-
-9%
யாழ்ப்பாணச் சரித்திரம். (ஆங்கிலேயர் காலம்)
0ஆரம்பகாலம் தொடங்கி ஒல்லாந்தர் காலம் வரையிலான யாழ்ப்பாண வரலாற்றை விபரித்து ‘யாழ்ப்பாணச் சரித்திரம்’ என்ற முதலியார் செ.இராசநாயகம் அவர்களால் எழுதப்பட்ட புகழ்பெற்ற நூலினைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பிரதேசத்தின் ஆங்கிலக்கால வரலாற்றை விபரிப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. வடமாகாண ஏசண்டர்கள், தலைமைக்காரர், வரிகள், நீதி பரிபாலனம், நாணயங்கள், ஏற்றுமதி – இறக்குமதி, ஊழியம், முத்துச்சலாபம், புகையிலை, புடைவை நெய்தல், தபால், பகிரங்க வீதிகள், சட்டசபைத் தமிழ்ப் பிரதிநிதிகள், இந்தியக் கூலிகள், யாழ்ப்பாணச் சுகாதாரம் போன்ற 37 விடயங்களினூடாக யாழ்ப்பாணத்தின் ஆங்கிலகால வரலாறு இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
-
-8%
யானைக்கு நிழலை வரையவில்லை.
0ஏ. நஸ்புள்ளாஹ்வின் கவிதைகளில் ஒருவகை வினோதங்கள் நிரம்பியிருக்கும் இதனை சரியாக புரிந்து கொண்ட வாசகன் கவிதையின் மாயமொழி அல்லது கனவு மொழி என இதனை அடையாளப்படுத்துவான். கற்பனைப் புனைவின் சிறந்த அடையாளமாக நாம் வாழும் உலசுத்தை சொல்ல முடியும். கடவுளின் மிக உயர்வான கற்பனையின் விளைவிலிருந்துதான் உலகம் இயற்கை மிக்க காலந்தோறும் மனிதன் வாழ விரும்பும் இடமாக உள்ளதை புரிந்து கொள்ள முடியும். ஏ.நஸ்புள்ளாஹ் தனது புனைவினை வாசகன் விரும்பும் வகையில் வேறுபட்ட கற்பனைகளாக இவரது கவிதைகளில் உடைத்துத் தருகின்றார்.
-
-8%
ரத்த சரிதம் ஃபலஸ்தீன் போராட்ட வரலாறு.
0வரலாறு உலகின் பல்வேறு சமூகங்களைக் குறித்து பதிவு செய்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த பண்பாடுகளை – நாகரிகங்களை – வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ள அரபு, யூத இனத்தவர்களான இஸ்மவேலருக்கும் – இஸ்ரவேலருக்கும் இடையே நடக்கும் மோதல்கள் ஃபலஸ்தீன் நிலங்களில் அன்று முதல் இன்று வரை காலம் காலமாக நடைபெற்று வருகின்றது. நிகழ்காலத்தில் ஃபலஸ்தீன் பிரச்சனை தேசிய பிரச்சனை மட்டும் அல்ல, அவர்களின் உரிமைப் போராகவும் கருத்தியல் யுத்தமாகவும் இருக்கின்றது.ஒரு சமூகம் பிறிதொரு சமூகத்தை எந்த நெறிமுறைகளையும் பின்பற்றாமல் அநியாயமாக ரத்தத்தை ஓட்டும் மாபெரும் அவலம் ஃபலஸ்தீன் நிலங்களில் தொடர்ந்து அரங்கேற்றப்படுகின்றது. அது குறித்த வரலாற்று செய்திகளும், தெளிவான பார்வைகளும் காலம்தோறும் புதிய தலைமுறைகளுக்குத் தொடர்ந்து அறிமுகம் செய்வது முக்கியப் பணியாகும்.ஃபலஸ்தீன் பற்றிய நூல்கள் தமிழில் ஆங்காங்கே சில தென்பட்டாலும், இந்நூல் அதில் இருந்து சற்று வித்தியாசப்படுகின்றது. 1897- ஆம் ஆண்டு தியோடர் ஹேர்ஸல் என்பவரால் சியோனிஸம் முறையாக அறிவிக்கப்பட்டது முதல் 2019 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் நடைபெற்ற காஸா இஸ்ரேல் மோதல் வரை முக்கியச் சம்பவங்களையும், அரசியல் பார்வைகளையும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் விளக்கப்பட்டு உள்ளது. -
-9%
ருசி பேதம்.
