-
-21%
கடலலைகளை மேவிய கதை.
0ஒரு தரப்புத் துப்பாக்கிகளின் அராஜகங்களுக்கும் அஞ்சி ஓடி ஒதுங்கிப்போன இடங்களிலும் அங்குள்ள மக்களின் வாழ்வின்மீதான நேசிப்பை,துப்பாக்கி முனைகள் விடவே இல்லை….என்ற பெருந்துயரை எழுதிக்கடக்காமல் இருக்க முடியாததன் விளைவே இக்கதையாகும். -
-9%
கடைசிக் கட்டில்.
0என்னதான் சொல்லுங்கள், வாழ்வு எல்லோருக்குமே ஒரு இரகசியத்தை ஒழித்து வைத்திருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவர் இரகசியத்தை இன்னொருவர் அறிய முடியாது. பரவாயில்லை.ஆனாலுதானே அறியமுடியாமல் தன் இரகசியம் இருக்கும்போதுதான் நச்சுச் சுழலாகிவிடுகிறது. -
-9%
கடைசிச் சொல்.
0செயற்கரிய செயல்களைச் செய்தவர்களை மனிதகுலம் தங்களுடைய வழிகாட்டிகளாகக் கருதுகிறது. வாழ்வின் முன்னேற்றத்துக்கு, வாழ்க்கையில் வருகின்ற பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு, அவர்கள் சொன்னவையும் செய்தவையும் மற்றவர்களுக்குப் பெரிதும் வழிகாட்டியாக விளங்குகின்றன. தங்களது அறிவுரைகள், செயல்பாடுகள் மூலமாக மக்கள் பின்பற்றத்தக்க, ஒரு வாழும் முன்னோடியாக, உதாரணப் புருஷராக விளங்கிய இவர்கள், தங்களுடைய மரணத்தின் வழியாகவும் ஏன் ஒரு முன்மாதிரியாக விளங்கியிருக்க முடியாது? இந்த நோக்கத்தின் விளைவாக எழுந்ததுதான் இந்தப் புத்தகம். மனித குலத்தை உய்விக்க வந்தவர்கள் என்று போற்றப்படும் ஏசு, நபி, புத்தர், அறிஞர்கள் எனப்படும் சாக்ரடீஸ் முதல் பெர்னாட் ஷா, மனத்தால் வாழ்பவர்களான கவிஞர்கள், காந்தி தொடங்கி எண்ணற்ற அரசியல் தலைவர்கள் என்று பலதரப்பட்ட உலகப் பிரபலங்கள் தங்களது மரணத்துக்கு முன்பு கடைசியாக என்ன சொன்னார்கள்? அதன்மூலம் அவர்கள் நமக்குச் சொல்ல வந்தது என்னவாக இருக்கக்கூடும்? இதைப் பற்றி மேற்கொண்ட விரிவான ஆராய்ச்சியின் விளைவே இந்தப் புத்தகம்.
-
-9%
கணினி.
0இன்றைக்கு தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், கணினிகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. அவற்றைக் கையாள்கிறவர்கள் அதிகரித்துவிட்டார்கள். காவல் பணியில் இருப்பவர்கள் தொடங்கிக் கட்டுமானப் பணிவரை எங்கும் கணினி, எதிலும் கணினி என்றாகிவிட்ட நிலையில்…..கணினிப் பணியில் ஈடுபட்டிருக்கும் பலருக்கும் ஏதாவது ஒரு வகையில் உடற்கோளாறு உருவாகிறது. இதற்குக் கணினிகள் காரணமா , பணியாற்றுகிற சூழ்நிலைகள் காரணமா என்று எவரும் ஆராய்ந்துகொண்டிருப்பதில்லை.சிலர் எந்தத் தொல்லையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறார்கள். சிலர் என்ன தொல்லை என்பதையே தெரிந்துகொள்ளாமல் வெளியில் சொல்லாமல் மெளனம் காக்கிறார்கள். விவரம் தெரிந்தவர்கள்மட்டும் தங்கள் உடல்நலனில் எந்தச் சிக்கலும் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள்.கையாள்பவர்கள் முறையாகக் கையாண்டால்தான் உடல்நலம் கெடாமல் இருக்கும்.ஆகவே, பணியாளர்கள் முதற்கொண்டு பதவியில் இருப்பவர்கள்வரை தெரிந்துகொள்ள வேண்டிய, அவசியம் பின்பற்றவேண்டிய நுட்பங்கள் இங்கு ஏராளமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைப் படித்தால் பலன் உங்களுக்கு மட்டுமல்ல . உலகுக்கே! -
-9%
கதை கேட்கும் சுவர்கள்.
