Description
நவீனத் தமிழில் பெண்ணெழுத்து தீவிரம் பெற்ற கட்டத்தில் முதன்மையாக வெளிப்பட்டவற்றில் ஒன்று சல்மாவின் கவிதை மொழி. தன்னை உணர்ந்த தன் இருப்பை அறிந்த தனது விடுதலையை விழையும் பெண் நிலையைச் சொன்னவை இவரது கவிதைகள்.
படைப்பெல்லைகளுக்கு அப்பால் உள்ள வெளிகளையும் தொடும் வேட்கை கொண்டவை. கூடவே, இதே திசையில் புதிய மொழிதல்கள் அறிமுகமாகவும் இந்தக் கவிதைகள் தூண்டுதலாக அமைந்தவை. கவிதை வாசகர்கள் அருகி வருவதாகச் சொல்லப்படும் தருணத்தில் சல்மாவின் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ தொகுப்பு எட்டாவது பதிப்பைக் காண்பது வரவேற்புக்குரிய ஆபூர்வ நிகழ்வு.







Reviews
There are no reviews yet.