• -10%

    எரியும் பனிக்காடு

    0
    Original price was: ₨ 760.0.Current price is: ₨ 684.0.
    Add to cart
  • -10%

    எல்லைப்புறம்.

    0

    பாலுமை முக்கிய சரடாக இந்நாவல் முழுவதும் இழயோடுகிறது. காதலும் காமமும், தசையுணர்வும் ஆத்ம தியானமும், வெறியும் பழிவாங்கலும், வியப்பும் ஏமாற்றமும், உஸ்ணமான ஆசையும் சுகமான கனவும், கட்டுப்பாடுகளும் மீறலும், விதிகளும் ஒத்திசைவுகளும் என்று பல்வேறு உணர்வுகள் மோதும் களமாகவும் இந்த நாவல் கருக்கொள்கிறது.

    Original price was: ₨ 1,200.0.Current price is: ₨ 1,080.0.
    Add to cart
  • -10%

    எழுதித் தீராப் பக்கங்கள்.

    0
    மூன்று நூற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று – மண்ணின் மக்கள் வேரற்று அலைந்து புகலிடம் தேடியதுதான். காலூன்றிய நிலத்திலிருந்து பெயர்ந்து முற்றிலும் அந்நியமான இடங்களில் அவர்கள் தம்மை பதித்துக்கொண்டார்கள். அவ்வாறு நாட்டைவிட்டு வெளியேறிய ஈழத் தமிழர்களில் முதல் தலைமுறையின் பிரதிநிதிகளில் செல்வம் அருளானந்தமும் ஒருவர்.
    ஈழத்திலிருந்து அகதியாக வெளியேறிய செல்வம் பாரீஸில் புகலிடம் தேடியவர். பின்னர் கனடாவில் புலம்பெயர்ந்தவரானார். இந்த மூன்று காலநிலைகளிலான தனது அனுபவங்களை மீள நினைவுகூர்வதே இந்த நூல். தன்னையும் தன்னைப் போன்ற வேர்பறிக்கப்பட்டவர்களின் பாடுகளையும் இந்த சுவிசேஷத்தில் வெளிப்படுத்துகிறார் செல்வம். நேற்றைய துயரங்களை இன்றைய வேடிக்கைகளாகப் பகிர்ந்துகொள்கிறார். நினைவுகளின் கசப்பையும் கண்ணீரின் உப்பையும் நகையுணர்வின் இனிப்போடு முன்வைக்கிறார். கூடவே யார் மீதும் பழிபோடாத செல்வத்தின் பேரிதயம் வேதனையைக் கடந்து மானுடத் தோழமையின் அமுதத்தைத் திரட்டி அளிக்கிறது.
    Original price was: ₨ 1,650.0.Current price is: ₨ 1,485.0.
    Add to cart
  • -10%

    எனது சிறிய யுத்தம்

    0
    Original price was: ₨ 600.0.Current price is: ₨ 540.0.
    Add to cart
  • -10%

    என்.கே.ரகுநாதம்

    0
    Original price was: ₨ 7,800.0.Current price is: ₨ 7,020.0.
    Add to cart
  • -9%

    என்றென்றும் தாரா.

    0

    உழுத்துப்போன ஒழுக்க நியதிகளைக் கிழித்தெறிந்த கலகக்காரியான கமலாதாஸ் வெவேறு காலகட்டங்களில் எழுதிய நான்கு குறுநாவல்களின் தொகுப்பு இந்நூல்.

    Original price was: ₨ 1,100.0.Current price is: ₨ 1,000.0.
    Add to cart
  • -10%

    என்ன பேசுவது! எப்படி பேசுவது!!

