-
-9%
கலையும் உளவியல் வெளியும்.
0பேராசிரியர் முனைவர் சபா.ஜெயராசா தமிழில் “கல்வியியல்” துறைசார்ந்த நூல்கள் பல எழுதி, அத்துறைசார் விருத்தியில் முதன்மையான பங்கு வகித்து வருபவர். கலை, இலக்கியம், உளவியல், தத்துவம் எனப் பல்வேறு துறைசார் புலங்களுடன் ஊடாடி வருபவர். இவற்றின் செழுமை மற்றும் அறிவு, ஆய்வு யாவும் இவரது “புலமைமரபு” எத்தகையது என்பதைத் தனித்துத் துல்லியமாக வெளிப்படுத்தும். மேலும் கலை, தத்துவம் பற்றிய தொடர் விசாரணை, இவரைப் புதிய அறிவுருவாக்கப் பணியில் முழுமையாக ஈடுபட வைப்பதுடன், கல்வியின் பொருள்கோடல் சார்ந்து புதிய புதிய அர்த்தப்பாடுகளை நோக்கிக் கவனம் குவிக்கவும் செய்கிறது. தொடர்ந்து புதிய ஆய்வுக் களங்கள் நோக்கியும் கவனம் கொள்ளத் தூண்டுகிறது.இன்றுவரை கல்வி உலகில் முனைவர் சபா.ஜெயராசா உயிர்ப்புமிகு புலமையாளராகவே திகழ்கிறார். -
-9%
கல்மேல் நடந்த காலம்.
0கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் பியதாசி யாரோ ஒரு சிங்கள மன்னன் என்று ஆய்வாளர்கள் எண்ணிக்கொண்டிருந்தவேளையில் ஜார்ஜ் டர்னர் என்ற ஆங்கில அதிகாரி அந்த பியதாசி வேறு யாருமல்ல அசோகர்தான் என்று வேறொரு பாலிமொழி ஆதாரத்தைக்கொண்டு நிறுவியதும் ஆய்வு திசைதிரும்பியதை ‘தேவர்களுக்கு பிரியமான அசோகர்’ என்ற கட்டுரை விவரிக்கிறது. அசோகர் போர்களையும் உயிர்ப்பலியிடுவதையும் எதிர்த்தபோதும் உணவுக்காகக் கொல்வதை அவர் தடுக்கவில்லை என்பதோடு மரக்கறி உணவை ஆதரிக்கவில்லை என்றும் இக்கட்டுரையில் வாசித்தபோது சற்று அதிர்ச்சியாக இருந்தது. அசோகர் புத்தமதத்தைத் தழுவினார் என்றதும் நாமாக மற்றவற்றைக் கற்பனைசெய்துகொண்டு அதுவே உண்மை என்று நம்பத்தொடங்கிவிடுகிறோம்.
-
-9%
கல்வியில் தொடர் தொழில் வழிகாட்டல்.
0தொடர் தொழில் வழிகாட்டலுக்கான கல்வித்திட்டங்கள் தனிநபர்களைக் குவியப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன.ஒவ்வொருவரும் தத்தமது ஆற்றல்கள் பற்றித் தம்மை தாமே மதிப்பீடு செய்வதற்கும், தம்மைப் பற்றிய சுயபிரஞ்ஞை கொள்வதற்கும் வழியமைக்கப்படுகின்றது. -
-9%
கல்வியில் வெற்றிகரமான கற்றல்-கற்பித்தல்.
0சிறந்ததொரு ஆரம்பக்கல்வி ஆசிரியர் வெறுமனே பயிற்சி நூல்களை மட்டும் நம்பியிருக்கமாட்டார்.தனது கற்பித்தலினூடாக மாணவருக்கு விடயங்களை விளக்குவார். மாணவர்களின் சுயசிந்தனையை விருத்தி செய்யத்தக்க முறையில் மாணவர்களுக்கு கற்பிப்பார். -
-14%
கவிதையும் அரசியலும்.
