Description
-தமிழ் உதயா
ஈரம் ததும்பி நிற்கும் சொற்களும், சொற்களில் வரைந்த காட்சிப் படிமங்களும் காட்சிப்படிமங்கள் உணர்த்தும் அனுபவச் சுழல்களும், அனுபவச்சுழலில் உழலும் உணர்வெழுச்சிகளும் தமிழ் உதயாவின் கவிதைகளை வாசிக்கும் யாவரையும் மனங்கொள வைக்கின்றன. கவிதை காலத்தின் வழியே தமிழ் உதயாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.
புலம்பெயர் மக்களின் மனதை அணுக்கமாகச் சொல்ல, அவர்களது வாழ்வின் அடர்த்தியை ஓவியமாய் வரைந்து காண்பிக்க, ஆர்ப்பரிக்கும் கடலலையின் அமைதியில் கால் நனைத்து ஆழ்கடலின் ஆர்ப்பரிப்பையும் பாடுகிற சங்கின் பாடல்களாக, இழந்த கனவுகளின் வண்ணத்தை தன் சொற்களுக்கேற்றி அதை மானுட வரைபடத்தில் வரைந்து கொண்டேயிருக்கிற தமிழ் உதயா தமிழின் முக்கியக் கவிஞர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.
-எழுத்தாளர் உதயசங்கர்







Reviews
There are no reviews yet.