-
-9%
அலுவலகத்தில் உடல்மொழி.
0Original price was: ₨ 1,925.0.₨ 1,750.0Current price is: ₨ 1,750.0.ஒரு மனிதன் நினைப்பதிலிருந்து உணர்வதிலிருந்து அவர் பேசுவது வேறுபட்டு இருக்கிறது என்பதை அவரது உடல் மொழி வெளிப்படுத்துகிறது. துணைவரை தேர்ந்தெடுப்பது முதல் எந்தச் சூழளையும் தைரியமாக எதிர்கொள்ளவதற்கு தேவையான உடல் மொழி ரகசியங்களை நீங்கள் அறிந்து கொள்ள இந்த நூல் பயன்படும். ஒருவரது அசைவுகளை வைத்தே அவரின் எண்ணங்களை உணர்வுகளைஒரு மனிதன் நினைப்பதிலிருந்து உணர்வதிலிருந்து அவர் பேசுவது வேறுபட்டு இருக்கிறது என்பதை அவரது உடல் மொழி வெளிப்படுத்துகிறது.
-
-10%
அலை புரளும் வாழ்க்கை: சென்னை – சில சித்திரங்கள்
0Original price was: ₨ 360.0.₨ 324.0Current price is: ₨ 324.0. -
-10%
-
-10%
அவனைக் கண்டீர்களா?
0Original price was: ₨ 1,620.0.₨ 1,458.0Current price is: ₨ 1,458.0.பா. அ. ஜயகரனின் மூன்றாவது கதைத் தொகுதி இது. அரசுகளாலும் அமைப்புகளாலும் கைவிடப்பட்ட, துண்டாடப்பட்ட, தூக்கி எறியப்பட்ட மனிதர்கள் கதைகள் இவை. இந்தக் கதையின் மனிதர்களை ஆசிரியர் இரத்தமும் சதையுமாக ஆளமான இணக்கத்தோடு வரைந்து காட்டுகிறார். காட்சிகளையும் மனித மனங்களையும் துல்லியமாக நறுக்குத் தெறித்தாற்போன்ற விவரணைகளோடு எழுதிக்காட்டும் ஆசிரியர் மனிதர்களின் இதத்தை இக்கதைகளில் துலக்கிக் காட்டுகிறார். புலம்பெயர் சூழலில் சமகால கதைகளை எழுதிவரும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக பா. அ. ஜயகரனை இத்தொகுதி அடையாளம் காட்டும்
-
-10%
-
-10%
அழகோ அழகு
0Original price was: ₨ 870.0.₨ 783.0Current price is: ₨ 783.0.பண்டைக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களும்பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர்.தமிழ்நாட்டில் மணிக்கொடிகாலம் முதற்கொண்டு எண்ணற்ற அறிஞர்கள் சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்றுள்ளனர்.தற்காலத்தில் கதை இலக்கியங்களைப் படைப்பதையே தம் தமிழ்த் தொண்டாக்க் கருதும்அறிஞர்களால் மொழியும் நாடும் பெருமை பெற்றுள்ளன.மேலும் அரசு, தனியார் அலுவலகப்பொறுப்புக்களை ஏற்றுச் செவ்வனே செயல்படுவதோடு கதை, கவிதை, கட்டுரை புதினம்போன்ற இலக்கியங்களைப் படைக்கும் ஆற்றல் உள்ளவர்களும் நமது நாட்டில் எண்ணிலடங்கார்.இயற்கையாகவே அழகு, ஒப்பனையில் மேலும் அழகாக விளங்கிய மாணவி, படிப்பில்அக்கறை செலுத்தாது தன் அழகால் யாவரையும் கவர்ந்தவள், தன் சொந்த ஊரில் அழகுப்போட்டியிலும் பரிசு பெற்றவள், ஆனால், சென்னைக் கல்லுரியில் தன்னை விட அறிவிலும்அழகிலும் சிறந்த மாணவியரைக் கண்டு தற்மெருமை, தற்புகழ்ச்சி கூடாது என்பதையும்கல்வியே அழகு என்பதையும் ‘அழகோ அழகு’ கதையின் மூலம் அறிவுறுத்துகிறார். -
-10%
அறிந்திராத யுவதியிடமிருந்து கடிதம்.
0Original price was: ₨ 1,140.0.₨ 1,026.0Current price is: ₨ 1,026.0.1922 இல் ஆஸ்திரிய எழுத்தாளர் ஸ்டீபன் ஸ்வேய்க் ஜெர்மனியில் எழுதிய குறுநாவல் இது. கடித வடிவில். நூறு ஆண்டுகள் நினைவுறும் 2022 இல் தமிழில் வருகிறது.
-
-9%
அனர்த்த முகாமைத்துவம்.