0“கவிதையும் அரசியலும் பற்றிப் பேசுவது முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப்போடுவது போன்றது என்று கருதும் இலக்கிய விற்பன்னர்கள் சிலர் இன்றும் இருக்கின்றார்கள். அவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் கவிதை எப்பொழுதும் அரசியலுடன் ஏதோ ஒருவகையில் தொடர்புகொண்டே வந்திருப்பதை நாம் மறுக்கமுடியாது.அரசியல் என்பதை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பது இங்கு முக்கியமானது. அதன் குறுகிய அர்த்தத்தில் அரசியல் என்பது ஆட்சி அதிகாரம் தொடர்பான விவகாரங்களைக் குறிக்கின்றது. ஆனால் அதன் பரந்த அர்த்தத்தில் அரசியல் என்பது மனிதர்களின் அனைத்து சமூக நடத்தைகளையும் செயற்பாடுகளையும் சமூகப் பிரச்சனைகளையும் உள்ளடக்கும். அவ்வகையில் பார்த்தால் அரசியலுக்குப் புறம்பான மனித விவகாரங்கள் எவையும் இல்லை எனலாம். மத அரசியல், மொழி அரசியல், பண்பாட்டு அரசியல் என்றெல்லாம் நாம் இன்று பேசுகிறோம். இலக்கிய அரசியல், வாசிப்பின் அரசியல் என்பவற்றையும் நாம் இவற்றோடு சேர்த்துக்கொள்ளலாம்.” -
-12%
களிநெல்லிக்கனி.
0பழந்தமிழ் இலக்கியத்தைக் கவிதையாக அணுகி விளக்கும் நூல்கள் சமீப காலத்தில் வரவில்லை. அக் குறையைப் போக்கும் நூல்களைக் கவிஞர் இசை எழுதி வருகிறார். ‘பழைய யானைக் கடை’, ‘தேனொடு மீன்’, ‘மாலை மலரும் நோய்’ முதலியவற்றின் வரிசையில் இப்போது ‘களிநெல்லிக்கனி.’ தமிழ் மரபில் பெண் புலவருக்கு ‘ஒளவை’ என்னும் பொதுப்பெயர் சூட்டுதல் வழக்கமாக இருந்திருக்கிறது. ஏறத்தாழ எட்டு ஒளவையார்கள் எழுதிய பல நூல்களையும் முழுமையாக வாசித்துப் பொருளுணர்ந்து, உரை இல்லாதவற்றையும் முயன்று கற்று இந்நூலை எழுதியிருக்கிறார். நவீன இலக்கிய வாசகர்களுக்கு மரபிலக்கியக் கவிச்சுவையை உணர்த்தும் நோக்கம் கொண்ட நூல் இது. எளிய மொழி, மென்மையான விமர்சனம், சுயபகடி, கவிச்சொல்லைச் சிக்கெனப் பிடித்து விதந்தோதல், மரபிலக்கியம் மீதான மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு தேன் தடவிய விரலால் இசை எழுதியிருக்கும் இந்நூல் வாசிக்க வாசிக்க நாவூறச் செய்கிறது.-பெருமாள்முருகன் -
-9%
கள்வனின் காதலி.
0கள்வனின் காதலி, நாளடைவில், கடவுளின் காதலி ஆனாள்.கல்கியின் நல்ல நாவல் இது ரொம்ப அருமையான காதல்,தங்கை அன்பு,காவல் அதிகாரியின் நடவடிக்கைகள் எல்லாம் கதை படிக்க தூண்டு கொண்டு போகும் கள்வனின் காதலி, நாளடைவில், கடவுளின் காதலி ஆனாள். -
-9%
கறுப்புக் குதிரை.
0இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் ‘புதிய தூண்டில் கதைகள்’ என்ற பொதுத் தலைப்பில் ஆனந்தவிகடன் பத்திரகையில் வந்தவை. இதில் கறுப்புக் குதிரை என்கிற கிரிக்கெட் சார்ந்த கதை மேட்ச் ஃபிக்ஸிங் என்றால் என்ன என்றே தெரிந்திராத காலத்தில் எழுதப்பட்டது. இன்று இந்தக் கதை உண்மைக்கு மிக அருகில் வந்துவிட்டது. சுஜாதாவுக்கே ஆச்சரியம் அளித்ததாக எழுதியிருக்கிறார்.‘தூண்டில் கதைகள்’ என்கிற தலைப்பில் இவர் முதலில் எழுதிய 12 கதைகளும் தொகுப்பாக வந்துள்ளன. அவைகளைத் தொடர்ந்து, அதே வகையில் கடைசியில் எதிர்பாராத திருப்பம் தரும் கதைகளை எழுத வாசகர்கள் கேட்டுக் கொண்டதால் எழுதப்பட்ட கதைகள் இவை. -
-9%
கற்றல் இடர்பாடுகளும் தீர்வுகளும்.
