• -20%

    நாவலும் வாழ்க்கையும்.

    0
    ஓலைச் சுவடிக் காலத்தில் படைக்கப்பட்ட பெரும் கவிதை இலக்கியங்களை, மிகச் சிறந்த கல்வி அறிவும், பரந்துபட்ட இலக்கிய உணர்வும் உள்ளவர் மட்டுமே படிக்க முடியும் என்ற சூழல் நிலவியது. கதைகளைப் படிக்க, படித்துப் புரிந்து கொள்ளச் செய்யுள் வடிவம் சாதாரண மக்களுக்கு இடையூறாக இருந்தது. முதலில் செய்யுளைப் பிரித்துப் படித்து அதன் முழுப்பொருளையும் புரிந்து கொண்டு, கதையை விளங்கிக் கொள்ளுதல் மக்களுக்குச் சிரமமாக இருந்தது. செய்யுள் வடிவம் சில கட்டுப்பாடுகளுக்குரிய யாப்பு வடிவமாக இருந்ததால் கதை ஓட்டம் பாதிக்கப்பட்டது. கதையைப் படிக்க விரும்புவோர் மிகப் பெரும் இடர்களுக்கு உள்ளாக வேண்டியிருந்தது.
    உரைநடையில் அசை, சீர், தளை, தொடை, எதுகை, மோனை தேவையில்லை. மேலும் சாதாரண மக்கள் பேசும் நடையிலேயே எழுதுவது சுலபம். படிப்போரும் மிகச் சுலபமாக நாவலைப் படிக்க இயலும். எனவே உரைநடை வடிவத்தில் கதையை எழுதி நாவல் இலக்கியம் உருவாக்கினர்.
    Original price was: ₨ 750.0.Current price is: ₨ 600.0.
    Add to cart
  • -9%

    நித்திலவல்லி.

    0
    மதுரையில் பாண்டியர்கள் ஆட்சியை மழுங்கடித்து சில காலங்கள் களப்பிரர்கள் ஆட்சிசெய்தனர். பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம், இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இருள் என்பது வெறும் ஒளியின்மை மட்டுமில்லை. கலை, மொழி நாகரிகம், பண்பாடு, எல்லாவற்றிலும் இருள் சூழ்ந்திருந்ததனையே ‘இருண்ட காலம்’ என்ற தொடர் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். களப்பிரர்கள் ஆட்சி மற்றும் தமிழ் சங்கங்களின் அழிவு பாண்டியர்களின் எழுச்சியென அன்றைய சங்ககாலத்திற்கு முற்பட்ட மதுரையை படம் பிடித்துகாட்டுகிறது நித்திலவல்லி.
    மதுராதிபதிவித்தகரின் அரசியல் சூழ்ச்சிகள், ஐந்தில் நான்கு களப்பிரர்களால் கொள்ளப்பட்ட பாண்டிய வம்சத்து இளவரசர்கள், எஞ்சிய ஒரே இளவரசன் இளையநம்பி, அவனை காதலிக்கும் செல்வபூங்கோதை, ரத்தினமாலை, தமிழ்சங்கமற்ற மதுரை என கண்முன்னே இழிவுற்ற பாண்டியநாடு விஸ்தரிக்கின்றது.
    இளையநம்பியின் அரசியல் நோக்கமும் வீரமும், அதனை காட்டியும் சகுனியை விட நுட்பமான மதித்திறன் கொண்ட மதுராதிபதி வித்தகரின் அரசியலும் பாண்டிய மகுடத்தின் வைரங்கள்
    பாண்டிய கொடியேற்றமும் செல்வபூங்கோதையின் தியாகமும், அரசியல் திருமணங்களும் மிக அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் ரத்தினமாலையே நெஞ்சில் நிலைத்து நிற்கிறாள். பெரும்பாலும் வீரமும் முற்போக்கு சிந்தனையும் கலந்த பெண்களை ஒதுக்கி பத்தாம்பசலிகளையே நோக்கி செல்லும் ஆண்மனங்களை பற்றிய தெளிவான ஆய்வையே செய்துள்ளார்.
    Original price was: ₨ 770.0.Current price is: ₨ 700.0.
    Add to cart
  • -7%

    நிறுத்தக் குறிகளும் பயிற்சியும்.

