-
-9%
செழுஞ்சுடர்.
0கதையில் நகரங்களை விட கிராமங்களே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இரத்தமும் சதையும் கொண்ட சாமான்ய மனிதர்களே பாத்திரங்களாக உருமாறி மனிதர்க்குரித்தான இயல்பான குணங்களோடு அன்பு, நட்பு, பெருமை கவுரவம் என்று அலைகிறார்கள். நினைவுகளிலும் நிஜங்களிலும் காலம் உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றது.விலை Rs.1,000/= -
-9%
சென்றுபோன நாட்கள்.
0‘கதை சொல்வதில் சமர்த்தர்’ என்று புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர் முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு (1886-1935). பாரதி பற்றி விரிவான நினைவுக் குறிப்புகளை முதன் முதலில் எழுதியவர் என்று பாரதி அன்பர்கள் இவரை நினைவுகூர்வார்கள். 1928இல் பாரதி நூல்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது ‘சென்றுபோன நாட்கள்’ தொடரில் இவர் பாரதி பற்றி எழுதிய நெடும் கட்டுரை ஒரு ‘கிளாசிக்’ ஆகும். 1926-1934இல் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு எழுதிய ‘சென்றுபோன நாட்கள்’ பாரதி உட்படப் பதினெட்டுப் பழம் பத்திரிகையாளர்களை நினைவுகூர்கிறது. முதல் முறையாக இப்பொழுது நூலாக்கம் பெறுகிறது. துல்லியமான பல புதிய தகவல்கள், தனித்துவமான கண்ணோட்டம், சுவையான நடை – இவை இந்த நூலின் சிறப்புகள். பல்லாண்டுக்காலப் படைப்பூக்கம் மிகுந்த ஆராய்ச்சியின் விளைவாக இந்நூலைத் தேடிப் பதிப்பித்திருக்கும் ஆ.இரா. வேங்கடாசலபதி, துப்பறியும் கதை போல் விரியும் ஒரு நீண்ட முன்னுரையினையும் எழுதியுள்ளார்.
-
-9%
சொல்லாததும் உண்மை.
0எழுத்தாக்கம் : த. செ. ஞானவேல்என் வாழ்வில் நான் நேருக்கு நேர் சந்திச்ச உண்மைகளை அரிதாரம் பூசாமல் பேசியிருக்கேன். சில உண்மைகள், கரண்ட் கம்பியில் கைவச்ச மாதிரி, என்னையே சுளீர் னு திருப்பி அடிச்சிருக்கு. சில உண்கள், ஓவியன் கையில் கிடைத்த தூரிகை மாதிரி அற்புதமாகப் பதிவாகி இருக்கு. இரண்டும் வாழவேண்டிய அனுபவங்கள்தான். -
-9%
ஞானப் பள்ளு.
0ஞானப்பள்ளின் மூலப்பதிப்பில் இடம் பெற்றுள்ளவாறே அப்பதிப்பு இடம் பெற்றதோடு, நூலில் இடைச்செருகல்கள் எதுவும் நுழையாதிருப்பதும் இதன் சிறப்பாகும்.பள்ளு இல்க்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, பட்டியல் நூல்கள் கூறும் பள்ளு இலக்கிய இலக்கணம், ஞானப்பள்ளின் அமைப்புமுறை, பள்ளு இலக்கிய வளர்ச்சி முதலான பல்வேறு விடயங்களை ஆராய்ந்து பேராசிரியர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. -
-13%
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு.
0தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஒருபுறமிருக்க, அவர்கள் சுயமரியாதையைப் பாதிக்கும் எத்தனை எத்தனையோ செயல்களில் வருணாசிரம தர்மவெறியர்கள் எங்குப்பார்த்தாலும் ஈடுபட்டு வருகின்றனர். இவைகளுக்கும் பொருளாதாரக் காரணங்கள் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. எனினும், பொருளாதார அமைப்பை மாற்றும்வரை கைகட்டி சும்மா இருக்கலாகாது. இவைகளையும் எதிர்த்துப் போராடவேண்டும்.டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகும். அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும். -
-20%
தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்.
0வாழ்வின் தீரா ஆச்சரியங்களும், முடிவற்றுத் தொடரும் காமத்தின் தீண்டல்களும் கொண்டவர்களாக தஞ்சை ப்ரகாஷின் கதை மாந்தர்கள் வலம் வருகிறார்கள். அசட்டுத்தனமான, மிகையுணர்ச்சியற்ற நிதானத்துடன் கதைசொல்லும் ப்ரகாஷ், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனி சித்திரமாகப் பதியும்படி தீட்டியிருக்கிறார். ஆண் / பெண் மனங்களில் பொதிந்து கிடக்கிற காமத்தின் மூர்க்கத்தனமும், வன்மமும் தெறிக்கத் தெறிக்க, அதன் பொருட்டெழுகிற பகையுணர்ச்சி என அவர் காட்டுகிற உலகம் என்றென்றைக்குமானது. பாலுணர்ச்சியின் எல்லையற்ற கற்பனைகள், உள்மன விகாரங்கள், அதன் மீதான சுய பகடிகள் என கதைகளில் இழையோடுகின்றன. ப்ரகாஷ் கதைகளில் வீழ்ச்சியுற்ற, தோல்வியடைந்த மனிதர்களை நாம் நிறைய சந்திக்கலாம். தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்கிறவர்களாக அவர்களை நாம் தெரிந்துகொள்கிறோம். நன்றாக வாழ்ந்தவர்கள், காலத்தால் சிதிலமுற்று தங்களின் கதையை அசைபோடுவது மிகுந்த மனச் சவாலுக்குரிய ஒன்று.
