Description
மு. பாலசுப்பிரமணியம் அவர்களின் இரு மகன்களான சுதர்சன், பால சபேசன் ஆகிய இருவரும் இலங்கை – புகலிடத்தின் கலை, இலக்கியம், புத்தக வாசிப்பு, பதிப்புத் துறையில் அக்கறையும் ஈடுபாடும் கொண்டவர்கள். இத்தகைய ஈடுபாட்டிற்கான அடித்தளமே தங்களது தந்தைதான் என்பார்கள்.
அமரர் மு. பாலசுப்பிரமணியம் வாசிப்பதற்கும், சமூகவியல், அறிவியல், பண்பாட்டுத்துறை சார்ந்த ஈடுபாட்டிற்கும் அர்ப்பணமான பங்களிப்புக்கும் ஏற்ற வகையில் தம் பிள்ளைகளை உருவாக்கி உள்ளார். அதன் பெறுபேறுதான் இந்த வரலாற்றுப் பங்களிப்பாகும். அவரின் இரு புதல்வர்களும் இலக்கிய வாசிப்பும், புத்தக நேசிப்புக்குமான அடிப்படையில், பதிப்பாளர் பெளசருடன் இணைந்து தமிழ் படைப்புச் சூழலை வளப்படுத்தவே இந்த சிறுகதைப் போட்டியை முன்னெடுத்தார்கள்.
நவீன தமிழ் படைப்பு முன்னோக்கிய எட்டுக்களை வைத்து விட்டது. ஈழத் தமிழ் படைப்புத் தளத்தில் இளம் தலைமுறையினரின் ஈடுபாடும், தேடலும், வாசிப்பும் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஒரு மாற்றம் அவசியமானது, அதற்கான களங்களும் நமது ஈழத்தமிழ் படைப்பு வெளியில் திறக்கப்படல் வேண்டும்







Reviews
There are no reviews yet.