-
-9%
காலமும் கலையும்.
0Original price was: ₨ 2,200.0.₨ 2,000.0Current price is: ₨ 2,000.0.பல சிற்றிதழ்களிலும், அவற்றின் ஆண்டு மலர்களிலும், பல்வேறு நூல்களில் முன்னுரையாகவும் தோழர் அமரந்த்தா அவர்களால் கடந்த 30 ஆண்டுகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய அரிய தொகுப்பு இது. வரலாற்று நீரோட்டப் போக்கிலேயே செல்லாமல் அமரந்த்தா அதனை எதிர் நின்று பார்ப்பதால், பலருக்கும் புலப்படாத ஏகாதிபத்திய செயல்பாடுகளை – கார்ப்பரேட் உலகின் புதிய திருவிளையாடல்களை – மக்கள் முன் அவர் வைத்துள்ளார். அமரந்த்தா தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சியாக இருந்து தனது கருத்துகளை நேர்மையாகப் பதிவு செய்திருப்பது, மக்களின் மேல் அவருக்குள்ள அன்பைக் காட்டுவதாகக் கொள்ளமுடியும்.
-
-10%
கிகோர்.
0Original price was: ₨ 360.0.₨ 324.0Current price is: ₨ 324.0.கிகோர் என்னும் இந்த காவிய நூல் உலகம் முழுவதிலும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதோடு ஆர்மோனிய திரைப்பட இயக்குனர் Amasi martirosyan ஆல் 1934 ஆம் ஆண்டிலும், அஸர்பைஜான் திரைப்பட இயக்குனர் Sergey Israelyan ஆல் 1982 ஆம் ஆண்டிலும் திரப்படங்களாக வெளிவந்து பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்ற கதையாகும்.
-
-6%
குழந்தை உளவியலும் கல்வியும்.
0Original price was: ₨ 705.0.₨ 660.0Current price is: ₨ 660.0.குழந்தை உளவியல்,குழந்தை கல்வி, குழந்தை வளர்ப்புமுறை முதலாம் துறைகளிலே பரவலான ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன. வளர்ந்த நிலையில் ஏற்படும் விலகல் நடத்தைகளுக்கும் இடர்களுக்கும்குழந்தை நிலை வளர்ப்பில் நிகழ்ந்த தவறான அணுகுமுறைகளும்,ஆதரவு இன்மையுமே முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
-
-10%
குற்றமும் கருணையும்.
0Original price was: ₨ 1,650.0.₨ 1,485.0Current price is: ₨ 1,485.0.உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழகக் காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற அனூப் ஜெய்ஸ்வால் என்னும் அதிகாரியின் இள வயது அனுபவங்களைக் கதைபோலச் சொல்லும் நூல் இது. நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் கொண்ட ஒரு அதிகாரி, சட்டம் அளித்துள்ள அதிகார வரம்பிற்குள் எவ்வளவு சாதனைகள் படைக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் இந்தக் கதைகள். சரியான அணுகுமுறை இருந்தால், ஏழை எளிய மக்களின் வாழ்க்கைப் பாதையை மடைமாற்ற முடியும் என்பதற்கும் திருத்தவே முடியாது என்று கருதப்படுவோரிடத்திலும் மனமாற்றம் நிகழும் என்பதற்கும் இந்தப் புத்தகம் சிறந்த சான்றாவணம். காவல் துறையில் பணிபுரியும் ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்கி எழுப்பும் ஆற்றல் கொண்ட நிகழ்வுகள் இவை.
-
-10%
-
-10%
கூன் விழுந்த காலம்.
0Original price was: ₨ 600.0.₨ 540.0Current price is: ₨ 540.0.பழக்கப்பட்ட பறவையின் குரல் கேட்டது சட்டைப்பைக்குள் அடங்கியிருக்கும் அலைபேசியை தொட்டுப் பார்த்தேன். அது அதிர்வில் இல்லை கணத்தின் கிளையிலிருந்து கால் நழுவி பதறியது மனம். நிஜத்தில் எழுந்த அந்தக் குரல் எங்கே என்று தேடினேன். காண்பாரற்ற கதியில் விடைப்பெற்றிருந்தது பறவை.
-
-10%
கொன்றைவேந்தன். ஒளவையார்.
0Original price was: ₨ 200.0.₨ 180.0Current price is: ₨ 180.0.நம்மை சற்று முன் கடந்துபோன இருபதாம் நூற்றாண்டில்கூட “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு”? என்ற பிற்போக்குத்தனமான கருத்து வேரூன்றியிருந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இலக்கணப் புலமையுடன் இலக்கியம் படைத்த பெண்பாற் புலவர்கள் பலர் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஒளவையார். -
-10%
சாயத்திரை.
