• -10%

    அதர் இருள்.

    0

    உக்ரேன்-ரஷ்ய போர் ஆரம்பித்து ஒரு மாதம் முடிந்தபோது எனது நண்பி சிசில் மூலம் லானாவைச் சந்தித்தேன். சிசிலின் நண்பர்களான வைத்திய இணையர் உக்ரேன் எல்லைக்கு சென்று லானாவையும் அவள் மகனையும் அழைத்து வந்து தங்கள் வீட்டில் வைத்திருக்கிறார்கள். குறுந்தொகையில் ஒரு பாட்டில் தன் மகள் காதலனோடு காட்டு வழியே சென்றதை எண்ணி தாய் ஏங்குகிறாள். கடும் பசியோடு புலிகள் பதுங்கி இருக்கும் அந்த காட்டுப் பாதையில் எப்படி அவள் போனாளோ என்று பதை பதைக்கிறது அவள் இதயம், இதை எழுதி முடிக்கும் போதும் கைபேசியைப் பார்க்கிறேன் லானாவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

    Original price was: ₨ 1,200.0.Current price is: ₨ 1,080.0.
    Add to cart
  • -12%

    அந்தோன் செகாவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்.

    0

    அந்தோன் செகாவின் கதைகளைப் படிக்கையில், கூதிர்ப்பருவத்தின் கடைப் பகுதியில் சோகமான ‘நாளுக்குரிய உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன – காற்று தெளிந்து, இலையற்றகிளைகளை விரித்து நிற்கும் மரங்களது கூர்மையான உருவரை பளிச்செனத் தெரிகிறது. வீடுகள் ஒடுங்கிக்கொண்டு மனிதர்கள் சோர்ந்து ! போயிருக்கிறார்கள், தனிமையால் வாட்டமடைந்து, சலனமற்று, சக்தியிழந்து யாவும் விசித்திரமாய் இருக்கின்றன. ஆழமான நீலத் தொலைவுகள்வெறுமையாய் இருக்கின்றன, வெளிறிய வானத்துடன் கலந்து குளிரில் கெட்டியான சேறு மூடிய நிலத்தின் மீது அவை சோர்வு தரும் குளிர்மூச்சு விடுகின்றன. ஆனால் கூதிர் காலத்து வெயிலைப் போல் கதாசிரியரது சிந்தையானது – தடங்கள் பதிந்த பாதைகள் மீதும், கோணலான தெருக்கள் மீதும், சேறு படிந்த நெரிசலான வீடுகள்மீதும் திகழொளி வீசிக் காட்டுகிறது.

    Original price was: ₨ 2,200.0.Current price is: ₨ 1,947.0.
    Add to cart
  • -10%

    அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு

    0

    மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

    Original price was: ₨ 2,700.0.Current price is: ₨ 2,430.0.
    Add to cart
  • -9%

    அம்பேத்கர் கடிதங்கள்.

    0

    அம்பேத்கரின் நேர்மையை, சமூக நீதிக்கான இச்சையை, மனிதர்களைப் படிக்கும் கலையை, அறம்கொண்ட சமூகக் கட்டமைப்பின் மீதான விருப்பை, புலமையை, விவேகத்தை, மனிதநேயச் சமயக் கொள்கையை, எல்லாவற்றிற்கும் மேலாக எளிமையான மனிதர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம் இவ்வுலகை மறுகட்டமைப்புச் செய்யும் அவரது நோக்கத்தை இக்கடிதங்களில் காண முடியும். தீவிரச் செயல்பாட்டில் ஈடுபடும் வலிமையின் இதயம் கொண்டவரை, ஒடுக்கப்பட்டோரின் விடுதலை வேண்டுபவரை, மாயைகளை உடைப்பவரை, நகைச்சுவை உணர்வும் பகடியும் கைவரப்பெற்ற மனிதரைக் காணமுடியும் இத்தொகுப்பில்.

    Original price was: ₨ 2,725.0.Current price is: ₨ 2,475.0.
    Add to cart
  • -1%

    அம்மா வந்தாள்.

    0

    ‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர்களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.

    Original price was: ₨ 1,165.0.Current price is: ₨ 1,150.0.
    Add to cart
  • -10%

    அயல் பெண்களின் கதைகள்.

    0

    கனவில் மிக அலங்காரமான பளபளக்கும் உடையணிந்து வரும் வாழ்வு சட்டென் கையில் விலங்குகளையும் அணிவிப்பதாக கத்தியானா தன் கதைகளில் சொல்வதுபோல தான் பலரின் வாழ்வும் இங்கு அமைந்திருக்கிறது.

