-
-10%
இயற்கையைத் தேடும் கண்கள்.
0ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, நீர்யானை என ஆப்ரிக்க உயிரினங்கள் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்போம். நம் நாட்டு உயிரினங்களைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்?சென்னை மாநகரில் வெளிமான் குட்டி ஒன்றை வளர்க்க முயன்ற அனுபவம் முதல் சட்டைப்பையில் தஞ்சமடைந்த சின்னஞ்சிறு வௌவால் வரை காட்டுயிர்களின் உலகத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது இந்த வண்ணப் புத்தகம்.நம்மில் பலரும் பார்த்திருக்க வாய்ப்புள்ள சிட்டுக்குருவி, மயிலைப் பற்றி மட்டுமல்லாமல் சோளக்குருவி, செண்பகம், சங்குவளை நாரைகளின் வாழ்க்கையையும் திறந்துகாட்டுகின்றன பறவைகள் குறித்த கட்டுரைகள்.நம்மிடையே வாழும் அணில், உணவு தேடிவரும் கீரிப்பிள்ளை, ஆர்வக் குறுகுறுப்பு மிகுந்த நீர்நாய், மாட்டினங்களிலேயே மிகப் பெரிதான காட்டு மாடு போன்ற தமிழக உயிரினங்களைப் பற்றிக் கூடுதலாக அறிந்துகொள்ளலாம்.இயற்கையைத் துப்பறிவதற்கான சிறந்த வழிகாட்டியாக இந்தப் புத்தகம் திகழும். -
-9%
இரட்டை ஆத்துமாக்கள்
0மூன்றாம் பாலினம் கொண்டுள்ள இரட்டை ஆத்துமாகள், உண்மையா பொய்யா என்பதல்ல இந்த புத்தகத்தின் வாதம். மாறாய் சிறுபான்மையினர் என்ற ஒரே காரணத்துக்காக, இரட்டை ஆத்துமாக்கள் என்று போற்றப்பட்ட இந்த மூன்றாம் பாலினத்தின், இன்றைய நிலை என்ன என்பதை ஆரய்வதே, இந்த புத்தகத்தின் நோக்கமாகும்
-
-9%
இரண்டு புத்தகங்கள்.
0அசோகன் சாருவிலின் பெரும்பாலான கதைகள் மிக எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை. அனால் சிறுகதை வடிவத்தின் தேய்வழ்க்குகளை முற்றிலுமாக தவித்து நம் ஆழ்மனத்திற்குள் நேரடியாகச் செல்லும் வல்லமை கொண்டவை.
-
-9%
இராவணேசன் அரங்காடியோர் அனுபவங்கள்.
0பேராசிரியர் சி. மௌனகுரு கூத்தை கலையாகவும், அந்தக் கலையோடு உணர்வுபூர்வமாகவும் ஊடுருவி தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டு இருப்பவர். கலையோடு ஆழமாக பிணைந்த மனிதர்களுக்கு வயது என்பது ஒரு பொருட்டே இல்லை. அதற்கு சரியான உதாரணம் அரை நூற்றண்டுக்கு மேலாக இராவணேசன் நாடகத்தை சி. மௌனகுரு அவர்கள் கால மாற்றத்திற்கு ஏற்ப செதுக்கி செதுக்கி மெருகேற்றி நவீனப்படுத்திக் கொண்டிருப்பதைச் சொல்லலாம்.
-
-9%
இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம். (இலங்கை மலையக மக்கள் வரலாறு)
0இந்த நூல் வெளியாகி 39 ஆண்டுகளுக்குள் பல பதிப்புகளைக் கண்டிருக்க வேண்டிய பிரதி இது!அத்தகைய இப்பிரதி, இலங்கை மலையக மக்களின் அவலம் நிறைந்த ஒடுக்குமுறைக்குள்ளாகும் வரலாற்றையும் வாழ்வையும் தமிழ் அரசியல், அறிவுத் தளத்தில் முதல் முறையாக ஆய்வுப் பின்புலத்துடன் பதிந்த நூலாகும். அத்துடன் இலங்கை மலையக சமூகத்தினை அரசியல் மயப்படுத்துவதற்கும் , அமைப்பாக்கம் செய்வதற்கும் பங்களித்த வரலாற்றுக் கடமையை செய்த பிரதியுமாகும். -
-12%
இலங்கை – இந்திய மானிடவியல் சமயம் சமூகம் பற்றிய ஆய்வுகள்.
