இந்த நாவல் வெறும் கற்பனைகளின் வசனங்களல்ல. அனுபவத்தின் வெளிப்பாடு. உயிர்களுக்கு வலி வரும்போது அது எங்கிருந்து வருகிறது அல்லது எப் படி வருகிறது என்பதனைத் தெரியாதிருப்பது கொடிய துன்பம். இந்த உலகத்தில் பல ஆயிரக்கணக்கானவர்கள் பலவித வலிகளுடன் வாழ்கிறார்கள். உடல் வலி , உளவலி போன்ற வலிகளோடு தம் வாழ்நாளைக் கழித்துவரும் ஆண்களும் பெண்களும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
எவ்வளவோ உயரத்திற்கு வளர்ந்துவிட்ட விஞ்ஞானத்தினால் கூட அணுக முடியாத வலிகள் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதும் இந்த அனுபவ நாவல் ஒரு நோக் காகும். அதே நேரம் சமூகம் எப்படி இந்த வலிகளைக் கையாளுகிறது என்பதை வெளிக்காட்டவும் இந்நாவல் உதவி புரிகின்றது.