• -9%

    அகதியின் துயரம்.

    0
    இலங்கையின் இனச்சண்டை முடிவுக்குவந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இலங்கைத் தமிழ் அகதிகள் தங்களது நாட்டுக்குத் திரும்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. இந்திய-இலங்கை உறவில் ஏற்பட்டுக்கொண்டிருந்த திருப்பங்களின் பின்னணியில் இலங்கைத் தமிழ் அகதியின் துயரங்களை இந்நூல் விவரிக்கின்றது.
    உலக அகதிகள் நிலவரம், இந்தியா எதிர்கொண்ட அகதி அனுபவங்கள், இனப் பிரச்சினையால் உலகெங்கும் பெயர்ந்து சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள், இனங்களின் நல்லிணக்கத்துக்கு இடையூறாக இருக்கின்ற சிங்களவர்களின் போட்டி அரசியல் எனப் பல விடயங்கள் இந்நூலில் தெளிவாக ஆராயப்பட்டுள்ளன.
    இந்திய வம்சாவளி அகதிகள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழ் அகதிகள் உட்பட அனைத்து தஞ்சம் புகுவோரின் வாழ்வுரிமைத் தேவைகளையும் இந்தியாவின் பாதுகாப்புக் கவனத்தையும் ஒருசேர உறுதிசெய்கின்ற ஒரு தேசிய அகதிகள் சட்டம் இயற்றப்படவேண்டும் என்றும் நூலாசிரியர் இந்நூலில் வலியுறுத்துகிறார்.
    Original price was: ₨ 880.0.Current price is: ₨ 800.0.
    Add to cart
  • -9%

    அகாலத்தில் கரைந்த நிழல்.

    0
    அவளைப் பொறுத்தளவில் நிறைவேறாத ஆசையாக அரைகுறையாகக் கட்டப்பட்டுள்ள வீட்டுடன் நிறைவு பெறுகிறது. பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தான் ஒருமுறை வெளிநாடு சென்று விட்டால், போதும் பின் அதுவே இரண்டாம், மூன்றாம் முறை எனத் தொடர்கிறது. பழக்கமும் பரீட்சயமும் பெற்று விடுகிறது. அதுவே சாகும் வரையான வாழ்வாகி விடுகிறது
    வெளிநாட்டு வாழ்வின் சுகமும் குதூகலமும் வரையறுக்கப்பட்ட ஒரு சிலருக்கே வரமாக வாய்க்கிறது.’
    Original price was: ₨ 990.0.Current price is: ₨ 900.0.
    Add to cart
  • -11%

    அக்னிச் சிறகுகள் (காலச்சுவடு)

    0
    Original price was: ₨ 1,100.0.Current price is: ₨ 980.0.
    Add to cart
  • -17%

    அங்கீகரிக்கப்படாத கனவின் வலி.

    0

    நாம் வாழும் காலம், வரலாற்றின் சுழற்சியில், ஒரு இக்கட்டான கட்டத்தை எட்டியிருக்கிறது. சமூக வாழ்வின் பல துறைகளிலும் அர்ப்பணிப்புகளும் அறங்களும் கேலிப் பொருள்களாகிவிட்டன. வசதிகளின் பெருக்கத்தையே வாழ்வின் மேன்மையாகவும் வெற்றியாகவும் கருதும் மனோபாவம் நம்மைப் பீடித்திருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சிறந்த அம்சத்தை வெளிப்படுத்தாத பட்சத்தில் இந்த உலகம் இதை விடவும் மோசமான கட்டத்தை அடையும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் என் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்டது ஒன்றுதான்: எந்தவொரு காத்திரமான செயலையும் தொடர்ந்து நம்பிக்கையுடன் மேற்கொண்டு வந்தால், அது தன்னளவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

    Original price was: ₨ 600.0.Current price is: ₨ 500.0.
    Add to cart
  • -9%

    அசோகனின் வைத்தியசாலை.

    0

    மாமன்னர் அசோகர் மிருகங்களுக்காக ஒரு வைத்திய சாலையை அமைத்தார் என்பது வரலாறு. ஒரு அம்மையார் தர்மத்துக்காக அமைத்த மிருக வைத்தியசாலையில் பணிபுரியும் சிவாவின் அனுபங்களே இந்த நாவலின் உடல்.இந்த வாழ்க்கை மனிதர்களால் மட்டும் ஆனது அல்ல, மிருகங்களும் வாழ்க்கையின் பிரஜைகளே என்ற பார்வை. இன்னொன்று இங்கே மிருகங்கள் என சொல்லப்பட்டிருப்பவை மிருகங்கள்தானா என்ற எண்ணம். நோக்கிச் செலுத்துகிறது. அதுவே இந்நாவலின் அழகியலின் வெற்றி

    -ஜெயமோகன்

    Original price was: ₨ 1,650.0.Current price is: ₨ 1,500.0.
    Add to cart
  • -9%

    அடித்தள மக்கள் வரலாறு.

    0

    ஆ.சிவசுப்பிரமணியன் தமிழகத்தின் நன்கு அறியப்பட்ட மார்க்சியக் கருத்துநிலையாளர்; செயல்பாட்டாளர்; ஆய்வாளர், தமிழகத்தின் மிகச் சிறந்த, புகழ்பெற்ற நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர், சிக்கலான கோட்பாட்டு முட்டுச் சந்துகளில் நின்றுவிடாமல், தமிழகத்தின் மக்கள் இயக்கங்கள் முகம்கொடுக்கும் சிக்கல்களை மனதில்கொண்டு அவரது ஆய்வுப் பயணம் தொடர்ந்து செல்கின்றது. இப்படிப்பட்ட அவர் இந்நூல் மூலம் அடித்தள மக்கள் வரலாற்று ஆய்வுமுறையியலைத் தமிழக வரலாற்று எழுதியலுக்குக் கையாள்வதன் வழி புதிய வெளிச்சங்களைக் காட்டுகின்றார். இந்நூலில் எளியோர் வாழ்க்கையைப் புதிய சிந்தனை ஊற்றுகள் பொங்கும் தளங்களாகத் தரிசிக்க வைக்கின்றார். பிழைகளைக் களைந்து புதிய செம்மையான பதிப்பாக வரும் இந்நூல் தமிழக வரலாற்றைக் கற்க விரும்புவோர்க்கான அரிய பெட்டகம்..

