Description
இத்தொகுப்பு எனது நீண்ட கவிதைப் பயணத்தின் ஒரு வரலாற்றுப் பதிவு. பல ரகமான கவிதைகளைக் கொண்டது. அவற்றுள் நல்லவையும் உண்டு, நலிந்தவையும் உண்டு. ஆனால், பிற்போக்குத் தனமானவை, சமூக முன்னேற்றத்துக்கு எதிரானவை என்று எதுவும் இல்லை என்று நம்புகின்றேன்.இன்று இருப்பதைவிட மனிதர்கள் நிம்மதியாக மகிழ்வுடன் வாழக்கூடிய ஒரு உலகத்தை, மோதலும் முரண்பாடுகளும் வன்மமும் போரும் அற்ற ஒரு உலகத்தை, நேர்மையும் அன்பும் கருணையும்மிக்க ஒரு உலகத்தைத்தான் நான் கனவு காண்கிறேன்.
அந்தக் கனவும் எதிர்பார்ப்பும் எனது பெரும்பாலான கவிதைகளில் வெளிப்படுகின்றன என்று நினைக்கின்றேன். அந்தக் கனவையும் எதிர்பார்ப்பையும் இக்கவிதைகள் வாசகரிடத்தும் கொண்டு செல்லுமாயின் நான் திருப்தி அடைவேன். இவற்றை நான் எழுதியமைக்கான பயன் அதுதான்.







Reviews
There are no reviews yet.