-
-9%
தெளிவத்தை ஜோசப் கதைகள்.
0Original price was: ₨ 2,475.0.₨ 2,250.0Current price is: ₨ 2,250.0.தெளிவத்தை ஜோசப்பின்சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து, முழுமையான தொகுப்பு ஒன்றினைக் கொண்டுவரும் முயற்சி பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமானது. 1979இல் யாழ்ப்பாணத்திலிருந்து வைகறை வெளியீட்டின் மூலம் தெளிவத்தை ஜோசப்பின் முதலாவது சிறுகதைத் தொகுப்பினை ‘நாமிருக்கும் நாடே’ என்ற தலைப்பில் வெளியிட்டதன் நீட்சி போலவும் இது அமைந்தது. ‘நாமிருக்கும் நாடே’ என்ற தொகுப்பிற்காக அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்து பேருழைப்பை நல்கிய சிவம் கமலநாதன், எஸ்.பாலசுப்ரமணியம் ஆகியோரின் மறைவினைக் கண்ணீரோடு நினைவு கூருகிறேன். அவுஸ்திரேலியாவில் வாழும் மூக்கையா நடராஜா, கனடாவில் வாழும் வி.தேவராஜ் ஆகியோர் இன்றும் எம் முயற்சிக்குத் தொடர்ந்து ஊக்கம் தந்து வருகின்றனர்.தன்னை நாடி வரும் அனைத்து எழுத்தாளர்களுக்கும், அவர்களின் கைவசம் இல்லாத கதைகளை எல்லாம் தனது சேகரத்திலிருந்து தேடிக்கொடுத்துதவிய தெளிவத்தை ஜோசப் அவர்களிடம் அவர் எழுதிய கதைகளே இல்லாமல்போனது துரதிர்ஷ்டவசமானது. -
-10%
தென்னம்படல் மறைப்பு
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.நினைவிலிருந்து அகல மறுக்கும் பால்யமும் அது தரும் அனுபவ விரிவும் ஒட்டுமொத்த வாழ்வையும் தீர்மானித்துவிடுகின்றன. வாழ்வு ஊதித்தள்ளிக் கரைத்துவிட்ட காட்சிகளையும் அனுபவங்களையும் ஒரு சிறுவனின் கண்ணோட்டத்தில் மீட்டிக்கொள்கிற வாய்ப்பை இப்பிரதி உருவாக்கித் தருகிறது. அனுபவங்களை நறுக்குத் தெறித்தாற்போலான வாக்கிய அமைப்புகளுக்குள் பிசிறின்றி, வார்த்தை வீணடிப்பின்றி எழுதிச் செல்கிறார் ஆசிரியர். அந்தக் காலம் பற்றிய விதந்தோதலையும் நினைவேக்கத்தையும் பெருமிதத்தையும் கூருணர்வுடன் தவிர்த்திருக்கிறார். இவ்வனுபவப் பிரதியில் அங்கங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் வட்டார வழக்கில் சுவையையும் இனிமையையும் உணரலாம். இலங்கையின் பல்வேறு மக்கள் குழுக்களிடையிலான பேச்சுவழக்குகளின் இன்னொரு தரப்பையும் தமிழ்ச் சூழலுக்கு அடையாளப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். ஈரமும் மென்மையும் கொண்ட மனிதர்களை இந்நூலில் மீட்டெடுத்திருக்கிறார் நபீல். அழுத்தும் சமகால வாழ்விலிருந்து சற்று வெளியேறிக் காலப்பயணம் செய்த அனுபவத்தை இந்நூல் தருகிறது.
-
-10%
தொடுவானம் வரையில்.
0Original price was: ₨ 810.0.₨ 729.0Current price is: ₨ 729.0.வேறு பக்கம் பார்ப்பது போல அவள் நின்று கொண்டிருந்தாள். ஆனாலும் ஆவலைக் கட்டுப்படுத்த முடியாது மெள்ள திரும்பிப் பார்த்தாள். அந்த மனிதனும் அவளை அதிசயமாக மீண்டும் பார்ப்பதைக் கண்டாள். இனம்விளங்கா ஒரு அச்சம் மறுபடியும் அவளை ஆட்கொள்ள, நெஞ்சு வேகமாகத் துடிக்க உடம்பு மெல்ல நடுங்கியது. பட்டப் பகலில் என்னத்துக்கு பயப்படணும்? யார் இவன்? பார்வையால் முழுங்கிவிடுவானா? தன்னையே கடிந்து கொண்டு கீழ் உதட்டை அழுத்திக் கடித்துக்கொண்டு அசையாமல் பிடிவாதமாக மேலே நடக்காமல் அங்கேயே நின்றாள்.சுள்ளென்று வெயில் முகத்தில் எரிச்சலுடன் வீசியது.வட்ட வடிவமான அகலப்படிகள் மீது டக்டக் என்று பாதணிகள் ஒலிக்க அவர் வேகமாக ஏறி வந்தார். சற்று பருமனான சரீரம்.