0கற்றல் கற்பித்தலிலே எதிர்கொள்ளப்படும் இடர்களைப் பகுத்து ஆராய்தலும் அவற்றுக்குரிய தீர்வுகளைக் குவியப்படுத்தலும் கல்வி உளவியலின் சிறப்பார்ந்த முன்னெடுப்புக்களாகவுள்ளன.இத்துறையில் நிகழ்ந்துவரும் அண்மைக்காலத்தைய ஆய்வுகளை அடியொற்றி இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வறுமையாலும் சமூக நிராகரிப்புக்களாலும் இடர் தழுவிய கற்போர் அல்லது ஆபத்து விளிம்பிலுள்ள கற்போரின் எண்ணிக்கையும் பிரச்சினைகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.அவர்களை வளமான கல்விச் செயல்முறையில் உள்ளடக்கும் நடவடிக்கைகள் எழுகோலம் கொண்டுள்ள சமகாலச் சூழலிற் பயன்கருதி இந்நூலாக்கம் முன்வைக்கப்படுகிறது. -
-3%
கற்றல் கற்பித்தல்: மேம்பாட்டுக்கான வழிமுறைகள்.
0———————————இன்று கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.இவை ஆசிரியர்களது கல்விச் செயற்பாட்டிலும் உடனடியாக மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. கடந்தகாலம் பற்றிய நோக்கினைக் கைவிட்டு எதிர்காலம் பற்றிய புதிய நோக்கினைக் கைக்கொள்ள நேரிடுகின்றன. துரிதகதியில் மாற்றங்கள் ஏற்படும் போது கடந்தகால எடுகோள்கள், நோக்கங்கள் பெறுமதியற்றதாகி விடுகின்றன.கற்றல்-கற்பித்தல் செயன்முறையும் உயிர்ப்பற்றதாகி விடுகின்றது. -
-10%
கனவுகள் விற்பவன்.
0எதுவும் முடிவல்ல மாறும். எல்லாம் தேடித் தேடி மனுசக் கூட்டம் இங்கேதான் வரும் இதுவே இயல்பு, இதுவே தடம். இதுவே வழி என்று தோன்றியது.மழை விடாது கொட்டியது. -
-9%
கனவுத்தொழிற்சாலை.
0கனவுத்தொழிற்சாலையின் மையக்கதாபாத்திரம் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் அருண். அவனை விரும்பும் பிரேமலதாவை மணந்துகொள்கிறான். பின்னர் அவளுடைய பிறதொடர்பை உணர்ந்து விவாகரத்து நோக்கிச் செல்கிறான். அவன் புகழ் மங்கிக்கொண்டிருக்கிறது. ஆகவே சுயமாக படம் தயாரித்து சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறான். அவனுடைய வீழ்ச்சியை மக்களும் சினிமா உலகமும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்த மையக்கதையுடன் இணையும் பல துணைக்கதைகள். ஒரு நடிகையாகவேண்டும் என வந்து விபச்சாரியாகி தற்கொலை செய்துகொள்ளும் மனோன்மணி. பிச்சையெடுக்கும் நிலையில் இருந்து பாடலாசிரியர் ஆனபின் குடித்தே சீரழியும் அருமைராசன் என பல்வேறு கதைமாந்தர் நாவலுக்குள் உள்ளனர். சினிமாவுலகின் ஒரு முழுச்சித்திரத்தையும் அளிக்கும் நாவல்கனவுத்தொழிற்சாலை முழுமையாகவே சினிமா உலகம் பற்றி எழுதப்பட்ட நாவல். சினிமாவை புலமாக கொண்டு அசோகமித்திரன் எழுதிய கரைந்த நிழல்கள் முன்னரே வெளிவந்துள்ளது. ஜெயமோகன் பின்னர் எழுதிய கன்னியாகுமரி சினிமா உலகை பின்னணியாகக் கொண்டது. இந்நாவலில் சுஜாதா மர்மம், திகில் போன்றவற்றை நோக்கிச் செல்லாமல் சினிமா உலகில் எழுச்சியும் வீழ்ச்சியும் நிகழ்வதை சுருக்கமான மொழியில் விரைவான சித்திரங்கள் வழியாகச் சொல்கிறார். சாமானியர்களுக்கு சினிமாவில் புகழ்பெற்றவர்கள் மேல் இருக்கும் ஈடுபாடும், உள்ளார்ந்த பொறாமைகலந்த வெறுப்பும் ஒரே சமயம் பதிவானமையால் குறிப்பிடத்தக்க படைப்பாக கருதப்படுகிறது