-
-9%
ஆசிரியரை விளைதிறன் மிக்கவராக்கள்.
0மாணவர்களின் வேலைகளை மதிப்பீடு செய்யும் போது அவர்களிடமுள்ள தவறுகள் கண்டறியப்பட்டு,அவற்றை திருத்துவதற்கான மேலதிக கற்பித்தல் நிகழ்ச்சித்திட்ட தயாரிப்பையும்,துணைச்சாதன பயன்பாட்டையும் விருத்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபட வேண்டும். -
-8%
ஆதிரை.
0தமிழர் வரலாற்றின் மாபெரும் விடுதலைப் போராட்டக்களத்தில் இருந்த தாய்மார்கள், பிள்ளைகளின் வாழ்க்கைச் சித்திரம் இது. தமிழன்னையின் கண்ணீர்த் துளி. சயந்தனின் ஆதிரை, ஓர் ஒற்றைக் குரலாக, ஒற்றை உண்மையை மட்டும் வாசகருக்குக் காட்டாமல், ஆசிரியரின் குரலுக்கு அப்பால் சென்றும் பல குரல்களை கேட்க முடிகின்ற, பிரதியில் கூற எத்தனிக்கும் உண்மையைத் தாண்டியும் மேலதிக உண்மையைப் பெறுவதற்கான வாசக சாத்தியங்களைக் கொண்டிருக்கின்ற ஒரு இலக்கியப் பிரதியாக வெளியாகியிருக்கின்றது. தன் இருப்பிற்காகப் போராடிக்கொண்டிருக்கும் தனித்துவிடப்பட்ட இனமொன்றின், கடை நிலை மாந்தர்களைப் பற்றியும், போராட்டத்தின் மேன்மைகள், கீழ்மைகள் யாவற்றையும் எழுத்தாளரின் அக, புற உணர்வுகளோடு அருமையாக வெளிப்படுத்தி நிற்கிறது இந்நாவல். மக்களின் அனுபவங்களை நேர்த்தியான கதைகளாகத் தொகுப்பதன் மூலம் நாவலுக்கான ஒரு வடிவம் நெய்யப்பட்டிருப்பினும்கூட, வாசகர்களே நிரப்புவதற்கான இடைவெளிகளும் உண்டு. நிறைய இடங்களில் அது வாசகர்களிடம் ’வேலை வாங்குகிறது’ நாவலின் தொடக்கத்தில் தனி அத்தியாயமாக வரும் லெட்சுமணன் என்ற பாத்திரத்திற்கு முடிவில் என்ன நடந்திருக்குமென்பதை, வாசகரே தன்னுடைய கற்பனையாலும், ஊகத்தினாலும் நிரப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இறுதி அத்தியாயத்தில் மட்டுமே வருகின்ற ஆதிரையின் சொல்லப்படாத வாழ்வை, ஒரு தனி நாவலாகவே வாசகர்களால் கற்பனையில் சிருஷ்டித்துக்கொள்ளமுடியும். இவ்வாறான சாத்தியங்கள் நாவலோடு தனித்துவமான ஒரு நெருக்கத்தை வாசகர்களோடு ஏற்படுத்துகின்றன. ஈழப்போர் என்ற தரிசனத்தை, அந்தப்போரின் நேரடி வீச்சுக்குள் வாழ்ந்த சாதாரண அடித்தட்டு மக்களின் பார்வையில் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்படுத்தி எல்லாக்கோணத்திலிருந்தும் அணுகும் சுதந்திரத்தை ஆதிரை உருவாக்கி அளிக்கின்றது. வெறும் அனுபவங்களை எழுதிவிடாது, படைப்பாற்றல் மூலம், அனுபவங்களுக்கிடையிலான சங்கிலித் தொடரை சாதுரியமாக உருவாக்கி, இலக்கியப் பிரதிக்கான அழகியலை சயந்தன் படைத்திருக்கின்றார். ஈழப்போர் பற்றிய தர்க்கங்களை, விடைகாணவியலாத வினாக்களை ஆதிரையின் பாத்திரங்களைக்கொண்டு கேட்க வைப்பதன் மூலம் ஒற்றைப்படையான நகர்வைத் தவிர்த்து வாசகரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பல கோணங்களில் பார்க்கச் செய்கின்றது ஆதிரை.
