-
-9%
-
-9%
நிஜத்தைத் தேடி.
0இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான சிறுகதைகள் சுஜாதாவின் ஆரம்பகால கதைகள். 1960-70களில் ஸ்ரீரங்கம் எஸ்.ரங்கராஜன், எஸ்.ஆர்.ராஜன், எஸ்.ரங்கராஜன் என்கிற பெயர்களில் சுஜாதா குமுதம், கணையாழி பத்திரிகை களில் எழுதியவை. தவிர 70-80களில் எழுதிய கதைகள் சிலவற்றின் கூட, 1984-ல் கல்கியில் வெளியான ஒரு குறுநாவலும் இதில் இருக்கிறது. சுஜாதாவுக்கே உரித்தான விறுவிறுப்பு மற்றும் ட்விஸ்ட்டுகள் 100 சதவிகிதம் உத்தரவாதமாகக் கொண்ட கதைகள்.
-
-8%
நூறு புராணங்களின் வாசல்.
0இந்தக் கதைகள் அழகியச் சித்திரங்கள். நம்மை ஓர் அதிசய உலகுக்கு, நிஜமும் அதிசயமும் உள்ள உலகுக்கு அழைத்துச் செல்பவை. அறிவியல் தத்துவத்தையும் ஒரு குழந்தையின் ஆர்வப் பார்வையையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து நம்மைக் கிரகிக்கவைப்பவை.
-
-11%
நோம் சோம்ஸ்கி.
0நோம் சோம்ஸ்கி என்னும் உலகம் போற்றும் அமெரிக்க அறிஞர் தத்துவம் , உளவியல் , சமூகவியல் , மொழியியல் , கணினியியல் , அரசியல் , விஞ்ஞானம் என எந்தவொரு தளத்திலும் அறிமுகத்திற்கு அப்பாற்பட்டவரல்லர் அவரைப் பற்றியும் ஒரு மாமனிதரான உருவான பின்புலம் பற்றியும் இன்னும் கூடுதலாக அறிந்துகொள்ள ஆர்வப்படுவோருக்கு இந்நூல் அறிமுகத்திற்கு அப்பாற்பட்ட செய்திகள் அடங்கியது.
-
-9%
பச்சையும் சிவப்புமாய் ஒரு பாதாம் மரம். (வாழ்வனுபவங்கள்)
0எங்கோ திடமற்று வாழும் ஒரு பெண் மனதை, அன்பின் ஒற்றை வார்த்தைக்கு பரிதவிக்கும் ஒரு குழந்தையின் பாதையை, அடையாளங்களற்ற ஒரு ஆசிரியரின் வாழ்வை, நிறைமனதோடு பயணிக்கும் ஒரு மனித மனத்தை தீண்டும் வரை இந்த பயணம் தொடரட்டும்…
-
-17%
படிப்பது சுகமே!
0படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும், பாடங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனப் பல விஷயங்களைப் பற்றியும் மாணவர்களுக்கு இந்நூல் விளக்கித் தருகிறது.மாணவர்களின் படிப்புக்கும் தேர்வுக்கும் இந்நூல் ஒரு சிறந்த திறவுகோலாக இருக்கும். இந்நூல் ஊன்றிப் படிப்பவர்கள் தேர்வில் வெற்றிபெற்று சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்பது உறுதி. -
-9%
பண்டைய நாகரிகம்.
0உயிரினங்கள் வாழமுடியும்.அவை ஒருகாலத்தில் சுருங்கத் தொடங்கும். அவை சுருங்கத்தொடங்கிய பின் உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்காது என அறிவியல் அறிஞர் இசுடிபன் ஆக்கிங் கூறியுள்ளார். பூமியில் உயிரினங்கள் தோன்றி 350 கோடி ஆண்டுகள் ஆகிறது எனினும். மனித நாகரிகத்தின் காலம் 10.000 ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான். இன்றைக்கு 6000 ஆண்டுகளுக்கு முன் முதல் நாகரிகமான சுமேரிய நகர அரசுகளின் நாகரிகம் யூப்ரடிசு. டைகிரிசு ஆறுகள் ஓடும் மெசபடோமியா பகுதியில் தோன்றியது. இப்பகுதியில் அதன்பின் அக்கேடியன். பாபிலோனியா. அசீரிய. பாரசீக. மிட்டணி, பார்த்திய. சசானிய நாகரிகங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின. அதேபோன்று எகிப்திலும், சிந்து சமவெளியிலும், சீனாவிலும், கிரீட் தீவிலும் நாகரிகங்கள் தோன்றின. -
-9%
பதிப்பும் படைப்பும்.