0நுகர்வுப் பயன்பாட்டில் புதிய அசைவியக்கமாக மாறிவரும் உணவுக்கலாச்சாரம் தேசங்களைக் கடந்து மொழிகளைத்த தாண்டி மக்களை ஒன்றிணைக்கிறது. இம்பீரியல் சினாவின் உணவுக் கலாச்சாரம் தொடங்கி மெக்காவின் அரபு எல்லைகளைத் தாண்டி விரிவடைந்து பாக்தாத் நகரத்தில் மையம் கொண்ட அரேபிய உணவுக் கலாச்சரம், ஐரோப்பிய தொழில் புரட்சியால் ஏற்பட்ட உணவுக் கலாச்சாரம் மாற்றங்களில் பசியும் ருசியுமாக பயணித்த பாதைகளை விவரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.
-
-9%
வ.உ.சி.யும் காந்தியும். 347 ரூபாய் 12 அணா.
0கப்பலோட்டிச் சிறை சென்ற வ.உ.சி. வறிய நிலையிலிருந்தபோது அவருக்கு இந்தியத் தமிழர்கள் கைகொடுத்தார்களோ இல்லையோ தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பேருதவி புரிந்தனர். காந்தி வழியாகவும் இந்தப் பொருளுதவி 1916இல் வந்துசேர்ந்தது. இதன் தொடர்பில் ஒரு விவாதம் பல காலமாக நிகழ்ந்துவந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், வ.உ.சி.க்குப் பணம் தராமல் காந்தி ஏமாற்றிவிட்டார் என்பதே அதன் சாரம். இதுவரை வெளிவராத வ.உ.சி. காந்தி கடிதப் போக்குவரத்தின் அடிப்படையில் இந்த விவாதத்திற்கு இந்நூல் முற்றுப்புள்ளி வைக்கிறது. தென்னாப்பிரிக்கத் தமிழரின் பின்புலம், அவர்களுக்கும் வ.உ.சி.க்குமான தொடர்பு ஆகியவற்றையும் இந்நூல் விவரிக்கிறது. வ.உ.சி.யின் மனைவி மீனாட்சி அம்மாளின் தனித்தன்மையான ஆளுமை முதல்முறையாகத் துலக்கம்பெறுகிறது. உணர்ச்சிக் கொந்தளிப்பும் அறிவுசார் சுவாரசியமும் மிகுந்த இந்நூலை, வ.உ.சி. எழுதிய எட்டும் காந்தி எழுதிய பதினொன்றுமாக மொத்தம் பத்தொன்பது கடிதங்கள் அணிசெய்கின்றன.
-
-9%
வசந்தகால மேகம்.
0வாசிப்பு உலகில் உள்ளவர்கள் லஷ்மியின் ஒரு நாவலையாவது வாசித்திருப்போம். பெண்களின் பிரச்சனைகள், கஷ்டங்கள், போராட்டங்கள், சாதனைகள் பற்றியதான பிரபலமானர்களின் கட்டுரைகள், வழங்கிய ஆலோசனைகள், எழுதிய நாவல்கள் எத்தனையோ இருக்கலாம். ஆனால் பெண்களின் உணர்வுகளை குடும்பசூழ்நிலையோடு சேர்த்து ஒவ்வோர் கதைகளம், ஒவ்வோர் உத்தி என்று அழகாக கொண்டு செல்வதே லஷ்மியின் தனிச்சிறப்பு.
-
-9%
வசந்தகாலக் குற்றங்கள்.