0வாழ்வு தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது? அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை, சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது. தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு ஒன்றுமே தெரியாதது மாதிரி நின்று வேடிக்கையும் பார்க்கிறது.உமா ப்ரேமன் என்கிற இம்மனுசியை இது தன் சகல அகங்காரத்தோடும் அலைக்கழித்தது.இதன் காயங்கள் எதுவுமே தனதில்லையென, நேற்றிரவு பெய்த மழையில் புத்தம்புதிதாய் பூத்து நிக்கிறள், அதனால் மட்டுமே அவள் வாழ்வு புத்தகம்மாகிறது. -
-32%
கமலி
0ஓர் ஆணும் பெண்ணும் குடும்பம் என்கிற அலகுக்குள் நுழைகிறபோது, தம் விருப்பங்களுக்கும் விடுதலை உணர்விற்கும் இடையூறு ஏற்படும் என்பதை அறிந்தேதான் அவ்வாழ்வைத் தேர்வுசெய்கிறார்கள். ஆனால் அவ்வறிதல் வந்த பிறகு, இருவருக்குமான விடுதலை உணர்வினைக் கொண்ட வாழ்முறையை உருவாக்கிக்கொள்ளும் தகுதியை அவர்கள் பெற்றுவிட்டால், மகிழ்வின் ஒளிகூடிய, புரிதலில் மேன்மை கொண்ட வெளியில் வாழ்வு பரவசிக்கத் தொடங்குமென்கிறாள் கமலி.அழகிய குறியீடுகள், நீர்மை மிகுந்த மொழி, பாத்திரங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைத் துலங்கச் செய்கிற அறிவார்ந்த உரையாடல்கள், மனக் கிளர்வுகளின் கவித்துவமான வெளிப்பாடுகள் என கமலி பேரெழில் கொண்டவள். -
-9%
கருப்பு வெள்ளை இந்தியா.
0ஒரு வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும்? மறைக்கப்பட்ட நிகழ்வுகளை நிலைநிறுத்தி, மறக்கப்பட்ட மனிதர்கள் மீது ஒளி பாய்ச்சி, திணிக்கப்பட்ட பொய்களைத் தோலுரித்து, தீர்க்கமான உண்மைகளை முன்வைத்து, ஆதிக்கவாதிகளின் ஆலாபனை களை மட்டும் உயர்த்திப் பிடிக்காமல், குரலற்றவர்களின் இருள் பக்கங்களையும் எடுத்துக்காட்டுவதாக இருக்க வேண்டும். மூன்றரை நூற்றாண்டு காலனி ஆதிக்கத்தின் பல்வேறு பரிமாணங்களை, பேசப்படாத கோணங்களில் அணுகுகிறது இந்தப் புத்தகம்.இந்திய மண்ணில் இப்படியும்கூட நிகழ்ந்திருக்கிறதா என்று வியப்பையும் வலியையும் ஒருசேரத் தருகின்றன இந்தச் சரித்திரத்தின் பக்கங்கள். அதிகாரத்திலிருந்த வெள்ளையனின் ஆணவத்தையும், அடிமையாக உழன்ற இந்தியனின் விசும்பலையும் மிக நெருக்கமாக உணரச் செய்கிறது ஆசிரியரின் எழுத்து. காலனி ஆதிக்க இந்தியாவின் வெளிப்படாத தரிசனம். -
-9%
கரும்பலகை.
0ஒரு இளம் வாலிபன் அல்லது ஒரு பெண் ஆசிரியராக பணி புரிகின்றபோது அவர்களுக்கு ஏற்படும் தடங்கல்களையும் அதிலிருந்து அவர்கள் எப்படி மீழ்கின்றார்கள் என்பதயும் இந்நூல் உணர்த்தி நிக்கிறது.
-
-9%
கரையில் மோதும் நினைவலைகள்.