    0
    சொற்களால் மனிதன் உயர்ந்து நின்றான். மனிதர்களிலே சொற்களை நயமாக கையாளத் தெரிந்தவர்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதையும், அவற்றைப் பயன்படுத்த தெரியாதவர்கள் பாதாளத்தில் கிடப்பதையும் பார்க்கிறோம். நாம் பயன்படுத்தும் தகவல் பரிமாற்றம் நம் வாழ்வையே தீர்மானிக்கிறது;
    உரையாடலால் உயர்ந்தான் மனிதன்.
    மனிதன்,பேசும் திறனால் மகத்தானவன் ஆனான்.
    பேச்சு அவனை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்தியது.
    எழுத்து அவனை நாகரீகப்படுத்தியது. கடிதம் மனித இதயங்களை இணைத்தது.
    நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லுமே மகத்துவம் உடையது என்பதை அறிந்து கொள்ளாமலே நாம் பயன்படுத்துகிறோம். சொற்கள் வலிமை வாய்ந்தவை. சரியான தருணத்தில் சரியான ஏற்ற இறக்கத்தோடு அவற்றை உச்சரிக்கும் போது அவை அசுரபலம் பெற்று விடுகின்றன!
    Original price was: ₨ 7,800.0.Current price is: ₨ 7,020.0.
    Add to cart
  • -10%

    ஏவாளின் இரண்டாம் ஆப்பிள்.

    0

    கதாபாத்திரங்களினூடாக ஆசிரியர் தனக்கே இயல்பான சமூகம், அரசியல், அடையாளம் முதலான விவாதங்களை துவக்கி வைத்திருப்பது இக்கதையை ஒரு காதல் கதைக்கப்பால் சமூக, அரசியல்கதையாகப் பார்க்க வேண்டிய அவசியத்தையும் தூண்டியிருக்கிறது. மொத்தத்தில் இக்கதைகள் நமக்கு புதிய அனுபவத்தை தருவன.

    Original price was: ₨ 600.0.Current price is: ₨ 540.0.
    Add to cart
  • -10%

    ஏறுவெயில்.

    0

    1991இல் வெளியான ‘ஏறுவெயில்’ நாவலின் செம்மைப்படுத்தப்பட்ட ஐந்தாம் பதிப்பு இது. நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் உறவு கையில் விழுந்த பனிக்கட்டிகளாய்க் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரமுகங்கள் வெளிப்படுவதையும் தன் கொங்குத் தமிழில் பெருமாள்முருகன் சித்தரிக்கிறார். புதியவற்றின் வருகை நிகழ்த்தும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவியலாத மன நிலைக்கும் அவற்றைத் தவிர்க்க முடியாத சூழலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் மனிதர்களின் மனமொழியை நமக்குக் காட்சிப்படுத்துகிறார் முருகன். நேரான யதார்த்தக் கதை சொல்லலின் முக்கியத்துவத்தை இன்னமும் வெம்மை குறையாத ‘ஏறுவெயில்’ மீண்டும் நிரூபிக்கிறது.

    Original price was: ₨ 1,680.0.Current price is: ₨ 1,512.0.
    Add to cart
  • -10%

    ஐயனார் ஆடு

    0
    Original price was: ₨ 1,320.0.Current price is: ₨ 1,188.0.
    Add to cart
  • -10%

    ஒரு நாத்திகனின் பிரார்த்தனை.

    0

    பல்வேறு பிரிவினைகளால் நாம் சிதறுண்டு கிடந்தாலும் உண்மையில் இம்மனித இனம் ஒருவரை ஒருவர் ஆதரித்தும் சார்ந்தும் உதவியும் தான் தன்னை முன்னெடுத்துச் செல்ல விதிக்கப்பட்டது என்பது நிருபணம். அப்படித்தான் இந்த மனித விலங்கினம் பரிணாமம் பெற்று வந்திருக்கிறது. மனித எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றியே இக்கதைகள் பேசுகின்றன.

    Original price was: ₨ 600.0.Current price is: ₨ 540.0.
    Add to cart
  • -10%

    ஒரு புளியமரத்தின் கதை

    0
    Original price was: ₨ 1,500.0.Current price is: ₨ 1,350.0.
    Add to cart