-
-9%
அகாலத்தில் கரைந்த நிழல்.
0அவளைப் பொறுத்தளவில் நிறைவேறாத ஆசையாக அரைகுறையாகக் கட்டப்பட்டுள்ள வீட்டுடன் நிறைவு பெறுகிறது. பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தான் ஒருமுறை வெளிநாடு சென்று விட்டால், போதும் பின் அதுவே இரண்டாம், மூன்றாம் முறை எனத் தொடர்கிறது. பழக்கமும் பரீட்சயமும் பெற்று விடுகிறது. அதுவே சாகும் வரையான வாழ்வாகி விடுகிறதுவெளிநாட்டு வாழ்வின் சுகமும் குதூகலமும் வரையறுக்கப்பட்ட ஒரு சிலருக்கே வரமாக வாய்க்கிறது.’ -
-9%
அசோகனின் வைத்தியசாலை.
0மாமன்னர் அசோகர் மிருகங்களுக்காக ஒரு வைத்திய சாலையை அமைத்தார் என்பது வரலாறு. ஒரு அம்மையார் தர்மத்துக்காக அமைத்த மிருக வைத்தியசாலையில் பணிபுரியும் சிவாவின் அனுபங்களே இந்த நாவலின் உடல்.இந்த வாழ்க்கை மனிதர்களால் மட்டும் ஆனது அல்ல, மிருகங்களும் வாழ்க்கையின் பிரஜைகளே என்ற பார்வை. இன்னொன்று இங்கே மிருகங்கள் என சொல்லப்பட்டிருப்பவை மிருகங்கள்தானா என்ற எண்ணம். நோக்கிச் செலுத்துகிறது. அதுவே இந்நாவலின் அழகியலின் வெற்றி
-ஜெயமோகன்
-
-9%
அடித்தள மக்கள் வரலாறு.
0ஆ.சிவசுப்பிரமணியன் தமிழகத்தின் நன்கு அறியப்பட்ட மார்க்சியக் கருத்துநிலையாளர்; செயல்பாட்டாளர்; ஆய்வாளர், தமிழகத்தின் மிகச் சிறந்த, புகழ்பெற்ற நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர், சிக்கலான கோட்பாட்டு முட்டுச் சந்துகளில் நின்றுவிடாமல், தமிழகத்தின் மக்கள் இயக்கங்கள் முகம்கொடுக்கும் சிக்கல்களை மனதில்கொண்டு அவரது ஆய்வுப் பயணம் தொடர்ந்து செல்கின்றது. இப்படிப்பட்ட அவர் இந்நூல் மூலம் அடித்தள மக்கள் வரலாற்று ஆய்வுமுறையியலைத் தமிழக வரலாற்று எழுதியலுக்குக் கையாள்வதன் வழி புதிய வெளிச்சங்களைக் காட்டுகின்றார். இந்நூலில் எளியோர் வாழ்க்கையைப் புதிய சிந்தனை ஊற்றுகள் பொங்கும் தளங்களாகத் தரிசிக்க வைக்கின்றார். பிழைகளைக் களைந்து புதிய செம்மையான பதிப்பாக வரும் இந்நூல் தமிழக வரலாற்றைக் கற்க விரும்புவோர்க்கான அரிய பெட்டகம்..
-
-9%
அதர் இருள்.
0உக்ரேன்-ரஷ்ய போர் ஆரம்பித்து ஒரு மாதம் முடிந்தபோது எனது நண்பி சிசில் மூலம் லானாவைச் சந்தித்தேன். சிசிலின் நண்பர்களான வைத்திய இணையர் உக்ரேன் எல்லைக்கு சென்று லானாவையும் அவள் மகனையும் அழைத்து வந்து தங்கள் வீட்டில் வைத்திருக்கிறார்கள். குறுந்தொகையில் ஒரு பாட்டில் தன் மகள் காதலனோடு காட்டு வழியே சென்றதை எண்ணி தாய் ஏங்குகிறாள். கடும் பசியோடு புலிகள் பதுங்கி இருக்கும் அந்த காட்டுப் பாதையில் எப்படி அவள் போனாளோ என்று பதை பதைக்கிறது அவள் இதயம், இதை எழுதி முடிக்கும் போதும் கைபேசியைப் பார்க்கிறேன் லானாவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
-
-12%
அந்தோன் செகாவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்.
0அந்தோன் செகாவின் கதைகளைப் படிக்கையில், கூதிர்ப்பருவத்தின் கடைப் பகுதியில் சோகமான ‘நாளுக்குரிய உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன – காற்று தெளிந்து, இலையற்றகிளைகளை விரித்து நிற்கும் மரங்களது கூர்மையான உருவரை பளிச்செனத் தெரிகிறது. வீடுகள் ஒடுங்கிக்கொண்டு மனிதர்கள் சோர்ந்து ! போயிருக்கிறார்கள், தனிமையால் வாட்டமடைந்து, சலனமற்று, சக்தியிழந்து யாவும் விசித்திரமாய் இருக்கின்றன. ஆழமான நீலத் தொலைவுகள்வெறுமையாய் இருக்கின்றன, வெளிறிய வானத்துடன் கலந்து குளிரில் கெட்டியான சேறு மூடிய நிலத்தின் மீது அவை சோர்வு தரும் குளிர்மூச்சு விடுகின்றன. ஆனால் கூதிர் காலத்து வெயிலைப் போல் கதாசிரியரது சிந்தையானது – தடங்கள் பதிந்த பாதைகள் மீதும், கோணலான தெருக்கள் மீதும், சேறு படிந்த நெரிசலான வீடுகள்மீதும் திகழொளி வீசிக் காட்டுகிறது.
