-
-9%
அகாலத்தில் கரைந்த நிழல்.
0Original price was: ₨ 990.0.₨ 900.0Current price is: ₨ 900.0.அவளைப் பொறுத்தளவில் நிறைவேறாத ஆசையாக அரைகுறையாகக் கட்டப்பட்டுள்ள வீட்டுடன் நிறைவு பெறுகிறது. பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தான் ஒருமுறை வெளிநாடு சென்று விட்டால், போதும் பின் அதுவே இரண்டாம், மூன்றாம் முறை எனத் தொடர்கிறது. பழக்கமும் பரீட்சயமும் பெற்று விடுகிறது. அதுவே சாகும் வரையான வாழ்வாகி விடுகிறதுவெளிநாட்டு வாழ்வின் சுகமும் குதூகலமும் வரையறுக்கப்பட்ட ஒரு சிலருக்கே வரமாக வாய்க்கிறது.’ -
-10%
-
-10%
-
-10%
அங்கீகரிக்கப்படாத கனவின் வலி.
0Original price was: ₨ 600.0.₨ 540.0Current price is: ₨ 540.0.நாம் வாழும் காலம், வரலாற்றின் சுழற்சியில், ஒரு இக்கட்டான கட்டத்தை எட்டியிருக்கிறது. சமூக வாழ்வின் பல துறைகளிலும் அர்ப்பணிப்புகளும் அறங்களும் கேலிப் பொருள்களாகிவிட்டன. வசதிகளின் பெருக்கத்தையே வாழ்வின் மேன்மையாகவும் வெற்றியாகவும் கருதும் மனோபாவம் நம்மைப் பீடித்திருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சிறந்த அம்சத்தை வெளிப்படுத்தாத பட்சத்தில் இந்த உலகம் இதை விடவும் மோசமான கட்டத்தை அடையும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் என் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்டது ஒன்றுதான்: எந்தவொரு காத்திரமான செயலையும் தொடர்ந்து நம்பிக்கையுடன் மேற்கொண்டு வந்தால், அது தன்னளவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
-
-10%
-
-10%
அசோகனின் வைத்தியசாலை.
0Original price was: ₨ 1,800.0.₨ 1,620.0Current price is: ₨ 1,620.0.மாமன்னர் அசோகர் மிருகங்களுக்காக ஒரு வைத்திய சாலையை அமைத்தார் என்பது வரலாறு. ஒரு அம்மையார் தர்மத்துக்காக அமைத்த மிருக வைத்தியசாலையில் பணிபுரியும் சிவாவின் அனுபங்களே இந்த நாவலின் உடல்.இந்த வாழ்க்கை மனிதர்களால் மட்டும் ஆனது அல்ல, மிருகங்களும் வாழ்க்கையின் பிரஜைகளே என்ற பார்வை. இன்னொன்று இங்கே மிருகங்கள் என சொல்லப்பட்டிருப்பவை மிருகங்கள்தானா என்ற எண்ணம். நோக்கிச் செலுத்துகிறது. அதுவே இந்நாவலின் அழகியலின் வெற்றி
-ஜெயமோகன்
-
-10%
அடித்தள மக்கள் வரலாறு.
0Original price was: ₨ 1,980.0.₨ 1,782.0Current price is: ₨ 1,782.0.ஆ.சிவசுப்பிரமணியன் தமிழகத்தின் நன்கு அறியப்பட்ட மார்க்சியக் கருத்துநிலையாளர்; செயல்பாட்டாளர்; ஆய்வாளர், தமிழகத்தின் மிகச் சிறந்த, புகழ்பெற்ற நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர், சிக்கலான கோட்பாட்டு முட்டுச் சந்துகளில் நின்றுவிடாமல், தமிழகத்தின் மக்கள் இயக்கங்கள் முகம்கொடுக்கும் சிக்கல்களை மனதில்கொண்டு அவரது ஆய்வுப் பயணம் தொடர்ந்து செல்கின்றது. இப்படிப்பட்ட அவர் இந்நூல் மூலம் அடித்தள மக்கள் வரலாற்று ஆய்வுமுறையியலைத் தமிழக வரலாற்று எழுதியலுக்குக் கையாள்வதன் வழி புதிய வெளிச்சங்களைக் காட்டுகின்றார். இந்நூலில் எளியோர் வாழ்க்கையைப் புதிய சிந்தனை ஊற்றுகள் பொங்கும் தளங்களாகத் தரிசிக்க வைக்கின்றார். பிழைகளைக் களைந்து புதிய செம்மையான பதிப்பாக வரும் இந்நூல் தமிழக வரலாற்றைக் கற்க விரும்புவோர்க்கான அரிய பெட்டகம்..
-
-10%
அதர் இருள்.
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.உக்ரேன்-ரஷ்ய போர் ஆரம்பித்து ஒரு மாதம் முடிந்தபோது எனது நண்பி சிசில் மூலம் லானாவைச் சந்தித்தேன். சிசிலின் நண்பர்களான வைத்திய இணையர் உக்ரேன் எல்லைக்கு சென்று லானாவையும் அவள் மகனையும் அழைத்து வந்து தங்கள் வீட்டில் வைத்திருக்கிறார்கள். குறுந்தொகையில் ஒரு பாட்டில் தன் மகள் காதலனோடு காட்டு வழியே சென்றதை எண்ணி தாய் ஏங்குகிறாள். கடும் பசியோடு புலிகள் பதுங்கி இருக்கும் அந்த காட்டுப் பாதையில் எப்படி அவள் போனாளோ என்று பதை பதைக்கிறது அவள் இதயம், இதை எழுதி முடிக்கும் போதும் கைபேசியைப் பார்க்கிறேன் லானாவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
-
-10%
-
-12%
அந்தோன் செகாவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்.
0Original price was: ₨ 2,200.0.₨ 1,947.0Current price is: ₨ 1,947.0.அந்தோன் செகாவின் கதைகளைப் படிக்கையில், கூதிர்ப்பருவத்தின் கடைப் பகுதியில் சோகமான ‘நாளுக்குரிய உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன – காற்று தெளிந்து, இலையற்றகிளைகளை விரித்து நிற்கும் மரங்களது கூர்மையான உருவரை பளிச்செனத் தெரிகிறது. வீடுகள் ஒடுங்கிக்கொண்டு மனிதர்கள் சோர்ந்து ! போயிருக்கிறார்கள், தனிமையால் வாட்டமடைந்து, சலனமற்று, சக்தியிழந்து யாவும் விசித்திரமாய் இருக்கின்றன. ஆழமான நீலத் தொலைவுகள்வெறுமையாய் இருக்கின்றன, வெளிறிய வானத்துடன் கலந்து குளிரில் கெட்டியான சேறு மூடிய நிலத்தின் மீது அவை சோர்வு தரும் குளிர்மூச்சு விடுகின்றன. ஆனால் கூதிர் காலத்து வெயிலைப் போல் கதாசிரியரது சிந்தையானது – தடங்கள் பதிந்த பாதைகள் மீதும், கோணலான தெருக்கள் மீதும், சேறு படிந்த நெரிசலான வீடுகள்மீதும் திகழொளி வீசிக் காட்டுகிறது.
-
-10%
-
-10%