Description
ஆசிரியர் பற்றி..
கா. ரபீக் ராஜா
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர். அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் தனது இளங்கலை படிப்பை முடித்தார். வளர்ந்து வரும் எழுத்தாளர். இவரது எழுத்துக்கள் காமதேனு, சொல்வனம், கீற்று, திண்ணை, வாசகசாலை போன்ற மின்னிதழ்களில் கட்டுரைகளாகவும் கதைகளாகவும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்.
எப்படிப்பட்ட சோகமான சூழல்களையும் எழுத்தில் நகைச்சுவையாகக் கையாள்வது இவரது சிறப்பு. அரசியல் பகடி, வாழ்வியல் நகைச்சுவை, சினிமா விமர்சனம் போன்ற சமூக வலைதளப் பதிவுகள் ஜனரஞ்சகமானவை. சமீபத்தில் இவர் எழுதிய ‘ஒரு எளியவனின் குறிப்புகள்’ புத்தகம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அடுத்த படைப்பாக தன் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.







Reviews
There are no reviews yet.