0ஆபாச ஃபோன்கால் அதைத் தொடர்ந்து குழந்தைக் கடத்தல், நகைக்கடை கொள்ளை, இன்னும் ஒரு காதல் புகார் என மூன்று குற்றங்கள் ஒரே சமயத்தில் கமிஷனர் ஆபீசை முற்றுகையிடுகின்றன. குற்ற நடவடிக்கைகள், போலீஸ் துரத்தல்கள் என்று பங்களூர் சூழலில் எழுதப்பட்ட இந்த ‘வசந்த காலக் குற்றங்கள்’ எழுதுவதற்காகவே சுஜாதா உப்பார்பேட்டை காவல் நிலையத்தில் சில தினங்கள் இருந்து பார்த்திருக்கிறார்.
-
-9%
வரலாறு படைத்த வரலாறு.
0அசட்டுத்தனம் இல்லாத ஆனந்த உயர்வை எழுத்தின் மூலம் நாகூர் ரூமி விதைக்கிறார். ஆனந்த ஆன்ம முழுமைக்கு இவர் பேனா உழுது உணவளிக்கிறது. ‘வரலாறு படைத்த வரலாறு’ மகத்துவமிக்க மனிதகுல மனோரஞ்சிதங்களை நெஞ்சில் பதியம் போடுகிறது. உலகையே வலம் வந்த விநாயகரின் உணர்வை இந்த ஒற்றை புத்தக வாசிப்பு தருகிறது. ஒட்டுமொத்த நூலும் மானுடத்தின்மீது மகத்தான மதிப்பையும் மரியாதையையும் தோற்றுவிக்கிறது. எல்லா புத்தகங்களிலும் சில பக்கங்கள் இருப்பது வழக்கம். ஆனால் இவர் புத்தகத்தில் மட்டும் ஒவ்வொரு பக்கத்திலும் சில பல புத்தகங்கள் அடங்கி இருக்கின்றன.
-
-9%
வளர் தமிழ் கலைச்சொற்கள்.
0இத்தகய சிறப்பு மிக்க பணி மொழி வளர்ச்சிக்குப் பெரும் உந்துசக்தியாக் இருக்கும். அதேவேளை ஆங்கில மொழிக்கு ஒத்த முறையான கருத்துக்களை சிறப்பாகப் பிரதிபலிக்கும் தமிழ்க் கலைச்சொற்களையும், தற்போபோது தமிழ் மொழியில் பாவனையில் உள்ள தவறான சொற்பதங்களுக்கு மாற்றீடாகப் புதிய தமிழ்க் கலைச்சொற்களையும், உபயோகிக்க வேண்டும் என்றும், திருத்தப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தமது எழுத்துக்கள் மூலம் தெரிவித்து வருகிறார்.
-
-10%
வள்ளுவர் தமிழ் இலக்கணம் (4)
0வள்ளுவர் தமிழ் இலக்கணம் என்னும் இந்நூல் இளமாணவர்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு, மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் உதாரணங்கள் இளமாணவர்களுக்கு இலக்கய அறிவையும் உண்டாக்க வேண்டும் என்னும் நோக்குடன் முயன்று தொகுக்கப்பட்டுள்ளன.
-
-10%
வள்ளுவர் தமிழ் இலக்கணம் (5)
0வள்ளுவர் தமிழ் இலக்கணம் என்னும் இந்நூல் இளமாணவர்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு, மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் உதாரணங்கள் இளமாணவர்களுக்கு இலக்கய அறிவையும் உண்டாக்க வேண்டும் என்னும் நோக்குடன் முயன்று தொகுக்கப்பட்டுள்ளன.
-
-9%
வள்ளுவர் தமிழ் இலக்கணம் (6)
0வள்ளுவர் தமிழ் இலக்கணம் என்னும் இந்நூல் இளமாணவர்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு, மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் உதாரணங்கள் இளமாணவர்களுக்கு இலக்கய அறிவையும் உண்டாக்க வேண்டும் என்னும் நோக்குடன் முயன்று தொகுக்கப்பட்டுள்ளன.