Description
ஒரு பத்தாண்டு காலம் ஜீவாவுடன் தோளோடு தோள் நின்று தோழமையின் முகம் கண்ட தா.பாண்டியன், இவ்வளவு காலம் கழித்து எழுதுகிறாரே என்ற ஆதங்கம் நூலைத் தொட்ட நொடியில் விலகிப் போனது. ஒவ்வொரு வரியிலும் அந்த மாமனிதரின் சுவாசக் காற்று உயிராய் உலவுகின்றது. ஜீவாவின் அர்த்த கம்பீரம் நிறைந்த வாழ்வின் இறுதி அத்தியாயங்களை அழியாச் சித்திரங்களாக வரையும் அதே நேரத்தில் தா.பாண்டியனின் அரசியல் களப் பிரவேசச் சுயசரிதையும், பொதுவுடைமை இயக்கத்தின் கள வரலாறும், கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இணை நதிகளாகக் கலந்துகொள்ளும் சிறப்பும் இந்த நூலுக்கு வண்ணமும் வடிவமும் நல்குகின்றன.
-கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்







Reviews
There are no reviews yet.