    Original price was: ₨ 1,200.0.Current price is: ₨ 1,080.0.
    Add to cart
  • -9%

    அயல் மகரந்தச் சேர்க்கை (அறிமுகங்கள் – படைப்புகள் – நேர்காணல்கள்)

    0
    வழக்கமான தமிழ் புத்தகங்களிலிருந்து இத்தொகுப்பு மாறுபட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் நான் தேடித்தேடி வாங்க நினைக்கும் ஒரு புத்தகமாக இந்த தமிழ் புத்தகம் அமைந்திருக்கிறது. உண்மையின் சக்தியை, உண்மையின் புரிதலை, உண்மையான பார்வைகளை இந்தப் புத்தகம் நமது கவனத்துக்கு கொண்டு வருகிறது. இத்தொகுப்பில் உள்ள நேர்காணல்கள் படைப்புக்கள் அனைத்துமே அந்த இலக்கியவாதிகளின் சத்திய பிரமாண வாக்குமூலங்கள்.
    -இந்திரன்
    Original price was: ₨ 1,375.0.Current price is: ₨ 1,250.0.
    Add to cart
  • -8%

    அரசியல் கோட்பாடுகளும் சிந்தனையாளர்களும்.

    0

    சமூகமே கோட்பாடுக்கான அடித்தளம் சமூகத்திலிருந்தே தோற்றம் பெறுகின்றன. கோட்பாடுகள் ஒருபோதும் வெறுமையிலிருந்து தோன்றுவதில்லை. சமூகத்தில் தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காண முயலும்போது முன்வைக்கப்படும் சிந்தனைகளே கோட்பாடுகள் ஆகின்றன.

    Original price was: ₨ 595.0.Current price is: ₨ 550.0.
    Add to cart
  • -10%

    அரிச்சந்திரன் கதை.

    0
    உன்னுடன் சுக்கிரன் என்பவனை அனுப்புகிறேன். இந்த நாட்டு எல்லைக்குள் நீ நிதி சேகரிக்கக்கூடாது. நாற்பத்தெட்டு நாட்களுக்குள் பொன்னைக் கொடுத்தனுப்ப வேண்டும்” என்று நிபந்தனை விதித்தார் விஸ்வாமித்திரர். நிபந்தனையை ஏற்றுக்கொண்டு மனைவி, மகனுடன் புறப்பட்டுச் சென்றார் அரிச்சந்திரன்.
    செய்தி அறிந்த நாட்டு மக்கள் அழுது புலம்பினர்.
    “ அரிச்சந்திரா ! நீ எனக்கு இந்த நாடு நகரங்களைத் தரவில்லை என்று ஒரு தடவை கூறு உடனே உனது நாடு நகரங்களையெல்லாம் திருப்பி தந்து விடுகின்றேன்” என்றார் முனிவர்.
    ஆனால் அரிச்சந்திரன் பொய் சொல்ல மறுத்து விட்டு, அவரிடம் விடை பெற்றுச் சென்றான்.
    Original price was: ₨ 400.0.Current price is: ₨ 360.0.
    Add to cart
  • -9%

    அலுவலகத்தில் உடல்மொழி.

    0

    ஒரு மனிதன் நினைப்பதிலிருந்து உணர்வதிலிருந்து அவர் பேசுவது வேறுபட்டு இருக்கிறது என்பதை அவரது உடல் மொழி வெளிப்படுத்துகிறது. துணைவரை தேர்ந்தெடுப்பது முதல் எந்தச் சூழளையும் தைரியமாக எதிர்கொள்ளவதற்கு தேவையான உடல் மொழி ரகசியங்களை நீங்கள் அறிந்து கொள்ள இந்த நூல் பயன்படும். ஒருவரது அசைவுகளை வைத்தே அவரின் எண்ணங்களை உணர்வுகளைஒரு மனிதன் நினைப்பதிலிருந்து உணர்வதிலிருந்து அவர் பேசுவது வேறுபட்டு இருக்கிறது என்பதை அவரது உடல் மொழி வெளிப்படுத்துகிறது.

    Original price was: ₨ 1,925.0.Current price is: ₨ 1,750.0.
    Add to cart
  • -10%

    அலை புரளும் வாழ்க்கை: சென்னை – சில சித்திரங்கள்

    0
    Original price was: ₨ 360.0.Current price is: ₨ 324.0.
    Add to cart
  • -10%

    அவனைக் கண்டீர்களா?

    0

    பா. அ. ஜயகரனின் மூன்றாவது கதைத் தொகுதி இது. அரசுகளாலும் அமைப்புகளாலும் கைவிடப்பட்ட, துண்டாடப்பட்ட, தூக்கி எறியப்பட்ட மனிதர்கள் கதைகள் இவை. இந்தக் கதையின் மனிதர்களை ஆசிரியர் இரத்தமும் சதையுமாக ஆளமான இணக்கத்தோடு வரைந்து காட்டுகிறார். காட்சிகளையும் மனித மனங்களையும் துல்லியமாக நறுக்குத் தெறித்தாற்போன்ற விவரணைகளோடு எழுதிக்காட்டும் ஆசிரியர் மனிதர்களின் இதத்தை இக்கதைகளில் துலக்கிக் காட்டுகிறார். புலம்பெயர் சூழலில் சமகால கதைகளை எழுதிவரும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக பா. அ. ஜயகரனை இத்தொகுதி அடையாளம் காட்டும்

    Original price was: ₨ 1,620.0.Current price is: ₨ 1,458.0.
    Add to cart