    0
    உயிரி எதுவாயினும் இயக்கம் உடையதே. ஆனால் உயிரியின் இயக்கம், குறித்த இடத்தில் குறித்த காலத்தில் குறித்த காரணத்தில் குறித்த தேவையில் நின்றே ஆக வேண்டும்.
    ஊரும் உயிரி, நடக்கும் உயிரி, பறக்கும் உயிரி, ஆகியவை எல்லாம் நிற்பதையும், நின்று மீளவும் இயங்குவதையும் காண்கின்றோம். நிற்கும் இடத்திற்கு “நிறுத்தம்” என்பது பெயர்.
    நிறுத்தம் உயிர்களுக்கு உண்டு என்பது போல், மக்கள் உணர்வின் இயக்கமாக விளங்கும் மொழியின் இயக்கத்திற்கும் நிறுத்தம் உண்டு.
    Original price was: ₨ 300.0.Current price is: ₨ 280.0.
    Add to cart
  • -9%

    நினைவுகளே எங்கள் கேடயம்.

    0
    Original price was: ₨ 1,650.0.Current price is: ₨ 1,500.0.
    Add to cart
  • -9%

    நிஜத்தைத் தேடி.

    0

    இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான சிறுகதைகள் சுஜாதாவின் ஆரம்பகால கதைகள். 1960-70களில் ஸ்ரீரங்கம் எஸ்.ரங்கராஜன், எஸ்.ஆர்.ராஜன், எஸ்.ரங்கராஜன் என்கிற பெயர்களில் சுஜாதா குமுதம், கணையாழி பத்திரிகை களில் எழுதியவை. தவிர 70-80களில் எழுதிய கதைகள் சிலவற்றின் கூட, 1984-ல் கல்கியில் வெளியான ஒரு குறுநாவலும் இதில் இருக்கிறது. சுஜாதாவுக்கே உரித்தான விறுவிறுப்பு மற்றும் ட்விஸ்ட்டுகள் 100 சதவிகிதம் உத்தரவாதமாகக் கொண்ட கதைகள்.

    Original price was: ₨ 575.0.Current price is: ₨ 525.0.
    Add to cart
  • -8%

    நூறு புராணங்களின் வாசல்.

    0

    இந்தக் கதைகள் அழகியச் சித்திரங்கள். நம்மை ஓர் அதிசய உலகுக்கு, நிஜமும் அதிசயமும் உள்ள உலகுக்கு அழைத்துச் செல்பவை. அறிவியல் தத்துவத்தையும் ஒரு குழந்தையின் ஆர்வப் பார்வையையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து நம்மைக் கிரகிக்கவைப்பவை.

    Original price was: ₨ 705.0.Current price is: ₨ 650.0.
    Add to cart
  • -11%

    நோம் சோம்ஸ்கி.

    0

    நோம் சோம்ஸ்கி என்னும் உலகம் போற்றும் அமெரிக்க அறிஞர் தத்துவம் , உளவியல் , சமூகவியல் , மொழியியல் , கணினியியல் , அரசியல் , விஞ்ஞானம் என எந்தவொரு தளத்திலும் அறிமுகத்திற்கு அப்பாற்பட்டவரல்லர் அவரைப் பற்றியும் ஒரு மாமனிதரான உருவான பின்புலம் பற்றியும் இன்னும் கூடுதலாக அறிந்துகொள்ள ஆர்வப்படுவோருக்கு இந்நூல் அறிமுகத்திற்கு அப்பாற்பட்ட செய்திகள் அடங்கியது.

    Original price was: ₨ 3,100.0.Current price is: ₨ 2,750.0.
    Add to cart
  • -9%

    பச்சையும் சிவப்புமாய் ஒரு பாதாம் மரம். (வாழ்வனுபவங்கள்)

    0

    எங்கோ திடமற்று வாழும் ஒரு பெண் மனதை, அன்பின் ஒற்றை வார்த்தைக்கு பரிதவிக்கும் ஒரு குழந்தையின் பாதையை, அடையாளங்களற்ற ஒரு ஆசிரியரின் வாழ்வை, நிறைமனதோடு பயணிக்கும் ஒரு மனித மனத்தை தீண்டும் வரை இந்த பயணம் தொடரட்டும்…

    Original price was: ₨ 1,100.0.Current price is: ₨ 1,000.0.
    Add to cart
  • -17%

    படிப்பது சுகமே!