    Original price was: ₨ 1,815.0.Current price is: ₨ 1,650.0.
    Add to cart
  • -9%

    அதர் இருள்.

    0

    உக்ரேன்-ரஷ்ய போர் ஆரம்பித்து ஒரு மாதம் முடிந்தபோது எனது நண்பி சிசில் மூலம் லானாவைச் சந்தித்தேன். சிசிலின் நண்பர்களான வைத்திய இணையர் உக்ரேன் எல்லைக்கு சென்று லானாவையும் அவள் மகனையும் அழைத்து வந்து தங்கள் வீட்டில் வைத்திருக்கிறார்கள். குறுந்தொகையில் ஒரு பாட்டில் தன் மகள் காதலனோடு காட்டு வழியே சென்றதை எண்ணி தாய் ஏங்குகிறாள். கடும் பசியோடு புலிகள் பதுங்கி இருக்கும் அந்த காட்டுப் பாதையில் எப்படி அவள் போனாளோ என்று பதை பதைக்கிறது அவள் இதயம், இதை எழுதி முடிக்கும் போதும் கைபேசியைப் பார்க்கிறேன் லானாவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

    Original price was: ₨ 1,100.0.Current price is: ₨ 1,000.0.
    Add to cart
  • -11%

    அத்தாட்சிகள் (4 பாகங்கள்)

    0
    Original price was: ₨ 14,000.0.Current price is: ₨ 12,500.0.
    Add to cart
  • -12%

    அந்தோன் செகாவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்.

    0

    அந்தோன் செகாவின் கதைகளைப் படிக்கையில், கூதிர்ப்பருவத்தின் கடைப் பகுதியில் சோகமான ‘நாளுக்குரிய உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன – காற்று தெளிந்து, இலையற்றகிளைகளை விரித்து நிற்கும் மரங்களது கூர்மையான உருவரை பளிச்செனத் தெரிகிறது. வீடுகள் ஒடுங்கிக்கொண்டு மனிதர்கள் சோர்ந்து ! போயிருக்கிறார்கள், தனிமையால் வாட்டமடைந்து, சலனமற்று, சக்தியிழந்து யாவும் விசித்திரமாய் இருக்கின்றன. ஆழமான நீலத் தொலைவுகள்வெறுமையாய் இருக்கின்றன, வெளிறிய வானத்துடன் கலந்து குளிரில் கெட்டியான சேறு மூடிய நிலத்தின் மீது அவை சோர்வு தரும் குளிர்மூச்சு விடுகின்றன. ஆனால் கூதிர் காலத்து வெயிலைப் போல் கதாசிரியரது சிந்தையானது – தடங்கள் பதிந்த பாதைகள் மீதும், கோணலான தெருக்கள் மீதும், சேறு படிந்த நெரிசலான வீடுகள்மீதும் திகழொளி வீசிக் காட்டுகிறது.

    Original price was: ₨ 2,200.0.Current price is: ₨ 1,947.0.
    Add to cart
  • -9%

    அபிவிருத்தியின் சமூகவியல்.

    0
    1. நவீனமாதல் கோட்பாடு.
    2. ⁠லத்தீன் அமெரிக்க அமைப்பியல் வாதம்.
    3. ⁠சார்பு கோட்பாடு.
    நூலில் எல்லாமாக எட்டுக் கட்டுரைகள் உள்ளன.
    நூலின் இருதி இருகட்டுரைகள் அபிவிருத்தியின் மாற்று சிந்தனைகளை விளக்குவன. மேற்குறித்த மூன்று வகைச் செய்நெறிகளில் இருந்து வேறுபட்ட சிந்தனைகளைக் கூறுவன.
    Original price was: ₨ 330.0.Current price is: ₨ 300.0.
    Add to cart
  • -9%

    அம்பேத்கர் கடிதங்கள்.

    0

    அம்பேத்கரின் நேர்மையை, சமூக நீதிக்கான இச்சையை, மனிதர்களைப் படிக்கும் கலையை, அறம்கொண்ட சமூகக் கட்டமைப்பின் மீதான விருப்பை, புலமையை, விவேகத்தை, மனிதநேயச் சமயக் கொள்கையை, எல்லாவற்றிற்கும் மேலாக எளிமையான மனிதர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம் இவ்வுலகை மறுகட்டமைப்புச் செய்யும் அவரது நோக்கத்தை இக்கடிதங்களில் காண முடியும். தீவிரச் செயல்பாட்டில் ஈடுபடும் வலிமையின் இதயம் கொண்டவரை, ஒடுக்கப்பட்டோரின் விடுதலை வேண்டுபவரை, மாயைகளை உடைப்பவரை, நகைச்சுவை உணர்வும் பகடியும் கைவரப்பெற்ற மனிதரைக் காணமுடியும் இத்தொகுப்பில்.

    Original price was: ₨ 2,725.0.Current price is: ₨ 2,475.0.
    Add to cart
  • -1%

    அம்மா வந்தாள்.

    0

    ‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர்களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.

    Original price was: ₨ 1,165.0.Current price is: ₨ 1,150.0.
    Add to cart