-
-9%
சிக்கந்தாபுரம்.
0சிக்கந்தாபுரம் எனும் இந்த நாவல் இஸ்லாமியர்களைப்பற்றிப்பேசுகிறது. ஆனால் இஸ்லாமிய நாவல் அல்ல. அனைத்து தரப்பு வாசகர்களும் சிக்கலின்றி வாசிக்கும் வகையில் நாவலின் களம் இயங்குகிறது.
-
-9%
சிதம்பர நினைவுகள். மலையாள மூலம்
0மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இந்நூலின் மூலம் தங்கள் பிம்பங்களை காண்பர் என்பது உறுதி. தாஸ்தாவஸ்ங்கியைப் போல் கொண்டாடப்பட வேண்டியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.
-
-9%
சிலப்பதிகாரம். மூலமும் உரையும்.
0சிலப்பதிகாரம் என்பது தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியங்களிலொன்று; காவிரிப்பூம் பட்டினத்திலே பெருங்குடி வாணிகர் மரபிலுதித்த கற்பிற் சிறந்த கண்ணகி, அவள் கணவனாகிய கோவலன் என்பவர்களுடைய வரலாற்றை யுரைப்பது; முத்தமிழ்ப் புலமையும் வித்தகக் கவித்திறலும் வாய்ந்த சேரமுனியாகிய இளங்கோவடிகளால் இயற்றப்பெற்றது; கற்பவர் நெஞ்சினைக் கவரும் சொற்சுவை பொருட்சுவை சான்றது.
-
-9%
சிறகை விரித்துப் பறப்போம்.
0நம் முன்னோர்கள் மனிதரின் குணாம்சங்கள் விலங்கினங்களுக்கும் இருப்பதாக உருவகித்து காலாதிகாலமாக நமது சிறார்களின் மனதுக்குள் அவற்றை பதியம்வைத்து அதையே உண்மையென நம்பும் வகையில் கதைகளை சிருஷ்டித்துத் தந்திருக்கிறார்கள். குள்ளப்புத்தி நரிக்குள் புகுத்தப்படும். காட்டின் ராஜாவாக சிங்கத்திற்கு முடிசூடியும், பறவைகளில் அசிங்கமானது காகமெறும் பிள்ளைகளை நம்பவிக்கப்படுகின்றனர்.சிங்கம் அறியுமா காட்டின் தலைவன் என்று? நரி எந்த அடிப்படையில் குள்ள நரியாகியதென்பது அதற்கு தெரியுமா? உண்மையில் காகம் தான் ஆசியாவில் உள்ள பறவையினத்தில் மக்களுடன் ஒன்றிணைந்து நெருங்கி பழகும் பறவை என்பது இன்றைய அறிவியல். -
-7%
சிறுவர் பாடல்.
0பன்மொழிப்புலவர் த. கனகரத்தினம் கல்வி வெளியீட்டு திணைக்களத்தில் பல வருடங்களாகத் தமிழ்ப் பாடநூற் பகுதி எழுத்தாளராக, பிரதான பதிப்பாசிரியராக, தலைவராக கடமையாற்றி பல பாடநூல்களை வெளியிட்ட இவரின் நூல்கள் இலங்கை சாகித்திய மண்டலம், இலங்கை அபிவிருத்தி சபை, இலங்கை அரச கருமமொழித் திணைக்களம் ஆகியவற்றின் பரிசிகளையும் பாராட்டுகளையும் பெற்றவை.ஜாதகக் கதைகள், தாய்லாந்து சிறுவர்களின் நாட்டார் கதைகள் ஆகியவை இவரது ஏனைய சிறுவருக்கான ஆக்கங்களாகும். -
-9%
சுமித்ரா.
0நாவல் என்ற கலை வடிவம் அதன் அளவில் அல்ல அமைப்பில்தான் உள்ளது.என்று நிறுவிய புகழ்பெற்ற மலையாள நாவல் இது.
-
-18%
-
-9%
சூஃபி கதைகள்.
0மூச்சடக்கி மூழ்குபவர்கள் மட்டும்தான் இத்தகைய நல் முத்துக்களை அள்ளிக் கொண்டு வரமுடியும். கடலில் இறங்கித் தேடுபவர்கள்தான் அதை அடைய முடியும். தேடுங்கள், கிடைக்கும் என்பது கூட ஒரு வகையிலான சாகாவரம் பெற்ற சூஃபி மொழிதான்.ஒவ்வொருவருக்குள்ளும் சூஃபி தன்மை உண்டு என்கிறது சூஃபியிஸம். எனினும் சிலரே அதனை வெளிக்கொணர்ந்து சூஃபிகள் ஆகி விடுகின்றனர். மற்றவர்கள் மூடப்பட்ட விதைகளாக, முளைக்காமலேயே இருந்து விடுகின்றனர். மனித வாழ்வின் முழுமைக்கு சூஃபிகள் ஆற்றிய தொண்டுகள் மகத்தானவை. எனினும் கடலின் அடியில் கிடக்கும் முத்துக்கள் போல் அவை மக்களால் உணரப்படாமலேயே உள்ளன.சூஃபிகளின் வாழ்க்கை.சூஃபிகளின் கதைகள், சூஃபி மொழிகள் இவற்றில் கூறப்படாத எதுவும் எந்தச் சமயங்களிலும் இல்லை. நீதிக் கதைகளில் சொல்லப்படுவதுபோல் இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் என்பது போன்ற நேரிடையான விளக்கங்கள் எதுவும் அதில் சொல்லப்பட்டிருக்காது. ‘பொல்லாத உலகம் இது. இதில் அறிவாளிக்கும் அபராதம்தான். முட்டாளுக்கும் அபராதம்தான்’ என்கிறார்.சூஃபி ஞானி சா அதி. ‘உலக வாழ்க்கை துன்பமயமானது’ என்கிறார் புத்தர்.சூஃபி ஞானம் விவரிப்புக்களுக்கு அப்பாற்பட்டது. நீ எந்தப் பாதையில் சென்றாலும் அதிலேயே ஈடுபாட்டுடன் தொடர்ந்து பயணித்தால் இறுதியை அடைய முடியும் என்கிறது சூஃபி. யார் எந்த வழியில் பயணித்தாலும் முடிவில் அங்குதான் சென்று சேருவார்கள் என்கிறது அது. -
-9%
சூஃபியிசம் என்றால் என்ன?