-
-9%
அபிவிருத்தியின் சமூகவியல்.
01. நவீனமாதல் கோட்பாடு.2. லத்தீன் அமெரிக்க அமைப்பியல் வாதம்.3. சார்பு கோட்பாடு.நூலில் எல்லாமாக எட்டுக் கட்டுரைகள் உள்ளன.நூலின் இருதி இருகட்டுரைகள் அபிவிருத்தியின் மாற்று சிந்தனைகளை விளக்குவன. மேற்குறித்த மூன்று வகைச் செய்நெறிகளில் இருந்து வேறுபட்ட சிந்தனைகளைக் கூறுவன. -
-9%
அம்பேத்கர் கடிதங்கள்.
0அம்பேத்கரின் நேர்மையை, சமூக நீதிக்கான இச்சையை, மனிதர்களைப் படிக்கும் கலையை, அறம்கொண்ட சமூகக் கட்டமைப்பின் மீதான விருப்பை, புலமையை, விவேகத்தை, மனிதநேயச் சமயக் கொள்கையை, எல்லாவற்றிற்கும் மேலாக எளிமையான மனிதர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம் இவ்வுலகை மறுகட்டமைப்புச் செய்யும் அவரது நோக்கத்தை இக்கடிதங்களில் காண முடியும். தீவிரச் செயல்பாட்டில் ஈடுபடும் வலிமையின் இதயம் கொண்டவரை, ஒடுக்கப்பட்டோரின் விடுதலை வேண்டுபவரை, மாயைகளை உடைப்பவரை, நகைச்சுவை உணர்வும் பகடியும் கைவரப்பெற்ற மனிதரைக் காணமுடியும் இத்தொகுப்பில்.
-
-1%
அம்மா வந்தாள்.
0‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர்களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.
-
-9%
அயல் பெண்களின் கதைகள்.
0கனவில் மிக அலங்காரமான பளபளக்கும் உடையணிந்து வரும் வாழ்வு சட்டென் கையில் விலங்குகளையும் அணிவிப்பதாக கத்தியானா தன் கதைகளில் சொல்வதுபோல தான் பலரின் வாழ்வும் இங்கு அமைந்திருக்கிறது.
-
-9%
அயல் மகரந்தச் சேர்க்கை (அறிமுகங்கள் – படைப்புகள் – நேர்காணல்கள்)
0வழக்கமான தமிழ் புத்தகங்களிலிருந்து இத்தொகுப்பு மாறுபட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் நான் தேடித்தேடி வாங்க நினைக்கும் ஒரு புத்தகமாக இந்த தமிழ் புத்தகம் அமைந்திருக்கிறது. உண்மையின் சக்தியை, உண்மையின் புரிதலை, உண்மையான பார்வைகளை இந்தப் புத்தகம் நமது கவனத்துக்கு கொண்டு வருகிறது. இத்தொகுப்பில் உள்ள நேர்காணல்கள் படைப்புக்கள் அனைத்துமே அந்த இலக்கியவாதிகளின் சத்திய பிரமாண வாக்குமூலங்கள்.-இந்திரன் -
-9%
அரசியலும் சிவில் சமூகமும்.
0அரசியலும் சிவில் சமூகமும் என்கின்ற இந்நூலானது சிவில் சமூகமும் நல்லாட்சியும், இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்கள் ஒரு பார்வை, அரசியல் பங்குபற்றல், உலக பொருளாதாரம்: ஒரு அரசியல் பார்வை, உலக பொருளாதார நெருக்கடிகளும் அரசியல் போக்கும்: ஒரு சுருக்கமான வரலாற்றுப் பார்வை என்கின்ற ஐந்து தலைப்புக்களில் கட்டுரைகளினைக் கொண்டுள்ளது. இக்கட்டுரைகள் அனைத்தும் அரசறிவியலினை ஒரு பாடமாகக் கற்கின்ற மாணவர்களுக்கு பயன்மிக்கதாகத் துலங்கும் என்பது எனது எதிர்பார்க்கை. இந்நூலினை வடிப்பதில் என்னை உந்திய புறச்சூழ்நிலைகளாக எனது பட்டப்படிப்பின்போது வரிவுரையாற்றிய பெறுமதிமிக்க விரிவுரையாளர்களது விரிவுரைகள், இறுதி ஆண்டின் எனது ஆய்வுக் கட்டுரையும் அது தொடர்பான வாசிப்புக்களும், அரசறிவியல் பாடப்பரப்பு தொடர்பான எனது ஈர்ப்பு போன்றன செல்வாக்கு செலுத்தியுள்ளன.அரசறிவியல் பாடப்பரப்பானது மிகவும் விசாலமானதும் ஆழமானதுமான ஒன்று. இவற்றில் சில தலைப்புக்களினை தெரிவு செய்து அவற்றின்பால் நூலாக வடிவமைத்துள்ளேன். சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு இணங்க எனது சிறுதுளியான இம் முயற்சி எனது அரசறிவியல் துறைக்கும், அரசறிவியல் பாடப் பரப்புக்கும் வலுச்சேர்க்கும் என்பதனை இட்டு மனநிறைவடை கின்றேன். -
-8%
அரசியல் கோட்பாடுகளும் சிந்தனையாளர்களும்.
0சமூகமே கோட்பாடுக்கான அடித்தளம் சமூகத்திலிருந்தே தோற்றம் பெறுகின்றன. கோட்பாடுகள் ஒருபோதும் வெறுமையிலிருந்து தோன்றுவதில்லை. சமூகத்தில் தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காண முயலும்போது முன்வைக்கப்படும் சிந்தனைகளே கோட்பாடுகள் ஆகின்றன.