Description
-தஞ்சை ப்ரகாஷ்
ரங்கமணியோ அவன் காதலிக்கும் அந்த பெண்களோ காமத்திற்காக மட்டுமே சோரம் போனவர்கள் இல்லை. “இது அசிங்கமாம் யோக்யர்களின் யோக்ய உலகம் சொல்கிறது.” என ஓரிடத்தில் வருவது போல சோரமெனப் பார்க்கப்படுவதெல்லாம் வாசிப்பவனிடத்தில் தான். பெருமாள் ஸ்டோர்ஸில் எல்லாம் இயல்பாகவே நடக்கிறது. ”ஆம்பளையானாலும் பொம்பளையானாலும் இந்த லோகத்லே யாரும் ஏமாளியில்ல. ஏமாந்து போறது ரெண்டு பேரும்தான்.” யார் மீன்கள்? மீன்களுக்கு சிறகுகளுண்டா? மீன்கள் பறக்குமா? இந்தக் கேள்விகளுக்கு திடமான பதில்களெதையும் நாவல் வலிந்து முன்வைக்கவில்லை. வாசித்து முடித்தபின் அல்லது இந்நாவலை மறந்து கடந்து சென்றபின் வேறு ஏதேனுமொரு கனத்தில் யார் மீனென நாம் புரிந்து கொள்ளக்கூடும். ஏனெனில் மீன் நாமாகவும் இருக்கலாம்.
லஷ்மி சரவணக்குமார்.







Reviews
There are no reviews yet.