0எந்தத் தன்வரலாறும் தனித்த ஒற்றையடிப், பாதையாக அமைவதில்லை. அதில் பல தொடுப்புகளும் விரிவுகளுமிருக்கும்.அவை இதிலும் உண்டு. 1970 களில் இலங்கைத் தமிழர் வாழ்வு, ஈழப்போராட்டம், 1980 களில் தமிழ் நாட்டில் ஈழப்போராளிகளின் செயற்பாடுகள், 1990 களில் புலம்பெயர்வு, அவுஸ்திரேலியாவில் தமிழர்கள், 2000 இல் பெருந்திரளிலிருந்து விலகும் மாற்றாளரின் பயணம் என அரசியல் அலைக்கழித்த மனிதர் ஒருவரின் இந்தத் தன்வரலாறு கட்டவிழ்கிறது. -
-9%
கரையோர முதலைகள்.
0ஒரு நாளில் சந்தோஷமான நேரம் என்பது காலை நேரம்தான்.வீட்டு வேலை மொத்தமும் முடித்து, மறுபடி முகம் கழுவி, பவுடர் பூசி, மையெழுதி, பீரோவிலிருந்து வாசனையெழப் பிரித்து உடுத்திக்கொள்ளும் நேரம்தான். தன் முகமே தனக்குப் பிடித்துப் போகும். நேரம்தான். இந்த எட்டரை மணி காலைதான் சந்தோஷமான நேரம்.நிறைய பேர் விடியலைத்தான் நல்ல நேரம் என்கிறார்கள். விடியல் என்பது சற்று அமைதியானது. சந்தோஷம் துக்கம் ஏதுமற்றது. நிதானமானது. -
-9%
கலையும் உளவியல் வெளியும்.
0பேராசிரியர் முனைவர் சபா.ஜெயராசா தமிழில் “கல்வியியல்” துறைசார்ந்த நூல்கள் பல எழுதி, அத்துறைசார் விருத்தியில் முதன்மையான பங்கு வகித்து வருபவர். கலை, இலக்கியம், உளவியல், தத்துவம் எனப் பல்வேறு துறைசார் புலங்களுடன் ஊடாடி வருபவர். இவற்றின் செழுமை மற்றும் அறிவு, ஆய்வு யாவும் இவரது “புலமைமரபு” எத்தகையது என்பதைத் தனித்துத் துல்லியமாக வெளிப்படுத்தும். மேலும் கலை, தத்துவம் பற்றிய தொடர் விசாரணை, இவரைப் புதிய அறிவுருவாக்கப் பணியில் முழுமையாக ஈடுபட வைப்பதுடன், கல்வியின் பொருள்கோடல் சார்ந்து புதிய புதிய அர்த்தப்பாடுகளை நோக்கிக் கவனம் குவிக்கவும் செய்கிறது. தொடர்ந்து புதிய ஆய்வுக் களங்கள் நோக்கியும் கவனம் கொள்ளத் தூண்டுகிறது.இன்றுவரை கல்வி உலகில் முனைவர் சபா.ஜெயராசா உயிர்ப்புமிகு புலமையாளராகவே திகழ்கிறார். -
-9%
கல்மேல் நடந்த காலம்.
0கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் பியதாசி யாரோ ஒரு சிங்கள மன்னன் என்று ஆய்வாளர்கள் எண்ணிக்கொண்டிருந்தவேளையில் ஜார்ஜ் டர்னர் என்ற ஆங்கில அதிகாரி அந்த பியதாசி வேறு யாருமல்ல அசோகர்தான் என்று வேறொரு பாலிமொழி ஆதாரத்தைக்கொண்டு நிறுவியதும் ஆய்வு திசைதிரும்பியதை ‘தேவர்களுக்கு பிரியமான அசோகர்’ என்ற கட்டுரை விவரிக்கிறது. அசோகர் போர்களையும் உயிர்ப்பலியிடுவதையும் எதிர்த்தபோதும் உணவுக்காகக் கொல்வதை அவர் தடுக்கவில்லை என்பதோடு மரக்கறி உணவை ஆதரிக்கவில்லை என்றும் இக்கட்டுரையில் வாசித்தபோது சற்று அதிர்ச்சியாக இருந்தது. அசோகர் புத்தமதத்தைத் தழுவினார் என்றதும் நாமாக மற்றவற்றைக் கற்பனைசெய்துகொண்டு அதுவே உண்மை என்று நம்பத்தொடங்கிவிடுகிறோம்.