
0Original price was: ₨ 660.0.₨ 594.0Current price is: ₨ 594.0.இந்த நூலின் தலைப்பே ஒரு கேள்வியாக அமைந்துள்ளது. மேற்குலகில் அந்தக் கேள்விக்கு அண்மைக் காலத்தில் ஒருவித போலித்தனமான, சந்தேகத்திற்குரிய சில பதில்கள் தரப்பட்டுள்ளன. மட்டுமின்றி, சூஃபியிசம் குறித்த ஆர்வமும் அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. எனவே, ஒரு நம்பத்தகுந்த அறிமுக நூலின் தேவை மென்மேலும் அதிகரித்துள்ளது. அத்தகு அறிமுக நூலின் தேவையை இந்த நூல் பூர்த்தி செய்கிறது. அறிமுக நூல் எனும்போது, அதனை வாசிப்பதற்குச் சிறப்பு அறிவுப் பின்னணி எதுவும் தேவையாக இருப்பதில்லை. அதுபோலவே, நம்பத்தகுந்த நூல் எனும் போது, அது உண்மையின் ஆழத்தைச் சமரசப்படுத்தும் அளவுக்கு எளிமைப்படுத்தப்படுவதும் இல்லை.
-
-10%
சூழலியல் மேலாண்மை.
0Original price was: ₨ 600.0.₨ 540.0Current price is: ₨ 540.0.உயிர் வாழ்க்கையின் பரவல் பற்றியும், உயிரினங்களுக்கும் அவற்றின் இயற்கைச் சூழலுக்கும் இடையிலான இடைவினைகள் பற்றியும் அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்யும் துறையாகும். ஒரு உயிரினத்தின் சூழல் என்பது சூரிய ஒளி, காலநிலை, நிலவியல் அம்சங்கள் போன்ற உயிரற்ற காரணிகளின் ஒட்டுமொத்த அளவான இயற்பியல் இயல்புகளையும்; குறிப்பிட்ட வாழிடத்தில் வாழும் பிற உயிரினங்களைக் கொண்ட உயிர்சார் சூழல் மண்டலத்தையும் (ecosystem) உள்ளடக்கியதாகும்.
-
-10%
சென்றுபோன நாட்கள்.
0Original price was: ₨ 760.0.₨ 684.0Current price is: ₨ 684.0.‘கதை சொல்வதில் சமர்த்தர்’ என்று புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர் முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு (1886-1935). பாரதி பற்றி விரிவான நினைவுக் குறிப்புகளை முதன் முதலில் எழுதியவர் என்று பாரதி அன்பர்கள் இவரை நினைவுகூர்வார்கள். 1928இல் பாரதி நூல்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது ‘சென்றுபோன நாட்கள்’ தொடரில் இவர் பாரதி பற்றி எழுதிய நெடும் கட்டுரை ஒரு ‘கிளாசிக்’ ஆகும். 1926-1934இல் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு எழுதிய ‘சென்றுபோன நாட்கள்’ பாரதி உட்படப் பதினெட்டுப் பழம் பத்திரிகையாளர்களை நினைவுகூர்கிறது. முதல் முறையாக இப்பொழுது நூலாக்கம் பெறுகிறது. துல்லியமான பல புதிய தகவல்கள், தனித்துவமான கண்ணோட்டம், சுவையான நடை – இவை இந்த நூலின் சிறப்புகள். பல்லாண்டுக்காலப் படைப்பூக்கம் மிகுந்த ஆராய்ச்சியின் விளைவாக இந்நூலைத் தேடிப் பதிப்பித்திருக்கும் ஆ.இரா. வேங்கடாசலபதி, துப்பறியும் கதை போல் விரியும் ஒரு நீண்ட முன்னுரையினையும் எழுதியுள்ளார்.
-
-9%
சொல்லாததும் உண்மை.
0Original price was: ₨ 1,375.0.₨ 1,250.0Current price is: ₨ 1,250.0.எழுத்தாக்கம் : த. செ. ஞானவேல்என் வாழ்வில் நான் நேருக்கு நேர் சந்திச்ச உண்மைகளை அரிதாரம் பூசாமல் பேசியிருக்கேன். சில உண்மைகள், கரண்ட் கம்பியில் கைவச்ச மாதிரி, என்னையே சுளீர் னு திருப்பி அடிச்சிருக்கு. சில உண்கள், ஓவியன் கையில் கிடைத்த தூரிகை மாதிரி அற்புதமாகப் பதிவாகி இருக்கு. இரண்டும் வாழவேண்டிய அனுபவங்கள்தான். -
-9%
ஞானப் பள்ளு.
0Original price was: ₨ 1,100.0.₨ 1,000.0Current price is: ₨ 1,000.0.ஞானப்பள்ளின் மூலப்பதிப்பில் இடம் பெற்றுள்ளவாறே அப்பதிப்பு இடம் பெற்றதோடு, நூலில் இடைச்செருகல்கள் எதுவும் நுழையாதிருப்பதும் இதன் சிறப்பாகும்.பள்ளு இல்க்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, பட்டியல் நூல்கள் கூறும் பள்ளு இலக்கிய இலக்கணம், ஞானப்பள்ளின் அமைப்புமுறை, பள்ளு இலக்கிய வளர்ச்சி முதலான பல்வேறு விடயங்களை ஆராய்ந்து பேராசிரியர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. -
-10%
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு.
