-
-9%
பிராத்தனையைப் பின்தொடர்ந்து.
0வார்த்தைகளின் அழகைச் சொல்லும் அதே நேரத்தில் மௌனத்தின் அழகையும், அது நடத்தும் தொடர் உரையாடலையும் நாவல் சொல்கிறது. இசையின் மகத்துவத்தைச் சொல்லும் அதே நேரத்தில் ஒழுங்கின்மை கொண்ட ஓசைகளின் லயத்தையும் பேசுகிறது. தத்துவத்தைப் பாடமாகப் பல்கலைகளில் கற்பிக்கலாம் இல்லை இது போல நாவலாக இனிப்புத்தடவிய குளிகைகளாகவும் கொடுக்கலாம். முடிவு அதிர்ச்சியை அளிக்கிறது. தெளிவான, சரளமான மொழிபெயர்ப்பை ஸ்ரீனிவாச ராமானுஜம் அளித்திருக்கிறார். இலக்கிய வாசகர்கள் தவறவிட வேண்டாம் என்று சொல்ல வைக்கும் நாவலிது.
-
-10%
பிழை இல்லாமல் எழுதுவோம்.
0எழுத்துபிழை விடுபவர் முதற்கண் தாம் எழுதுவதில் பிழைகள் ஏற்படுகின்றன என்பதை உணரல் வேண்டும். அவற்றை நீக்குவதே தம் கல்விக்கு அழகு என்னும் உறுதி கொள்ள வேண்டும்.எழுதும்போது ஒவ்வோர் எழுத்தையும் கூட்டிப்பார்த்து எழுத வேண்டும். எழுதி முடிந்ததும் மீண்டும் படித்துப்பார்த்து சந்திப் பிழைகள் முதலியன இருப்பின் சரிப்படுத வேண்டும். -
-9%
பிள்ளைத் தீட்டு.
0சுற்றிலும் நடக்கும் சம்பவங்களை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். போர் பாதிப்பு, பெண் மனம், மன நோய் சார்ந்த விஷயங்களை கொண்டுள்ளன.நகரத்தில் வாழும் இளம் பெண் ஒருவரை காதலிக்க, பெற்றோர் கிராம விவசாயிக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க, இறுதி முடிவை ஒரு கதை பேசுகிறது. இலங்கை ராணுவ பிடியில் இருந்த கிராமத்தை பாதுகாக்கும் சலவை தொழிலாளி கொல்லப்படுவதை, ‘துரோகம்’ என்ற கதை சொல்கிறது.போர் எங்கு நடந்தாலும் மனிதர்கள் துயரத்தை தான் சந்திப்பர் என்பதை வலியுறுத்தும் நுால். -
-18%
புதியவராய்… வெற்றியாளராய்… மாறுங்கள்.
0இனி… உங்கள் வாழ்க்கையில் தோல்வியே இல்லைஇதைப் படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் நேற்று இருந்த மனிதராய் நிச்சயமாக நாளைக்கு இருக்கப் போவதில்லை. நீங்கள் எப்படி இவ்வாறு அடியோடு மாறிப் போய்விட்டீர்கள் என்பதை உங்கள் சுற்றமும் நட்பும் வியப்போடு பார்க்கத்தான் போகிறது.இந்த வரவேற்கத்தக்க மாற்றம் உங்கள் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட இருக்கிறது. இதைத்தானே நீங்களும் விரும்பினீர்கள்? முற்றிலும் புதியவராய்… வெற்றியாளராய்… சாதனைகள் பலவற்றைப் படைப்பவராய் ஆகப் போகும் உங்களுக்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் -
-9%
புதுவை இரத்தினதுரை – கவிதைகள் 1993-2005
0அன்று வியட்நாம் போர் நிகழ்ந்தபோது ஒரு வியட்நாமியனாக பேசிய அவரது கவிதை, பாப்லோ நெரூடா கொல்லப்பட்டபோது சிலிக் குடிமகனாக கோபம் கொண்டது.யாழ்ப்பாணத்தில் சாதி ஒழிப்பு போராட்டம் நடைபெற்ற போது, அந்த போராட்ட சக்திகளின் குரலாக அவரது கவிதைகள் ஓங்கி ஒலித்தன.அஞ்சலோட்டம் போன்று அதன் தொடர்ச்சியாகவே ஈழ விடுதலைப் போராட்டத்தை தனது கவிதைகளில் கருப்பொருள் ஆக்கினார். -
-15%
புலம் பெயர்ந்தோர் இலக்கியம்.
0இலக்கிய வாசகர்களுக்கும் கல்விப்புலத்தில் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படத் தக்கவையில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்த பொது அறிமுகத்தையும் மதிப்பீட்டையும் தரும் முறையில் இந்நூல் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை, பிரான்சு, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல அயல்நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் இலக்கியங்களை விரிவான ஆய்வுத்தளத்தில் ஆராய்கிற இந்நூலில் இடம்பெறும் கவிதைகளும் சிறுகதைகளும் வெவ்வேறு நாடுகளில் வாழுகின்ற படைப்பாளிகளையும் வெவ்வேறு படைப்பாக்கத்தன்மை கொண்ட படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்தும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளன.
-
-9%
புற நானூறு மூலமும் தெளிவுரையும்.