-
-9%
ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை..,
0மொழியியல் ஆய்வாளர். சொல்லாய்வில் ஈடுபட்டிருந்தார். தமிழின் சொல்லிக்கணத்தை விரிவாக தமிழ் வினைச் சொற்களின் அமைப்பு என்னும் தலைப்பில் இரு தொகுதிகளாக எழுதினார். தமிழ்ச் சொற்களின் பிறப்பு நெறி அவர் எழுதிய இன்னொரு குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்சுமேரிய மொழி ஆராய்ச்சியில் 23 ஆண்டுகள் ஈடுபட்டிருந்தார். ’சுமேரியன் ஒரு திராவிட மொழி’ என்ற நூலை இவர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். சுமேரிய மொழிக்கும் தமிழுக்குமான சொல்லிணக்கணத்தின் பொதுத்தன்மையை விரிவாக எழுதினார். -
-9%
ஆளண்டாப்பட்சி.
0பெருமாள்முருகனின் ஆறாவது நாவல் இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக்கொள்ளலாம், பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்ப்பந்தத்தால் விடுபட்டுப் புலம்பெயர்ந்து வேற்றிடத்தில் நிலைகொள்ளும் உழவுக் குடும்பம் ஒன்றின் போராட்டமே இந்நாவல். மனிதர்களை அண்டவிடாத அதேசமயம் நல்லவர்களுக்கு உதவும் பண்பும் கொண்ட பிரம்மாண்டமான பறவையாகக் கொங்கு நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஆளண்டாப் பட்சியின் இயல்புகள் இந்நாவல் மாந்தர்கள் பலருக்கும் பொருந்திப் போகின்றன.
-
-9%
ஆறாம் விரல்.
0இந்த கதைகள் எல்லாம் மானுடத்தைப் புரிந்துகொள்ள மனிதத்தைப் பலப்படுத்த உறுதுணை புரிபவை. அந்த வகயில் ஜவ்வாது முஸ்தபா கதைகள் தமிழ்ச் சமூகத்தில் அவசியமான பிரதி எனலாம்.
-
-7%
ஆன்மீகத்தின் அற்புத ஆற்றல்.
0ஆன்மீகத்தை ஒரு விஞ்ஞானி ஆரய்ந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்நுல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
-
-9%
ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள், ஆளுமைகள்.
0இருபதாம் நூற்றாண்டு இந்திய, உலக அறிஞர்கள், ஆளுமைகள் சிலரது சித்திரங்கள் இந்நூல். வரலாறு, சமூகம், மொழி சார்ந்து செயல்பட்ட இவர்களுடைய வாழ்க்கையினூடாக சமூக அசைவியக்கத்தை புலப்படுத்தும் நவீன நடைச்சித்திரங்கள் இவை. முற்றிலும் புதிய செய்திகள், அப்படியே தெரிந்த தகவல்களை சுட்ட நேர்ந்தாலும் அவற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சுபவை இவை. தீராத ஆய்வின் நுட்பம், வாளினும் கூரிய சொற்கள், மிகையோ வெற்றுச்சொல்லோ பயிலாத் தொடர்கள், இவற்றுக்கும் மேலாக உலகளாவிய பார்வை போன்ற ஆ. இரா. வெங்கடாசலபதியின் தனித்துவங்கள் பல மிளிரும் சித்திரங்கள் இந்நூல்.இந்த ஆளுமைகளைப் பற்றி முன்பின் அறியாதவர்களை இந்நூல் ஆச்சரியப்படுத்தும்; அறிந்தவர்களை மேலும் ஆச்சரியப்படுத்தும். -
-9%
இடைவெளிகளின் எதிரொலி.
0அதீதமான உணர்வுகளின் குவியாலகவோ ஓங்கி ஒலிக்கும் இறுதி முடிவுகளைக் கொண்டதாகவோ இல்லாமலிருக்கிற சண்முகத்தின் கவிதைகள் எல்லா நாட்களையும் மலர்ச்சியுற்ற நாட்களாகவே பார்க்கின்றன. பொய்த்தலின் நீங்கா வசீகரம் இருப்பினும் எந்தப் பொய் மானையும் தேடி ஓடாமலிருப்பவை அவை.
-
-9%
இத்தா.
