Description
பவா செல்லதுரை,
பவா என நட்போடும் உரிமையோடும் நண்பர்களால் அழைக்கப்படும் பவா.செல்லதுரையின் சிறுகதைகள் பெரும்பாலும் காடுகளையும் மலைப்பகுதிகளையும் கிராமங்களையும் அங்கே வசிக்கிற எளிய மனிதர்களையும் களனாகக்கொண்டவையாக உள்ளன. பச்சை இருளன், பொட்டு இருளன், ஜப்பான் கிழவன், ராஜாம்பாள், தொந்தாலி, பண்டாரி, ரங்கநாயககிக்கிழவி என அவர் தீட்டிக்காட்டும் பல பாத்திரங்கள் முதல் வாசிப்பிலேயே நமக்கும் நெருக்கமானவர்களாக மாறிவிடுகிறார்கள். இவரது சிறுகதைகளில் கோட்டாங்கல் பாறையும் சிங்காரக் குளமும் உயிருள்ள பாத்திரங்களுக்கு இணையான துடிப்போடு சித்தரிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.







Reviews
There are no reviews yet.