0இந்த நூலின் தலைப்பே ஒரு கேள்வியாக அமைந்துள்ளது. மேற்குலகில் அந்தக் கேள்விக்கு அண்மைக் காலத்தில் ஒருவித போலித்தனமான, சந்தேகத்திற்குரிய சில பதில்கள் தரப்பட்டுள்ளன. மட்டுமின்றி, சூஃபியிசம் குறித்த ஆர்வமும் அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. எனவே, ஒரு நம்பத்தகுந்த அறிமுக நூலின் தேவை மென்மேலும் அதிகரித்துள்ளது. அத்தகு அறிமுக நூலின் தேவையை இந்த நூல் பூர்த்தி செய்கிறது. அறிமுக நூல் எனும்போது, அதனை வாசிப்பதற்குச் சிறப்பு அறிவுப் பின்னணி எதுவும் தேவையாக இருப்பதில்லை. அதுபோலவே, நம்பத்தகுந்த நூல் எனும் போது, அது உண்மையின் ஆழத்தைச் சமரசப்படுத்தும் அளவுக்கு எளிமைப்படுத்தப்படுவதும் இல்லை.
-
-9%
சூழலியல் மேலாண்மை.
0உயிர் வாழ்க்கையின் பரவல் பற்றியும், உயிரினங்களுக்கும் அவற்றின் இயற்கைச் சூழலுக்கும் இடையிலான இடைவினைகள் பற்றியும் அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்யும் துறையாகும். ஒரு உயிரினத்தின் சூழல் என்பது சூரிய ஒளி, காலநிலை, நிலவியல் அம்சங்கள் போன்ற உயிரற்ற காரணிகளின் ஒட்டுமொத்த அளவான இயற்பியல் இயல்புகளையும்; குறிப்பிட்ட வாழிடத்தில் வாழும் பிற உயிரினங்களைக் கொண்ட உயிர்சார் சூழல் மண்டலத்தையும் (ecosystem) உள்ளடக்கியதாகும்.
-
-9%
செழுஞ்சுடர்.
0கதையில் நகரங்களை விட கிராமங்களே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இரத்தமும் சதையும் கொண்ட சாமான்ய மனிதர்களே பாத்திரங்களாக உருமாறி மனிதர்க்குரித்தான இயல்பான குணங்களோடு அன்பு, நட்பு, பெருமை கவுரவம் என்று அலைகிறார்கள். நினைவுகளிலும் நிஜங்களிலும் காலம் உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றது.விலை Rs.1,000/= -
-9%
சென்றுபோன நாட்கள்.
0‘கதை சொல்வதில் சமர்த்தர்’ என்று புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர் முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு (1886-1935). பாரதி பற்றி விரிவான நினைவுக் குறிப்புகளை முதன் முதலில் எழுதியவர் என்று பாரதி அன்பர்கள் இவரை நினைவுகூர்வார்கள். 1928இல் பாரதி நூல்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது ‘சென்றுபோன நாட்கள்’ தொடரில் இவர் பாரதி பற்றி எழுதிய நெடும் கட்டுரை ஒரு ‘கிளாசிக்’ ஆகும். 1926-1934இல் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு எழுதிய ‘சென்றுபோன நாட்கள்’ பாரதி உட்படப் பதினெட்டுப் பழம் பத்திரிகையாளர்களை நினைவுகூர்கிறது. முதல் முறையாக இப்பொழுது நூலாக்கம் பெறுகிறது. துல்லியமான பல புதிய தகவல்கள், தனித்துவமான கண்ணோட்டம், சுவையான நடை – இவை இந்த நூலின் சிறப்புகள். பல்லாண்டுக்காலப் படைப்பூக்கம் மிகுந்த ஆராய்ச்சியின் விளைவாக இந்நூலைத் தேடிப் பதிப்பித்திருக்கும் ஆ.இரா. வேங்கடாசலபதி, துப்பறியும் கதை போல் விரியும் ஒரு நீண்ட முன்னுரையினையும் எழுதியுள்ளார்.