Availability: In Stock

ஈழத்தில் தமிழ் இலக்கியம்.

Original price was: ₨ 1,440.0.Current price is: ₨ 1,296.0.

பண்டைக்காலம் முதலே ஈழத் தமிழிலக்கியத்திற்கு என்று தனித்த வரலாறு உண்டு என்பதை வரலாற்றியல் பார்வையில் விளக்குவதுடன், உரை நடை இலக்கியத்தின் வளர்ச்சியானது இலங் கையின் பூர்வீகக் குடிகளான இலங்கைத்தமிழர், இலங்கை இஸ்லாமியத் தமிழர், வெள்ளையர் ஆட்சியில் இந்தியாவிலிருந்து குடியிறக்கம் செய்யப்பட்ட மலையகத் தமிழர் என்ற வேறுபாடுகள் நிலவுவதை வெளிப்படுத்துகிறது. தனித்தன்மை களுடன் அவரவர் வாழ்நிலைமைகளை உள்ளடக்கியதாக ‘மண் வாசனை’ இலக்கியங்களாக அவை அமைந்திருக்கின்றன என்பதை விளக்குகிறது.
இலங்கைத்தமிழ் மக்கள் மலையகம், மட்டக் களப்பு, யாழ்ப்பாணம் என்ற மையப் புள்ளிகளில் புவியியல் பொருளாதார நடவடிக்கைகள்,
சமூக கட்டிறுக்கம் ஆகியவற்றின் ஒருமித்த கண்ணோட்டத்தைப் பெற்றிருக்காத நிலையில் அவற்றை ஒருங்கிணைக்கும் முகமாக “ஈழத் தமிழிலக்கியத்தில் மண்வாசனை” கோஷம் முன் வைக்கக்ப் பட்டிருக்கிறது,
Already sold: 0/1
Categories: ,

Description

கார்திகேசு சிவத்தம்பி.

வளமையான மிக நெடிய வரலாற்றை உள்ளடக்கிய ஈழத்தமிழ் இலக்கியப் பரப்பை விரிவாகவும் ஆழமாகவும் ஆய்ந்தறிந்து எழுதப்பட்டுள்ள இந்நூல் ஈழத்தமிழிலக்கியத்தின் மிகச்சிறந்த ஆவணப் படைப்பாகும்.

மரபார்ந்த இலக்கியப் படைப்புகள், ஈழத்துக் கவிதைப்போக்கு, நாடகங்களின் வகைகள், இலக்கிய விமரிசனம், ஈழத்தில் தலித் இலக்கியத்தின் தன்மை, மார்க்சிய நெறிகள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியப் பாங்குகளையும் இந்நூல் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. ஈழத்தமிழ் இலக்கியத்தை முழுவதுமாக உணர்ந்தறிந்துகொள்ள இந்நூல் பெருந்துணையாய் அமையும் என்பதில் ஐயமில்லை.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஈழத்தில் தமிழ் இலக்கியம்.”

Your email address will not be published. Required fields are marked *