Description
‘நான் பயந்து போயிருக்கிறேன். இந்தப் பயத்திற்கு ஒரு வாடை இருக்கிறது. இந்த வாடையின் நிறம் கறுப்பு. படபடவென்று கேட்கும் ஒலி நிறைந்த இடங்களில் என்னால் இந்த வாடையை உணர முடியும். வயது முதியவர்களின் மூச்சுக் காற்றில் இந்த வாடை வீசத் தொடங்குகிறது. பின் அவை இந்த இடம், அறை, சனம் நிறைந்த பகுதி, காற்று,வெளி என்று பரவி அசிங்கமாய் மணக்கிறது இந்த உலகம். முக்கியமாக எனது முகக் கண்ணாடியில் இந்த வாடை வீசிக்கொண்டே இருக்கிறது. இந்த அருவருப்பான வாடை எங்கும் வீசுவதால் இப்போதெல்லாம் எனக்கு சுவாசிக்கவே பிடிப்பதில்லை. இந்த உணர்வை அறிந்துகொள்ள முடியாதவர்களாய் நீங்கள் இருக்கிறீர்கள்!’







Reviews
There are no reviews yet.