-
-9%
பிராத்தனையைப் பின்தொடர்ந்து.
0Original price was: ₨ 3,290.0.₨ 2,995.0Current price is: ₨ 2,995.0.வார்த்தைகளின் அழகைச் சொல்லும் அதே நேரத்தில் மௌனத்தின் அழகையும், அது நடத்தும் தொடர் உரையாடலையும் நாவல் சொல்கிறது. இசையின் மகத்துவத்தைச் சொல்லும் அதே நேரத்தில் ஒழுங்கின்மை கொண்ட ஓசைகளின் லயத்தையும் பேசுகிறது. தத்துவத்தைப் பாடமாகப் பல்கலைகளில் கற்பிக்கலாம் இல்லை இது போல நாவலாக இனிப்புத்தடவிய குளிகைகளாகவும் கொடுக்கலாம். முடிவு அதிர்ச்சியை அளிக்கிறது. தெளிவான, சரளமான மொழிபெயர்ப்பை ஸ்ரீனிவாச ராமானுஜம் அளித்திருக்கிறார். இலக்கிய வாசகர்கள் தவறவிட வேண்டாம் என்று சொல்ல வைக்கும் நாவலிது.
-
-10%
-
-10%
-
-10%
பிழை இல்லாமல் எழுதுவோம்.
0Original price was: ₨ 400.0.₨ 360.0Current price is: ₨ 360.0.எழுத்துபிழை விடுபவர் முதற்கண் தாம் எழுதுவதில் பிழைகள் ஏற்படுகின்றன என்பதை உணரல் வேண்டும். அவற்றை நீக்குவதே தம் கல்விக்கு அழகு என்னும் உறுதி கொள்ள வேண்டும்.எழுதும்போது ஒவ்வோர் எழுத்தையும் கூட்டிப்பார்த்து எழுத வேண்டும். எழுதி முடிந்ததும் மீண்டும் படித்துப்பார்த்து சந்திப் பிழைகள் முதலியன இருப்பின் சரிப்படுத வேண்டும். -
-10%
புதிய இந்தியா எனும் கோணல் மரம்.
0Original price was: ₨ 2,394.0.₨ 2,154.0Current price is: ₨ 2,154.0.நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. 2014 மே மாதத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது, அல்லது அப்படிக் கூறப்பட்டதா? உள்ளபடியாக, நெருக்கடியைத்தான் இந்தியா எதிர்கொண்டுள்ளது. நம்முடைய ஆட்சியமைப்பு, சமூகம், பொருளாதாரம் என அனைத்தும் நொறுங்கிப்போய்விட்டன. அதற்கான அறிகுறிகளெல்லாம் நம்மைச் சுற்றியே இருக்கின்றன.’24/7 வேலைபார்த்துவந்த டிஜிட்டல் ராணுவமும் சமரசத்துக்கு ஆட்பட்ட ஊடகங்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவான கூச்சல்களால் பொதுத் தளங்களை மூழ்கடித்துக்கொண்டிருந்த வேளையில், துணிவுமிக்க விமர்சனக் குரலால் அதிகாரத்திடம் உண்மையைப் பேசும் உறுதியோடு இருந்தார் பரக்கலா பிரபாகர். 2020 முதல் 2023 வரை ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக எழுதிவந்த இந்தக் கட்டுரைகளில், அவர் உண்மைகளையும் தரவுகளையும் உன்னிப்பாகக் கவனித்து, நிகழ்வுகளையும் பொது அறிக்கைகளையும் பகுப்பாய்வு செய்து, நம்முடைய ஜனநாயகம், சமூக நல்லிணக்கம், பொருளாதாரம் ஆகியவற்றின் எதிர்காலம் குறித்து அவர் ஏன் அச்சப்படுகிறார் என்பதை எடுத்துவைக்கிறார். -
-10%
-
-18%
புதியவராய்… வெற்றியாளராய்… மாறுங்கள்.