-
-20%
தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும். (பொ.ஆ.800-1500)
0தமிழ்நாட்டில் தீண்டாதார்’, ” புதிய ஓம்படைக்கிளவிகளின் எழுகையும் சாதி உருவாக்கமும்’ என்ற நொபொரு கராஷிமாவின் இரு கட்டுரைகளும் , “சோழர் காலத்தில் சமூக மாற்றத்தின் சில தன்மைகள்’, “பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் ஓர் உழவர் கிளர்ச்சி’ என்ற எ.சுப்பராயலுவின் இரு கட்டுரைகளும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.“வரலாற்று ஆய்வுகள் பண்டைய காலம் குறித்து கவனம் செலுத்தினாலும், அவை தொடக்கப்புள்ளியாக நிகழ்காலத்தைக் கொள்ள வேண்டும்’ என்ற அடிப்படையில் இந்நூலில் கட்டுரைகள் சோழர்கால வரலாற்றை ஆராய்கின்றன.முதலாம் ராஜராஜன் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் சாதிமுறையில் கீழ்நிலையில் வைக்கப்பட்டிருந்த மக்கள் வாழ்ந்த இடங்களைப் பற்றிய குறிப்புகள், சாதிப் படிநிலை பற்றிய குறிப்புகள் காணப்படுவது, திருச்சி மாவட்டம் திருப்பாலத்துறையில் உள்ள ஒரு கல்வெட்டில் அடிமைமுறை இருந்ததற்கான சான்றுகள் இருப்பது ஆகியவை இந்நூலில் கூறப்பட்டுள்ளன. -
-9%
தமிழர் உறவு முறைகளும் சமய வழிபாடும்.
0ஆழ்வார்களின் பாசுரங்களில் ஓர் இடத்தில்கூட ஆழ்வார் என்ற சொல் காணப்படவில்லை என்ற தகவலும் வெள்ளிக்கிழமை விசேஷம் எப்படி வந்தது என்பதெல்லாம் வியக்க வைக்கும் தகவல்கள்.இஸ்லாமிய மரபு சாராத தம்பி என்கிற பெயர் வழக்கு வரலாற்றுக் காலந்தொட்டு எவ்வாறு கீழக்கரை முஸ்லிம்களிடையே வந்தது என்பது பற்றி பரமசிவன் தெரிவிக்கும் கருத்துகளும் மேற்கோள்களும் விரிவான ஆய்வுக்குரியவை. -
-7%
தமிழ் அழகியல்.
0ஏ.என். கிருஷ்ணவேணி யாழ்ப்பல்லைக்ழககத்தில் நீண்டகாலம் நுண்கலைத்துறை தலைவராக பணியாற்றினார். இவர் இக்காலப் பகுதியில் இலங்கை, இந்தியா, மலேசியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இடம்பெற்ற உலக சைவ மாநாடு 3ஆம், 4ஆம் ஐரோப்பிய மாநாடுகளில் பங்குபற்றி ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். சுவிற்ஸலாந்திலும், இலண்டனிலும் நடைபெற்ற முருகபக்தி மாநாடு, திருக்குறள் மாநாடு போன்றவற்றிலும் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
-
-9%
தமிழ் மொழி.
0தமிழின் சிறப்பை அறிந்துகொள்ள சமற்கிருத மொழியோடு தமிழ் ஒப்பிடப்பட்டு தமிழ் மொழிக்கு இணையான சிறப்பு சமற்கிருத மொழிக்கு இல்லை என்பது இந்நூலில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வட இந்தியாவில் கி.மு. 187 க்குப்பின் ஏற்பட்ட சமூக அரசியல் மாற்றங்களின் விளைவாகத்தான் பாணினியின் இலக்கணம் தோன்றியது என்பதும் இங்கு கூறப்பட்டுள்ளது. தமிழ்ச்சமூகம், பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட ஒரு வளர்ச்சியடைந்த நகரச் சமூகம் என்பதை தமிழ் அறிவு மரபின் தந்தையாகக் கருதப்படும் தொல்கபிலரின் எண்ணிய மெய்யியல் குறித்தான விளக்கங்கள் மூலம் இங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
-8%
தம்பி தங்கைக்கு…..
0இந்தக் காலத்தில் கதைகள், கட்டுரைகள் எழுதுபவர்கள் பொருத்தமான சொற்களைத் தேர்ந்து எழுத முடிவதில்லை. மிகவும் மலிந்த புழக்கத்தால் தோய்ந்து போன சொற்களையே உபயோகிக்கிறார்கள். இப்படியான சொற்கள் ஆங்கிலத்தில் Cliches என்று கூறப்படும்.பொருத்தமான புதுமையான சொற்களை ஒருவர் எழுத்தில் உபயோகிக்காததற்கு காரணங்களாகச் சோம்பல், அவதி, கற்பனைக் குறைவு, அவருடைய சொற்களஞ்சியத்தில் வெறுமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். -
-9%
தராக்கி. ஈழத் தமிழ் ஊடக முன்னோடி.
0சிவராமின் சிந்தனைகள் எதிர்வு கூறல்கள், அரசியல் முன்னெடுப்புக்கள் போன்றவை அக்காலத்தைப் போன்றே இன்றைய காலத்துக்கும் பொருத்தமானவையாக உள்ளன . அதன் ஒரு எடுத்துக்காட்டே இந்நூல்.