01990களின் நடுப்பகுதியில் ‘காலச்சுவடு’ பதிப்பகத்தைத் தொடங்கித் தமிழின் முன்னணிப் பதிப்பகங்களில் ஒன்றாக அதை வளர்த்தெடுத்துள்ள கண்ணன் பதிப்பு, பதிப்பகம், காப்புரிமை, இலக்கியம் சார்ந்த அயலுறவு முதலான பொருள்கள் குறித்துப் பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தமிழ்ப் பதிப்புலகம் குறித்துத் தொடர்ந்து ஆழ்ந்த அக்கறையுடன் காத்திரமான கருத்துக்களை முன்வைத்துவரும் கண்ணனின் இந்த நூல், தமிழ்ப் பதிப்புலகின் தன்மைகளையும் தேவைகளையும் சர்வதேசப் பின்புலத்தில் வைத்து அலசுகிறது. தமிழ்ப் பதிப்புலகின் இன்றைய நிலை குறித்தும் அதன் அடுத்த கட்டப் பயணம் குறித்தும் தீர்க்கமான பார்வைகளை முன்வைக்கிறது. இந்திய அளவிலும் உலக அளவிலும் தன் செயல்பாடுகளை விரித்துக்கொண்டு செல்லும் காலச்சுவடு பதிப்பகத்தின் பயணம் எப்படிச் சாத்தியப்பட்டது என்பதைக் காட்டும் தடங்களும் இந்நூலில் இருக்கின்றன. தமிழ்ப் பதிப்புலகம் குறித்து கண்ணன் தொடர்ந்து முன்வைத்துவரும் பல்வேறு கனவுகள் நனவாகத் தொடங்கியிருக்கும் தருணத்தில் இந்த நூல் வெளியாவது மிகவும் பொருத்தமானது.
-
-9%
பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணியும்.
0கார்மேகம் அவர்களுடைய வாழ்க்கை, கார்மேகம் அவ்ர்களுடைய பத்திரிக்கை உலகப் பணி, இலங்கையிலும் இந்தியாவிலும் அவர் ஆற்றிய சமூகப் பணி, கார்மேகம் அவர்களைப் பற்றி பிரபலமானவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பன போன்ற கட்டுரைகள் அடங்கிய ஒரு காத்திரமான தொகுப்புத்தான் இந்நூல்.
-
-9%
பயமா எனக்கா?
0குழந்தைகளை கை நீட்டி அடிக்க விரும்பாத பெற்றோரில் சிலர் கூட மறமுகமாக பயமுருத்தி, அதன்வழியே நினைத்த பணியை நிறைவேற்றிக்கொள்வது என்பது தலைமுறை தலைமுறையாகத் தொடங்கியது. குழந்தை சரியாகச் “சப்பிடவில்லையா? கூப்பிடு பூச்சாண்டியை “என்பதில் ஆரம்பித்து, பல்வேறு வடிவங்களில் பயமுறுத்துவது தொடர்கிறது.தேவையற்ற பய உணர்வு, குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. -
-13%
பரலோக வசிப்பிடங்கள் (மலையாள நாவல்.
0ஏழு ஆகாயங்கள் இருக்கின்றன…அவற்றிற்கிடையே பலநிற ரயில்களின்இடையறாத போக்குவரத்து….இறந்தவர்கள் அவற்றில் பயணிக்கிறார்கள்….காதலின் மாதுயர் அழுந்தஅற்றலைகிறார் கடவுள்…தன் நாவலைமறு உலகில் பிரசுரிக்கப் பாடுபடுகிறான்ஒரு எழுத்தாளன்…நவீன கதை சொல்லல் முறையின்பெருவசீகர மாயம்.அசாதாரண படைப்புச் சிறப்பால்தனித்தொளிரும் நாவல். -
-9%
பருவநிலை மாற்றம்.
0சூழலியல், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தைப் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. சூழலியல், பருவநிலை குறித்த உண்மைகள் மாணவர்களின் தேர்வுக்கான வினாவிடையாக மட்டும் நின்றுவிடக்கூடியவையல்ல என்பதையும் அழுத்தமாகச் சுட்டுகிறது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய பருவநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் பருவநிலை மாற்றத்திற்கான காரணிகளைத் தொகுத்துத் தருகிறது. பொதுமக்களின் வாழ்க்கைக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் உண்டான தொடர்பை வலுவான முறையிலும் எளிய நடையிலும் விளக்குகிறது. பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கவியலாதது என்று இந்த நூல் உணரவைக்கிறது.