-
-10%
தோட்டியின் மகன்.
0Original price was: ₨ 1,320.0.₨ 1,188.0Current price is: ₨ 1,188.0.நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல்.இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு – தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல் -
-10%
-
-10%
-
-10%
நம்மை நாமே செதுக்குவோம்.
0Original price was: ₨ 1,460.0.₨ 1,314.0Current price is: ₨ 1,314.0.நம்மை நாமே காலத்திற்கு ஏற்றபடி செதுக்கிக் கொண்டு, வெற்றி வாகை சூடத் தேவைப்படும் பல்வேறு வெற்றிச் சூத்திரங்களை எளிய நடையில் விளக்குகிறது இந்தப் புத்தகம்.பாஸ்டர், சிலர் தங்கள் முன்னேற்றத்தில் மிக உறுதியான எண்ணத்துடன் ஓர் ஆலமரம் போன்றிருப்பர். ஆனால் பிரச்னைப் புயல் வீசினால் வேரோடு சாய்வர். சிலர் நாணல் போல் எந்தப் பிரச்னைப் புயல் வீசினாலும் வளைந்து நெளிந்து கொடுத்துப் பின்னர் நிமிர்ந்து விடுவர் என்கிறார்.தோற்று விட்டேனென்று நீ கருதுவாயானால் நிச்சயமாக நீ தோற்றவனே என்கிறார் ஆங்கில அறிஞர் ஒருவர். தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்குப் பதிலாகத் தலையால் நடப்பதைப் போன்றது என்கிறார் எமர்சன். எவன் எந்தப் பொருளில் நம்பிக்கை உடையவனோ அவன் அந்தப் பொருளாகத்தான் ஆகிறான் என்பது கீதை வாக்கு. -
-9%
நளவெண்பா. (மூலமும் விளக்கவுரையும்)
0Original price was: ₨ 1,100.0.₨ 1,000.0Current price is: ₨ 1,000.0.நளதமயந்தி கதையை புகழேந்திப் புலவர் `நளவெண்பா’ என்னும் நூலாக ஆக்கித் தந்தார். வெண்பாவிற் புகழேந்தி என்னும் சிறப்பையும் பெற்றார்.இந்நூலுக்கு பல உரைகள் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. இருப்பினும் இந்நூலாசிரியர் எளிதில் பொருள் உணரத்தக்க நிலையில் பிரித்தும், பாடலுக்குத் திரண்ட பொழிப்புரை எழுதி சிறப்பித்துள்ளார்.
-
-10%
-
-10%
-
-20%
நாவலும் வாழ்க்கையும்.
0Original price was: ₨ 750.0.₨ 600.0Current price is: ₨ 600.0.ஓலைச் சுவடிக் காலத்தில் படைக்கப்பட்ட பெரும் கவிதை இலக்கியங்களை, மிகச் சிறந்த கல்வி அறிவும், பரந்துபட்ட இலக்கிய உணர்வும் உள்ளவர் மட்டுமே படிக்க முடியும் என்ற சூழல் நிலவியது. கதைகளைப் படிக்க, படித்துப் புரிந்து கொள்ளச் செய்யுள் வடிவம் சாதாரண மக்களுக்கு இடையூறாக இருந்தது. முதலில் செய்யுளைப் பிரித்துப் படித்து அதன் முழுப்பொருளையும் புரிந்து கொண்டு, கதையை விளங்கிக் கொள்ளுதல் மக்களுக்குச் சிரமமாக இருந்தது. செய்யுள் வடிவம் சில கட்டுப்பாடுகளுக்குரிய யாப்பு வடிவமாக இருந்ததால் கதை ஓட்டம் பாதிக்கப்பட்டது. கதையைப் படிக்க விரும்புவோர் மிகப் பெரும் இடர்களுக்கு உள்ளாக வேண்டியிருந்தது.உரைநடையில் அசை, சீர், தளை, தொடை, எதுகை, மோனை தேவையில்லை. மேலும் சாதாரண மக்கள் பேசும் நடையிலேயே எழுதுவது சுலபம். படிப்போரும் மிகச் சுலபமாக நாவலைப் படிக்க இயலும். எனவே உரைநடை வடிவத்தில் கதையை எழுதி நாவல் இலக்கியம் உருவாக்கினர். -
-10%