    0
    படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும், பாடங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனப் பல விஷயங்களைப் பற்றியும் மாணவர்களுக்கு இந்நூல் விளக்கித் தருகிறது.
    மாணவர்களின் படிப்புக்கும் தேர்வுக்கும் இந்நூல் ஒரு சிறந்த திறவுகோலாக இருக்கும். இந்நூல் ஊன்றிப் படிப்பவர்கள் தேர்வில் வெற்றிபெற்று சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்பது உறுதி.
    Original price was: ₨ 600.0.Current price is: ₨ 500.0.
    Add to cart
  • -9%

    பண்டைய நாகரிகம்.

    0
    உயிரினங்கள் வாழமுடியும்.
    அவை ஒருகாலத்தில் சுருங்கத் தொடங்கும். அவை சுருங்கத்தொடங்கிய பின் உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்காது என அறிவியல் அறிஞர் இசுடிபன் ஆக்கிங் கூறியுள்ளார். பூமியில் உயிரினங்கள் தோன்றி 350 கோடி ஆண்டுகள் ஆகிறது எனினும். மனித நாகரிகத்தின் காலம் 10.000 ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான். இன்றைக்கு 6000 ஆண்டுகளுக்கு முன் முதல் நாகரிகமான சுமேரிய நகர அரசுகளின் நாகரிகம் யூப்ரடிசு. டைகிரிசு ஆறுகள் ஓடும் மெசபடோமியா பகுதியில் தோன்றியது. இப்பகுதியில் அதன்பின் அக்கேடியன். பாபிலோனியா. அசீரிய. பாரசீக. மிட்டணி, பார்த்திய. சசானிய நாகரிகங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின. அதேபோன்று எகிப்திலும், சிந்து சமவெளியிலும், சீனாவிலும், கிரீட் தீவிலும் நாகரிகங்கள் தோன்றின.
    Original price was: ₨ 1,210.0.Current price is: ₨ 1,100.0.
    Add to cart
  • -9%

    பதிப்பும் படைப்பும்.

    0

    1990களின் நடுப்பகுதியில் ‘காலச்சுவடு’ பதிப்பகத்தைத் தொடங்கித் தமிழின் முன்னணிப் பதிப்பகங்களில் ஒன்றாக அதை வளர்த்தெடுத்துள்ள கண்ணன் பதிப்பு, பதிப்பகம், காப்புரிமை, இலக்கியம் சார்ந்த அயலுறவு முதலான பொருள்கள் குறித்துப் பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தமிழ்ப் பதிப்புலகம் குறித்துத் தொடர்ந்து ஆழ்ந்த அக்கறையுடன் காத்திரமான கருத்துக்களை முன்வைத்துவரும் கண்ணனின் இந்த நூல், தமிழ்ப் பதிப்புலகின் தன்மைகளையும் தேவைகளையும் சர்வதேசப் பின்புலத்தில் வைத்து அலசுகிறது. தமிழ்ப் பதிப்புலகின் இன்றைய நிலை குறித்தும் அதன் அடுத்த கட்டப் பயணம் குறித்தும் தீர்க்கமான பார்வைகளை முன்வைக்கிறது. இந்திய அளவிலும் உலக அளவிலும் தன் செயல்பாடுகளை விரித்துக்கொண்டு செல்லும் காலச்சுவடு பதிப்பகத்தின் பயணம் எப்படிச் சாத்தியப்பட்டது என்பதைக் காட்டும் தடங்களும் இந்நூலில் இருக்கின்றன. தமிழ்ப் பதிப்புலகம் குறித்து கண்ணன் தொடர்ந்து முன்வைத்துவரும் பல்வேறு கனவுகள் நனவாகத் தொடங்கியிருக்கும் தருணத்தில் இந்த நூல் வெளியாவது மிகவும் பொருத்தமானது.

    Original price was: ₨ 1,100.0.Current price is: ₨ 1,000.0.
    Add to cart
  • -9%

    பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணியும்.

    0

    கார்மேகம் அவர்களுடைய வாழ்க்கை, கார்மேகம் அவ்ர்களுடைய பத்திரிக்கை உலகப் பணி, இலங்கையிலும் இந்தியாவிலும் அவர் ஆற்றிய சமூகப் பணி, கார்மேகம் அவர்களைப் பற்றி பிரபலமானவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பன போன்ற கட்டுரைகள் அடங்கிய ஒரு காத்திரமான தொகுப்புத்தான் இந்நூல்.

    Original price was: ₨ 1,320.0.Current price is: ₨ 1,200.0.
    Add to cart