0Original price was: ₨ 840.0.₨ 756.0Current price is: ₨ 756.0.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஒருபுறமிருக்க, அவர்கள் சுயமரியாதையைப் பாதிக்கும் எத்தனை எத்தனையோ செயல்களில் வருணாசிரம தர்மவெறியர்கள் எங்குப்பார்த்தாலும் ஈடுபட்டு வருகின்றனர். இவைகளுக்கும் பொருளாதாரக் காரணங்கள் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. எனினும், பொருளாதார அமைப்பை மாற்றும்வரை கைகட்டி சும்மா இருக்கலாகாது. இவைகளையும் எதிர்த்துப் போராடவேண்டும்.டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகும். அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும். -
-20%
தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும். (பொ.ஆ.800-1500)
0Original price was: ₨ 500.0.₨ 400.0Current price is: ₨ 400.0.தமிழ்நாட்டில் தீண்டாதார்’, ” புதிய ஓம்படைக்கிளவிகளின் எழுகையும் சாதி உருவாக்கமும்’ என்ற நொபொரு கராஷிமாவின் இரு கட்டுரைகளும் , “சோழர் காலத்தில் சமூக மாற்றத்தின் சில தன்மைகள்’, “பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் ஓர் உழவர் கிளர்ச்சி’ என்ற எ.சுப்பராயலுவின் இரு கட்டுரைகளும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.“வரலாற்று ஆய்வுகள் பண்டைய காலம் குறித்து கவனம் செலுத்தினாலும், அவை தொடக்கப்புள்ளியாக நிகழ்காலத்தைக் கொள்ள வேண்டும்’ என்ற அடிப்படையில் இந்நூலில் கட்டுரைகள் சோழர்கால வரலாற்றை ஆராய்கின்றன.முதலாம் ராஜராஜன் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் சாதிமுறையில் கீழ்நிலையில் வைக்கப்பட்டிருந்த மக்கள் வாழ்ந்த இடங்களைப் பற்றிய குறிப்புகள், சாதிப் படிநிலை பற்றிய குறிப்புகள் காணப்படுவது, திருச்சி மாவட்டம் திருப்பாலத்துறையில் உள்ள ஒரு கல்வெட்டில் அடிமைமுறை இருந்ததற்கான சான்றுகள் இருப்பது ஆகியவை இந்நூலில் கூறப்பட்டுள்ளன. -
-9%
தமிழ் மொழி.
0Original price was: ₨ 1,895.0.₨ 1,725.0Current price is: ₨ 1,725.0.தமிழின் சிறப்பை அறிந்துகொள்ள சமற்கிருத மொழியோடு தமிழ் ஒப்பிடப்பட்டு தமிழ் மொழிக்கு இணையான சிறப்பு சமற்கிருத மொழிக்கு இல்லை என்பது இந்நூலில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வட இந்தியாவில் கி.மு. 187 க்குப்பின் ஏற்பட்ட சமூக அரசியல் மாற்றங்களின் விளைவாகத்தான் பாணினியின் இலக்கணம் தோன்றியது என்பதும் இங்கு கூறப்பட்டுள்ளது. தமிழ்ச்சமூகம், பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட ஒரு வளர்ச்சியடைந்த நகரச் சமூகம் என்பதை தமிழ் அறிவு மரபின் தந்தையாகக் கருதப்படும் தொல்கபிலரின் எண்ணிய மெய்யியல் குறித்தான விளக்கங்கள் மூலம் இங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
-8%
தம்பி தங்கைக்கு…..
0Original price was: ₨ 300.0.₨ 275.0Current price is: ₨ 275.0.இந்தக் காலத்தில் கதைகள், கட்டுரைகள் எழுதுபவர்கள் பொருத்தமான சொற்களைத் தேர்ந்து எழுத முடிவதில்லை. மிகவும் மலிந்த புழக்கத்தால் தோய்ந்து போன சொற்களையே உபயோகிக்கிறார்கள். இப்படியான சொற்கள் ஆங்கிலத்தில் Cliches என்று கூறப்படும்.பொருத்தமான புதுமையான சொற்களை ஒருவர் எழுத்தில் உபயோகிக்காததற்கு காரணங்களாகச் சோம்பல், அவதி, கற்பனைக் குறைவு, அவருடைய சொற்களஞ்சியத்தில் வெறுமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். -
-9%
தராக்கி. ஈழத் தமிழ் ஊடக முன்னோடி.
0Original price was: ₨ 880.0.₨ 800.0Current price is: ₨ 800.0.சிவராமின் சிந்தனைகள் எதிர்வு கூறல்கள், அரசியல் முன்னெடுப்புக்கள் போன்றவை அக்காலத்தைப் போன்றே இன்றைய காலத்துக்கும் பொருத்தமானவையாக உள்ளன . அதன் ஒரு எடுத்துக்காட்டே இந்நூல்.