0Original price was: ₨ 1,760.0.₨ 1,600.0Current price is: ₨ 1,600.0.மேற்கு மாகாணத்தில் கட்டிடங்கள் அதிகம் நிர்மாணிக்கப்படுகின்றன.இதனால் மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ஏற்படும் சிறிய அளவிலான நிலநடுக்கம் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.ஏனெனில் இயற்கையை பற்றி எந்த விதமான கரிசனையும் இல்லாமல் தன்னுடைய தேவையை பற்றி மட்டுமே மனிதன் சிந்திக்கிறான். -
-10%
அன்னா கரீனினா 1 & 2
0Original price was: ₨ 6,000.0.₨ 5,400.0Current price is: ₨ 5,400.0.உலகின் மிகச்சிறந்த நாவல்,
டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனினா’ வெறும் நாவல் மட்டுமல்ல. பெரிய காவியம், தன்னுள்ளே முத்துக்களை வைத்திருக்கும் மகா சமுத்திரம். இதில் வரும் கதாபாத்திரங்களை முற்றிலும் கற்பனையான ஜீவன்கள் என்று கூற முடியாது. அவர் ஏட்டில் தீட்டியுள்ள அன்னாவையும், ஆப்லான்ஸ்கியையும், கரீனினாவையும், விரான்ஸ்கியையும், கிட்டியையும். டாலியையும், லெவினையும் ரஷ்யாவில் மட்டுமின்றி இந்த தேசத்திலே, இந்த உலகத்திலே எங்கும் காணலாம். அத்தனை பேரும் இன்றும் என்றும் காணப்படக்கூடிய உயிர்ச்சித்திரங்கள், மனித சமுதாயத்துக்கு ‘அன்னா கரீனினா’ ஒரு வரப்பிரசாதம்.
மனோரஞ்சித மலருக்கு ஒரு விசேஷ குணம் உண்டென்று சொல்லுவார்கள். அந்த மலரை நுகரும்பொழுது எந்த மலரின் வாசனையை நினைத்துக்கொண்டு நுகருகிறோமோ அந்த வாசனையைத் தருமாம் மனோரஞ்சிதம். அதுபோலத்தான் ‘அன்னா கரீனினா’ என்ற இந்தப் படைப்பும்.
-
-10%
ஆதிரை.
0Original price was: ₨ 4,500.0.₨ 4,050.0Current price is: ₨ 4,050.0.தமிழர் வரலாற்றின் மாபெரும் விடுதலைப் போராட்டக்களத்தில் இருந்த தாய்மார்கள், பிள்ளைகளின் வாழ்க்கைச் சித்திரம் இது. தமிழன்னையின் கண்ணீர்த் துளி. சயந்தனின் ஆதிரை, ஓர் ஒற்றைக் குரலாக, ஒற்றை உண்மையை மட்டும் வாசகருக்குக் காட்டாமல், ஆசிரியரின் குரலுக்கு அப்பால் சென்றும் பல குரல்களை கேட்க முடிகின்ற, பிரதியில் கூற எத்தனிக்கும் உண்மையைத் தாண்டியும் மேலதிக உண்மையைப் பெறுவதற்கான வாசக சாத்தியங்களைக் கொண்டிருக்கின்ற ஒரு இலக்கியப் பிரதியாக வெளியாகியிருக்கின்றது. தன் இருப்பிற்காகப் போராடிக்கொண்டிருக்கும் தனித்துவிடப்பட்ட இனமொன்றின், கடை நிலை மாந்தர்களைப் பற்றியும், போராட்டத்தின் மேன்மைகள், கீழ்மைகள் யாவற்றையும் எழுத்தாளரின் அக, புற உணர்வுகளோடு அருமையாக வெளிப்படுத்தி நிற்கிறது இந்நாவல். மக்களின் அனுபவங்களை நேர்த்தியான கதைகளாகத் தொகுப்பதன் மூலம் நாவலுக்கான ஒரு வடிவம் நெய்யப்பட்டிருப்பினும்கூட, வாசகர்களே நிரப்புவதற்கான இடைவெளிகளும் உண்டு. நிறைய இடங்களில் அது வாசகர்களிடம் ’வேலை வாங்குகிறது’ நாவலின் தொடக்கத்தில் தனி அத்தியாயமாக வரும் லெட்சுமணன் என்ற பாத்திரத்திற்கு முடிவில் என்ன நடந்திருக்குமென்பதை, வாசகரே தன்னுடைய கற்பனையாலும், ஊகத்தினாலும் நிரப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இறுதி அத்தியாயத்தில் மட்டுமே வருகின்ற ஆதிரையின் சொல்லப்படாத வாழ்வை, ஒரு தனி நாவலாகவே வாசகர்களால் கற்பனையில் சிருஷ்டித்துக்கொள்ளமுடியும். இவ்வாறான சாத்தியங்கள் நாவலோடு தனித்துவமான ஒரு நெருக்கத்தை வாசகர்களோடு ஏற்படுத்துகின்றன. ஈழப்போர் என்ற தரிசனத்தை, அந்தப்போரின் நேரடி வீச்சுக்குள் வாழ்ந்த சாதாரண அடித்தட்டு மக்களின் பார்வையில் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்படுத்தி எல்லாக்கோணத்திலிருந்தும் அணுகும் சுதந்திரத்தை ஆதிரை உருவாக்கி அளிக்கின்றது. வெறும் அனுபவங்களை எழுதிவிடாது, படைப்பாற்றல் மூலம், அனுபவங்களுக்கிடையிலான சங்கிலித் தொடரை சாதுரியமாக உருவாக்கி, இலக்கியப் பிரதிக்கான அழகியலை சயந்தன் படைத்திருக்கின்றார். ஈழப்போர் பற்றிய தர்க்கங்களை, விடைகாணவியலாத வினாக்களை ஆதிரையின் பாத்திரங்களைக்கொண்டு கேட்க வைப்பதன் மூலம் ஒற்றைப்படையான நகர்வைத் தவிர்த்து வாசகரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பல கோணங்களில் பார்க்கச் செய்கின்றது ஆதிரை.
-
-10%
-
-10%