Description
இலங்கையைச் சேர்ந்த சிங்களக் கவிஞரும், எழுத்தாளருமான போதினி சமரதுங்க இலங்கையின் வடக்கு உள்ளிட்ட பெரும்பாலான பிரதேசங்களில் பல தசாப்த காலமாக அரசு மருத்துவமனை மருத்துவராகப் பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டிருப்பவர். தற்போது மருத்துவத்தில் முதுகலைப் படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
தனது வலைப்பதிவுகள், அச்சு ஊடகக் கட்டுரைகள், நூல்கள் மற்றும் விரிவுரைகள் மூலமாக சமூகத்திலுள்ள முக்கிய பிரச்சினைகள், நோய்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் போன்ற முக்கியமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் மேற்கொண்டு வரும் அவர் இதுவரையில் கவிதைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு ஆகியவற்றை வெளியிட்டிருக்கிறார்.







Reviews
There are no reviews yet.