0Original price was: ₨ 2,100.0.₨ 1,720.0Current price is: ₨ 1,720.0.இனி… உங்கள் வாழ்க்கையில் தோல்வியே இல்லைஇதைப் படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் நேற்று இருந்த மனிதராய் நிச்சயமாக நாளைக்கு இருக்கப் போவதில்லை. நீங்கள் எப்படி இவ்வாறு அடியோடு மாறிப் போய்விட்டீர்கள் என்பதை உங்கள் சுற்றமும் நட்பும் வியப்போடு பார்க்கத்தான் போகிறது.இந்த வரவேற்கத்தக்க மாற்றம் உங்கள் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட இருக்கிறது. இதைத்தானே நீங்களும் விரும்பினீர்கள்? முற்றிலும் புதியவராய்… வெற்றியாளராய்… சாதனைகள் பலவற்றைப் படைப்பவராய் ஆகப் போகும் உங்களுக்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் -
-10%
புத்துயிர்ப்பு
0Original price was: ₨ 2,700.0.₨ 2,430.0Current price is: ₨ 2,430.0.மனிதனின் அடிப்படை உணர்வுகளையும் அவன் வாழ்க்கையின் நோக்கத்தையும் அவனது ஆன்மா புத்துயிர்ப்பு பெற்று மறுமலர்ச்சி அடைவதையும் இந்நாவல் விவரிக்கிறது. மாறுபட்ட வாழ்வனுபவங்களும் மனிதகுல மேம்பாடுகளுக்கான மாண்புகளையும் கொண்டிருந்த ரஷ்ய வாழ்க்கையின் மனசாட்சியை இதில் கண்டுணரலாம்.
வறண்ட நிலம் மழை கண்டு புத்துயிர்ப்பு பெறுவதைப் போல இந்நாவலை வாசிப்பவர் மனங்களில் நற்சிந்தனைகள் உருவாகி உன்னதமானதொரு புத்துயிர்ப்பை அளிக்கும் என்பது நிதர்சனம்.
-
-10%
-
-10%
-
-10%
புலம் பெயர்ந்தோர் இலக்கியம்.
0Original price was: ₨ 510.0.₨ 459.0Current price is: ₨ 459.0.இலக்கிய வாசகர்களுக்கும் கல்விப்புலத்தில் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படத் தக்கவையில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்த பொது அறிமுகத்தையும் மதிப்பீட்டையும் தரும் முறையில் இந்நூல் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை, பிரான்சு, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல அயல்நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் இலக்கியங்களை விரிவான ஆய்வுத்தளத்தில் ஆராய்கிற இந்நூலில் இடம்பெறும் கவிதைகளும் சிறுகதைகளும் வெவ்வேறு நாடுகளில் வாழுகின்ற படைப்பாளிகளையும் வெவ்வேறு படைப்பாக்கத்தன்மை கொண்ட படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்தும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளன.
-
-9%
புற நானூறு மூலமும் தெளிவுரையும்.
0Original price was: ₨ 2,530.0.₨ 2,300.0Current price is: ₨ 2,300.0.மன்னர்களை மட்டும் அல்லாது. தலை சிறந்த வீரர்களையும், பாணர்களின் வாழ்க்கை முறையினையும், போற்றிஇப்பாடல்கள் நன்கு விளக்குகின்றன. இத்தகைய அரியதான பழம் பாடல்களுக்குப் பொருள் காண்பது அரிதே! ஆயினும் முன்னே விளங்கிய புலவர் பெருமக்களின் அடியொற்றி, ஒவ்வொரு பாடலுக்கும் அதன் பொருளுக்கு ஏற்றவாறு தலைப்புக் கொடுத்து தெளிவுரை எழுதியுள்ளேன். சிலவற்றைச் சிறப்புரையாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. பாடல்களுக்கு அரும்பத உரையும் தரப்பட்டுள்ளது.