0பண்பாடுகளுக்கு இடையில் ஒப்பியல் ஆய்வுகளுக்கான மிகச் சிறந்த தளமாக இலங்கை-இந்தியப் புலங்கள் விளங்குகின்றன.இந்த வகையில் இவ்விரு புலங்களையும் சேர்ந்த புலமையாளர்கள் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் முனைவர் பக்தவத்சல பாரதி ஆகியோரின் ஆய்வுத் தொகுப்பே இந்நூல்.சமயமும் சமூக கட்டமைப்பும் இந்த ஆய்வு நூலில் குவிமையங்கள்.பருநிலையிலும் நுண்நிலையிலும் தெற்காசியச் சமூகங்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும், நிர்ணயிக்கும் சமூக மானிடவியல் காரணிகளை இவ்வாய்வுகள் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன;சமூக-மானிடவியல் துறையின் தேடல்களுக்கான திசையினை இனங்காட்டி நிற்கின்றன. -
-6%
இலங்கை மலையகத் தமிழ் மக்களின் மறைக்கப்பட்ட பக்கங்கள். (இரு நூல்களின் தொகுப்பு)
0இந்த இரு நூல்களும், இலங்கை மலயக மக்களின் வாழ்வுடனும் வரலாற்றுடனும் ஒன்றுடனொன்று தொடர்புடயவை. பின்னிப்பிணைந்தவை. காலத்தையும் அம்மக்களின் வாழ்வையும் வரலாற்றுப்போக்கில் முன்வைத்து மனிதகுலத்தின் ஒரு பகுதி மக்கள் மீது நடத்தப்பட்ட நடத்தப்பட்டு வருகிற மோசமான ஒடுக்குதலையும் பாரபட்சத்த்சையும் சுரண்டலையும், அம்மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அழிவுகளையும், அம்மக்களுக்கு இளைக்கப்பட்ட அநீதியையும் அரசியல் புலமைத்துவ அறிவுடன் பதிவு செய்து நம்முடன் ஆழமாக உரையாடுகிறது.
-
-9%
இலங்கைத் தமிழர் தேசவளமைகளும் சமூக வழமைகளும்.
0தென் இந்திய தமிழர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையிலே நிலவி வந்துள்ள வரலாற்று ரீதியான தொடர்புகளை ஒப்பீட்டு முறையில் ஆராய்ந்து அறிந்து கொள்வதற்கு இன்நூல் மிகவும் பயனுடையதாகும்.
-
-9%
இலங்கையின் பூர்வ சரித்திரம்.
0இந்நூலை இயற்றுவதற்கு அறிஞ்சர்கள் பலர் இயற்றிய நூல்கள் உதவின. அவற்றின் பெயர்களை கூரின் இன்னும் விரியும் என்பதால் , இருப்பினும் கொட்ரிங்கட் அவர்கள் இயற்றிய இலங்கைச் சரித்திர சுருக்கம் என்பதும், பேராசிரியர் உவல்லியம் கைகர் என்பார் அரிய ஆராய்ச்சி குறிப்புகளுடன் பதிப்பித்த சூளவமிசம் என்பதின் ஆங்கில மொழிபெயர்ப்பும் எனக்கு மிகவும் உதவியது.பலவழிகளிலே எனக்கு ஒத்தாசை புரிந்த அனைவரையும் இவ்விடத்தில் நன்றியுடன் நினைவு படுத்துகிறேன்.ஜி.ஸி. மெண்டிஸ். -
-9%
இவனைச் சிலுவையில் அறையுங்கள்.
0வேதாகமத்தின் தொனியை உள்வாங்கிக்கொண்டு அதில் இடம்பெற்ற பல உவமைக் கதைகளையும் உருவகங்களையும் நமது காலத்திற்கேற்ப மறுவிளக்கமும் மறுவாசிப்பும் செய்துள்ள வகையில் இந்தக் கவிதைகள் நவீனத்துவக் கவிதைகளாக வெளிப்பட்டுள்ளன.
-
-9%
இளமையின் ஜல்லிக்கட்டு.
0மதங்களின் அடியை அப்படியே பின்பற்றும் நம் சமூகம் மூன்றாம் பாலின மக்கள் வாழ , எவ்வளவோ தடைகளை விதித்து இருக்கிறது. அப்பேர்பட்டவர்களின் கடின வாழ்க்கையை, பல சிறுகதைகள் மூலம் சொல்லவரும் புத்தகமே, எனது இந்த மூன்றாம்பாலின இலக்கியப் புத்தகம்.
-
-9%
இனிக்க இனிக்க…. கணக்கு!
0கணிதம் என்றும் இனிப்பு தான். தேவையன்றி நம்மை பயமுருத்தி அதனை கசப்பாக்கி வைத்துள்ளனர். கணக்கு எப்போது இனிக்கும்?அதன் அவசியத்தையும் அது எப்படி நம் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளது என்று தெரிந்தாலே இனிக்க ஆரம்பித்து விடும். வாருங்கள் நம்மை சிற்றியுள்ள கணிததை பார்த்திடுவோம். கணிதம் எல்லோர்க்கும் கற்கண்டாய் இனிக்கும்