0Original price was: ₨ 1,380.0.₨ 1,242.0Current price is: ₨ 1,242.0.விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து. அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடித்த மனிதன். புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதி மணியன் மறக்க முடியாத – அல்ல, மறக்கக் கூடாத – புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிக்குகள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று இயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது. அழித்துக் கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது.
-
-20%
சார்த்தர்: விடுதலையின் பாதைகள்.
0Original price was: ₨ 1,500.0.₨ 1,200.0Current price is: ₨ 1,200.0.சார்த்தரின் நூறாண்டு நிறைவின் போது, கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி ஏடான ‘ கிராண்மா’ எழுதியது:மார்க்ஸ் திட்டமிட்ட சோசிலசத்தை, அதன் தூய்மையான வடிவத்தில் சார்த்தர் எடுத்துக் கொண்டார், அந்த சோசிலசம் மே 1968 போராட்டத்தின் தோல்வியாலும் சோவியத்தின் வீழ்ச்சியாலும் அழிந்துவிடவில்லை. இந்தத் தனிநபர்களும் அந்தக் கனவுகளும் கடந்த காலத்துக்கல்ல, எதிர்காலத்துக்குரியவை.”மாபெரும் சிந்தனையாளராக, படைப்பிலக்கியவாதியாக, நாடகாசிரியராக, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாக, காலனி நாட்டு விடுதலைப் போராட்டங்களின் ஆதரவாளராக , 1968 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் ஆதர்சங்களிலொருவராகத் திகழ்ந்த ழான் பால் சார்த்தரின் வாழ்க்கைப் பயணத்தின் ஊடாக, இருபதாம் நூற்றாண்டின் முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்நூல். அவற்றை பின்னணியாகக் கொண்டு அவரது தத்துவம், இலக்கியப் படைப்புகள், அரசியல், சமூகச் செயல்பாடுகள் ஆகியன தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. -
-9%
சிதம்பர நினைவுகள்.
0Original price was: ₨ 1,100.0.₨ 1,000.0Current price is: ₨ 1,000.0.மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இந்நூலின் மூலம் தங்கள் பிம்பங்களை காண்பர் என்பது உறுதி. தாஸ்தாவஸ்ங்கியைப் போல் கொண்டாடப்பட வேண்டியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.
-
-10%
சிலப்பதிகாரம். மூலமும் உரையும்.
0Original price was: ₨ 3,600.0.₨ 3,240.0Current price is: ₨ 3,240.0.சிலப்பதிகாரம் என்பது தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியங்களிலொன்று; காவிரிப்பூம் பட்டினத்திலே பெருங்குடி வாணிகர் மரபிலுதித்த கற்பிற் சிறந்த கண்ணகி, அவள் கணவனாகிய கோவலன் என்பவர்களுடைய வரலாற்றை யுரைப்பது; முத்தமிழ்ப் புலமையும் வித்தகக் கவித்திறலும் வாய்ந்த சேரமுனியாகிய இளங்கோவடிகளால் இயற்றப்பெற்றது; கற்பவர் நெஞ்சினைக் கவரும் சொற்சுவை பொருட்சுவை சான்றது.
-
-9%
சிறகை விரித்துப் பறப்போம்.
0Original price was: ₨ 550.0.₨ 500.0Current price is: ₨ 500.0.நம் முன்னோர்கள் மனிதரின் குணாம்சங்கள் விலங்கினங்களுக்கும் இருப்பதாக உருவகித்து காலாதிகாலமாக நமது சிறார்களின் மனதுக்குள் அவற்றை பதியம்வைத்து அதையே உண்மையென நம்பும் வகையில் கதைகளை சிருஷ்டித்துத் தந்திருக்கிறார்கள். குள்ளப்புத்தி நரிக்குள் புகுத்தப்படும். காட்டின் ராஜாவாக சிங்கத்திற்கு முடிசூடியும், பறவைகளில் அசிங்கமானது காகமெறும் பிள்ளைகளை நம்பவிக்கப்படுகின்றனர்.சிங்கம் அறியுமா காட்டின் தலைவன் என்று? நரி எந்த அடிப்படையில் குள்ள நரியாகியதென்பது அதற்கு தெரியுமா? உண்மையில் காகம் தான் ஆசியாவில் உள்ள பறவையினத்தில் மக்களுடன் ஒன்றிணைந்து நெருங்கி பழகும் பறவை என்பது இன்றைய அறிவியல்.