0நாவலின் மையமான புள்ளியாக இருப்பது இத்தா’ என்கிற சடங்கு. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் எல்லாப் பெண்களும் ஆண்களும் தனித்திருத்தல் என்பதை அறிந்து கொண்டுவிட்டோம். ஆனால் இந்த இத்தா என்பது கணவனை இழந்த அல்லது கணவனால் தலாக் செய்யப்பட்ட அல்லது காணாமல்போன பெண்கள் தங்கள் தூய்மையை உலகுக்குக் காட்ட மூன்று மாதவிலக்குக் காலம் தனித்திருக்க வேண்டும். என்கிற சடங்கு. கணவனின் கணவன் உடல் முகத்தைக் கூடப் பார்க்காத கணவனின் கைவிரல் நகம் கூடத் தன் மீது படாத மரியம் ஏன் இத்தா என்னும் தனிமைச் சிறைக்குள் அடைபட வேண்டும் என்கிற கேள்வியை நாவல் அழுத்தமாக எழுப்புகிறது. இஸ்லாத்தில் மட்டுமல்ல. எல்லா மதங்களிலுமே இதுபோலப் பெண்ணுக்கு மட்டுமான சடங்குகள் இருக்கின்றன.ச.தமிழ்ச்செல்வன். -
-9%
இந்த விநாடி
0யூ டர்ன் அடியுங்கள் அத்தியாயத்தைப் படித்துவிட்டு யூ-டர்ன் அடித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு உடனடி மாறுதல் காத்திருக்கிறது. நான் உதவி இயக்குனராகி வேலையின்றி அலைந்து கொண்டிருந்த போது ,ஒரு நண்பர் என்னை மதிப்பீடு செய்ய சில கேள்விகள் கேட்டார்.ஒரு பூ – அரளி என்றேன். ஒரு பறவை – வல்லூறு என்றேன். இப்படியே பதில் தொடர, சிந்தனையை மாற்றுங்கள் வெற்றி பெறுவீர்கள் என்றார். சிந்தனையை மட்டுமல்ல. தலைகீழாய் போட்டுக் கொண்டிருந்த கையெழுத்தையும் மாற்ற வாழ்க்கை மாறியது. எண்ணங்கள் தான் வாழ்க்கை. நான் உணர்ந்ததை நீங்களும் உணர்ந்து கொள்ள உங்களுக்கு இந்தப் புத்தகம்.- அகத்தியன், திரைப்பட இயக்குனர்,**நல்லவன் வாழ்வான் – என்பது உலக நியதி.நல்ல நூல்கள் படித்தவர்கள் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் – என்பது பொது நியதி.நாகூர் ரூமியின் “இந்த வினாடி” – இன்றைய வேகமாக, ‘டென்ஷன்’ போட்டி நிறைந்த சூழலுக்கு ஏற்ற நல்ல மருத்துவ நூல்.-நடிகர் சிவக்குமார். -
-9%
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல.
0பூரணத்திலிருந்து பூரணம் உருவான பின்பும் எஞ்சி நிற்பது பூரணமே என்ற வேத உண்மையின் விளக்கமாகவே இந்தத் தொகுதியின் ஒவ்வொரு கவிதையும் முழுமைச் சிந்தனையோடு போகின்றது.
-
-9%
இமைக்கும் கருவிழிக்குமிடையே.
0ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கே போக முடியாதவர்களுக்கு, போகலாம்தான் ஆனா அதுக்கான நேரமே சரியா அமையல என்பவர்களுக்கு, போகணும்ன்னு நினைக்கிறேன்,ஆனா வேலையே சரியா இருக்கு என்பவர்களுக்கு, உள்ளூர்லயே திருமணம் முடித்துக் கொண்டு பேரூந்துப் பயணமே கனவாகிப்போனவர்களுக்கு, இன்னும் நான் ரயிலே ஏறினதில்ல ஏங்கும் மனதை எப்போதாவது வெளிப்படுத்துபவர்களுக்கு, மழை வரப் போவதை முன்னறிவித்து பறக்கும் தும்பி அளவில் ஆகாய விமானம் பார்க்க ஒவ்வொரு முறையும் தன் குடிசையை விட்டு வெளியே ஓடி வருபவர்களுக்கு இந்த புத்தகத்தைவாசிக்கக் கொடுக்கிறேன்.