Description
-ஆ.சிவசுப்பிரமணியன்
சமயத்தின் முந்தைய வடிவங்களில் ஒன்று மந்திரம். மந்திரத்துடன் நெருக்கமான தொடர்புடையதாகச் சடங்குகள் சில உருவாகின , வேட்டைச் சமூகத்தில் தொடங்கி வேளாண் சமுகம்வரை மந்திரச் சடங்குகள் உருப்பெற்று வளர்ந்தன. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த சமூகங்களிலும் இவை முற்றிலும் மறைந்துவிடவில்லை .
மனிதச் சமூக வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ள மந்திரமும் மந்திரச் சடங்குகளும் தமிழ்ச் சமூகத்திலும் தோன்றி வளர்ந்து மாறுதல்களை ஏற்று நிலைத்துள்ளன. இது குறித்து மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல் என்ற இரு அறிவுத் துறைகளின் துணையுடன் ஆழமான கள ஆய்வின் அடிப்படையில் இந்நூல் ஆராய்கிறது.







Reviews
There are no reviews yet.