0மன்னர்களை மட்டும் அல்லாது. தலை சிறந்த வீரர்களையும், பாணர்களின் வாழ்க்கை முறையினையும், போற்றிஇப்பாடல்கள் நன்கு விளக்குகின்றன. இத்தகைய அரியதான பழம் பாடல்களுக்குப் பொருள் காண்பது அரிதே! ஆயினும் முன்னே விளங்கிய புலவர் பெருமக்களின் அடியொற்றி, ஒவ்வொரு பாடலுக்கும் அதன் பொருளுக்கு ஏற்றவாறு தலைப்புக் கொடுத்து தெளிவுரை எழுதியுள்ளேன். சிலவற்றைச் சிறப்புரையாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. பாடல்களுக்கு அரும்பத உரையும் தரப்பட்டுள்ளது.
-
-9%
பூனைகள் நகரம்.
0வாழ்வின் தனிமையை, அதன் பன்முக நெருக்கடிகளை – ஆழ் மனம் சார்ந்தும், புறச்சூழல் சார்ந்தும் – தீவிரத்துடன் அலசுபவை ஹாருகி முரகாமியின் படைப்புகள். அதேபோல, கிழக்காசிய மனித வாழ்வில் மேற்கத்திய கலாச்சாரத்தின் நிழல் படிவதை மேற்பூச்சின்றி முன்வைப்பவை இவரது ஆக்கங்கள். முரகாமி கதைகளின் முதல் தொகுப்பைத் தமிழ்ச்சூழலுக்கு வம்சி பதிப்பகம் கையளித்தது. அதன் தொடர்ச்சியாக, ஜி. குப்புசாமியின் மொழியாக்கத்தில் வெளிவரும் தொகுப்பு இது. யதார்த்தத்துடன் மாய யதார்த்தங்கள் இணையும் இக்கதைகள் தமிழ்ச் சூழலுக்கு நெருக்கமானவை.– கிருஷ்ண பிரபு -
-9%
பெண்நிலைச் சிந்தனைகள்.
0இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள், தமிழில் அதுவும் ஈழத்துத் தமிழ்ச் சூழலில் பெண்கள் தங்களைப் பற்றி புரிந்துகொள்ளவும், தங்களை இந்தச் சமூகமும் கலாச்சாரமும் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறது. அதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் பண்பாட்டு ரீதியான வரையறைகள் எல்லாம் எப்படி பெண்ணை இரண்டாம் பட்சமான ஒன்றாக வைத்திருக்கிறது என்பதை அறிவதற்கு உதவும் என்று நம்புகிறேன்.
-
-9%
பெளதிகப் புவியியல். செயன் முறையும் நிலவுருவங்களும்.
0உயர்தர மாணவர்களின் கல்வித்தேவையை பூர்த்தி செய்யுமுகமாக இந்நூல் அமைந்துள்ளது. மாணவரின் ஒவ்வொறு அசைவயும் கணக்கிட்டு தேவையறிந்து வெளிவருகின்றது. ஆற்றின் அரித்தல், காற்றின் செயற்பாடு, நிலவுருவங்கள், தரை நீர் செயன்முறை, போன்றவிடயங்களை தன்னகத்தே கொண்டு இலகுவாக விளங்கக்கூடிய வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
-
-9%
பேரரசர் அசோகர்.
0போரில் வெற்றிகண்ட மன்னர்கள், ரத்தம் குடித்த புலிகளாக, அடுத்தடுத்த தேசங்களுக்கு அலைவார்கள். ஆனால், மக்களின் துயரம் கண்டு நெஞ்சுடைந்து, இனி யுத்தமே வேண்டாமென்று சத்தியம் செய்த இன்னொரு மன்னரை இந்த உலகம் கண்டதில்லை.மதம் மாறுகிற ஒரு மன்னர் அதிகாரபலத்தைப் பயன்படுத்தி, தன் கொள்கைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மக்கள் மேல் திணிப்பார். தான் பெளத்தமதத்துக்கு மாறியபோதும், எம்மதமும் சம்மதம் என மனிதநேயத்தை முன்னிறுத்தும் மாமனிதர்கள் வரலாற்று அதிசயம்.மண்ணை வெல்பவர்கள் மன்னர்கள். மக்களின் மனங்களை வெல்பவர்கள் மகாத்மாக்கள். உலக வரலாற்றில் மகாத்மாவான மன்னர் ஒரே ஒருவர்தான். அவர் – பேரரசர் அசோகர். -
-9%
பொசிஸனிங்.
0தொழில் தொடகுபவர்களுக்கன வழிகாட்டி.———————————உங்களை…உங்கள் தொழிலை…உங்கள் திறமையை…உங்கள் தயாரிப்பை…அடுத்தவர்கள்ரசிக்க…விரும்ப…வரவேற்க…அங்கீகரிக்க…நீங்கள் செய்ய வேண்டியது என்ன?உங்களை நீங்களே முன்னிறுத்துவதுதான்.நிர்வாகவியலில் இந்த உத்திக்கு ‘பொசிஷனிங்’ என்று பெயர்.இதன்மூலம் உங்களைப் பற்றி உயர்வான, சாதகமான பிம்பத்தை அடுத்தவர் மனங்களில் உருவாக்க முடியும்.ரஸ்னா நடத்திய நாடகம், உஜாலா பயன்படுத்திய உத்தி, காட்பரீஸ் காட்டிய வழி என்று மெய்யான அனுபவங்களின் வழியாக பொசிஷனிங் உத்தியை கற்று தருகிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.